விண்கல்லில் தண்ணீர்
பூமியில் இருந்து8.2 கோடி கி.மீ., துாரத்தில் உள்ள'பென்னு' விண்கல்லின் பாறை, மண் மாதிரியை'ஆசி ரிஸ்ரெக்ஸ்' விண்கலம் மூலம் பூமிக்கு சமீபத்தில்'நாசா' கொண்டு வந்தது. இதன் துவக்க கட்ட ஆய்வில், இதில் கார்பன், தண்ணீர் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். தண்ணீர் என்பது அதிலுள்ள கனிமங்களில் கலந்துள்ளது. கொண்டு வரப்பட்ட விண்கல்லின் மண் மாதிரியை, விஞ்ஞானிகள் முழுமையாக திறக்கவில்லை. வெளிப்பகுதி மாதிரியை மட்டும் தற்போது ஆய்வு செய்தனர். மாதிரியை முழுமையாக ஆய்வு செய்யும் போது, புதியதகவல் வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.
0
Leave a Reply