25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இன்போசிஸ்  பல உச்சங்களைத் தொட விஷால் சிக்காவின் கணிசமான பங்கு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இன்போசிஸ் பல உச்சங்களைத் தொட விஷால் சிக்காவின் கணிசமான பங்கு

இந்திய ஐடி துறையில் மிகவும் பிரபலமானவர் விஷால் சிக்கா. நாட்டின் மிகப் பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸின் முன்னாள் சிஇஓ இவர். உலகம் முழுவதும் தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்க செய்துள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.6,95,000-க்கும் மேல் ஆகும்.நாராயணமூர்த்தியால் நிறுவப்பட்ட இன்போசிஸ் இந்தியாவின் அதிபுத்திசாலிகள் பலரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. அதில் விஷால் சிக்காவும் ஒருவர். 2014 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டுவரை இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் சிஇஓவாகவும் விஷால் சிக்கா பதவி வகித்துள்ளார்.

இன்றைக்கு இன்போசிஸ் பல உச்சங்களைத் தொடுவதற்கு விஷால் சிக்காவும் கணிசமான பங்கை அளித்துள்ளார். 2014 ஆம் ஆண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓவாகவும் நிர்வாக இயக்குநராகவும் விஷால் சிக்கா நியமிக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டு வரை அவர் இன்போசிஸ்க்கு தலைமை வகித்தார். விஷால் சிக்கா தனது பதவிக்காலத்தில் நாட்டிலேயே மிக அதிக சம்பளம் வாங்கும் சிஇஓக்களில் ஒருவராக இருந்தார். அப்போது அவரது சம்பளம் ரூ.48 கோடிக்கும் மேல் ஆகும். இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு விலகிய பின்பு 2019 ஆம் ஆண்டில் ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் கம்பெனியான வியானய் என்ற நிறுவனத்தை தொடங்கி அதில் முழுமூச்சாக விஷால் சிக்கா தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.. சிடிஓ என்ற வீதத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த டெக்னாலஜி ஆர்க்கிடெக்சர் மற்றும் சாப் நிறுவனத்தின் தயாரிப்பு உத்திகளுக்கும் பொறுப்பாக இருந்தார்.

இன்னும் விஷால் சிக்காவைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் சாப் நிறுவனத்தின் மிக முக்கியமான இன்-மெமரி டேட்டா பிளாட்பார்மான SAP HANA-வை உருவாக்கியப் பெருமை இவருக்கு உண்டு. சாப் நிறுவன வரலாற்றிலேயே மிக அதிகமாக விற்று வரும் பிளாட்பார்ம் இது. விஷால் சிக்கா தற்போது ஆரக்கிளின் இயக்குநர்கள் குழுவிலும், பிஎம்டபிள்யூ குரூப்பின் மேற்பார்வைக் குழுவிலும், ஸ்டான்போர்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹ்யுமன் சென்டர்டு ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் நிறுவனத்தின் ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். அத்துடன் அவரது வியானய் நிறுவனம் சான்பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்டார்ட்அப் ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங் தொடர்பான சாப்ட்வேர் சர்வீஸ்களை செய்து வருகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News