பூமியில் விழுந்த விண்கல் யாருக்குச் சொந்தம்?
ஸ்வீடனில் விண்வெளியில் இருந்து விழுந்த அரிய விண்கல் தொடர்பான சட்டப் போராட்டத்தில், நில உரிமையாளருக்கு ஆதரவான முடிவு குழப்பத்தை அதிகரிக்கிறது.ஸ்வீடனில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு,2020 நவம்பரில் விண்வெளியில் இருந்து விழுந்த விண்கல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த இரும்பு விண்கல் தனியார் நிலத்தில் மீது விழுந்தது. அங்கு தான் ஒரு சிக்கல் உண்டானது.ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் விழுந்த இந்த விண்கல்லின் உரிமையாளர் யார் என்பது குறித்து நீதிமன்றத்தில் போராட்டம் வெடித்துள்ளது.
விண்கற்களை கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் பகுதியில் உள்ள பல கமெராக்கள் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நீண்ட நீதிமன்றப் போராட்டம் தொடங்கியது.இந்நிலையில், வியாழன் அன்று இந்த வழக்கு மற்றொரு திருப்பத்தை எடுத்தது.விஞ்ஞானிகளுக்கு ஆதரவான முந்தைய தீர்ப்பை ரத்து செய்த, நீதிமன்றம் நில உரிமையாளருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
இதனால், இப்போது புவியியலாளர்கள் இந்த வழக்கை ஸ்வீடனின் உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதா இல்லையா என்பதை முடிவு செய்வார்கள்.விண்கல் விழுந்த சில நாட்களுக்குப் பிறகு, புவியியலாளர் ஆண்டர்ஸ் ஜெட்டர்கிவிஸ்ட் அது முதல் முறையாக விழுந்த இடத்தைக் கண்டுபிடித்தார்.நீண்ட தேடுதலுக்குப் பிறகு, இந்த 30 பவுன் துண்டு பாசியில் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
0
Leave a Reply