கால் கொலுசு புதுசு போல் மாற.....
எலுமிச்சம்பழத்தில் உள்ள சாறு முழுமையாக வரவேண்டும், என்றால் எலுமிச்சம்பழத்தை ஃபோர்க் ஸ்பூனில் குத்தி ,லேசாக அடுப்பில் வாட்டி ,அதன் பிறகு எடுத்து நீங்கள் அழுத்தி பிழிந்தால், எலுமிச்சம் சாறு மிச்சமில்லாமல் பழத்தில் இருந்து, முற்றிலும் வெளியே வந்து விடும்.
பூண்டை ஃப்ரிட்ஜில் வைத்தால் சுவை குறைந்துவிடும். பூண்டையும் பச்சை மிளகாய் போலவே வெளியில் வைத்தாலே போதும்.
தோல் உரிக்காத பட்டாணியை ஒரு துணி பையில் வைத்து. கொதிக்கிற தண்ணீரில் போட்டு பிறகு எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு, பிறகு தோலை எடுத்து அந்த பட்டாணியை ஒரு மூடியுள்ள பாத்திரத்தில் வைத்து பிரிட்ஜில் வைத்து கொண்டால் வெகு நாட்கள் கெடாமல் இருக்கும்.
தயிரை சிறிய டம்ளரில் ஊற்றிக் கால் கொலுசை போட்டு ,இரவு முழுவதும் ஊற விடவும்.மறுநாள் காலையில் தயிரில் ஊற வைத்த கொலுசை எடுத்து பிரஸ் போட்டு நன்கு தேய்க்கவும். தேய்க்கும் போது பல் துலக்கும் பேஸ்ட் சேர்த்து நன்குதேய்க்கவும்.பழைய கால்
கொலுசு புதுசு போல் மாறிவிடும்.
0
Leave a Reply