25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


”மக்களுடன் முதல்வர்”  என்ற திட்டத்தின் கீழ்,19.07.2024   விருதுநகர், இராஜபாளையம், திருச்சுழி மற்றும்  வெம்பக்கோட்டை ஆகிய வட்டாரங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

”மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தின் கீழ்,19.07.2024 விருதுநகர், இராஜபாளையம், திருச்சுழி மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய வட்டாரங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,” கள ஆய்வில் முதலமைச்சர் “ என்ற முன்னெடுப்பின் கீழ், பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்வு காண  அறிவுறுத்தி வருகிறார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மேற்படி முன்னெடுப்பின் நீட்சியாக அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் நிருவாகத்தில் மற்றுமொரு மைல் கல்லாக ”மக்களுடன் முதல்வர்” திட்டம் முதல்வரின் முகவரித்துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதற்காக, 15 அரசுத்துறைகள் சார்ந்த 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது 440 கிராம ஊராட்சிகளில் 65 முகாம்கள் 11.07.2024 முதல் 14.08.2024 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 19.07.2024 அன்று விருதுநகர், இராஜபாளையம், திருச்சுழி மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய வட்டாரங்களில் கீழ்க்கண்ட ஊராட்சிகளில் நடைபெற உள்ளது.

வ.எண் வட்டாரம்

1. விருதுநகர்

முகாம் நடைபெறும் இடம்
கூரைக்குண்டு இராஜரத்தினம் மஹால்

முகாமில் கலந்து கொள்ளும் ஊராட்சிகள்
1. அழகாபுரி
2. மீசலூர்
3. தாதம்பட்டி
4. கூரைக்குண்டு
5. இனாம்ரெட்டியபட்டி

வட்டாரம் 2. திருச்சுழி

முகாம் நடைபெறும் இடம்
மிதிலைக்குளம் முக்குளத்தூர் துவக்கப்பள்ளி, மிதிலைக்குளம்

முகாமில் கலந்து கொள்ளும் ஊராட்சிகள்
1. மிதிலைக்குளம்
2. குச்சம்பட்டி
3. பண்ணைமூன்றடைப்பு
4. பள்ளிமடம்
5. சென்னிலைக்குடி
6. புலிக்குறிச்சி
7. உடையனாம்பட்டி
8. விடத்தக்குளம்

வட்டாரம் 3. இராஜபாளையம்

முகாம் நடைபெறும் இடம்
தெற்கு வெங்கநல்லூர், M.A. சுப்புராஜ், கோமதியம்மாள் திருமணமண்டபம், வேட்டைப் பெருமாள் கோவில் வளாகம் அருகில்

முகாமில் கலந்து கொள்ளும் ஊராட்சிகள்
தெற்கு வெங்காநல்லூர்

வட்டாரம் 4. வெம்பக்கோட்டை

முகாம் நடைபெறும் இடம்
ஆலங்குளம் பி.டி.பி.திருமண மண்டபம், ஆலங்குளம்

முகாமில் கலந்து கொள்ளும் ஊராட்சிகள்
1. ஆலங்குளம்
2. அ.லட்சுமியாபுரம்
3. டி.கரிசல்குளம்
4. வலையப்பட்டி
5. முத்துசாமிபுரம்

மேலும், இணைய வழி விண்ணப்ப முறை (Department Online Portal) எனில் சம்பந்தப்பட்ட துறைகள் முகாமிலேயே விண்ணப்பத்தினை இணைய வழியில் பதிவேற்றம் செய்திட அனைத்து முகாம்களிலும் இ சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. அங்கு மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு 50 சதவீத கட்டணம் மட்டுமே பெறப்படும்.

மேலும், இதுகுறித்த விபரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஐ பிரிவு, தொலைபேசி எண் 04562-252742, விருதுநகரில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News