25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வெண்டைக்காய் சாகுபடி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெண்டைக்காய் சாகுபடி

குழந்தைகளுக்கு வெண்டைக்காய் சார்ந்த உணவுகளை அதிக அளவில் பெற்றோர் வழங்குகின்றனர்.சைவ உணவுகளை விரும்பி சாப்பிடும் பலரின் உணவு பட்டியலில் முதலாவதாக இருப்பது வெண்டைக்காய். வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கால்சியம், புரதம், அயன், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது. ஊட்டச்சத்துக்கள். தோட்டக்கலை பயிரான வெண்டைக்காய் விவசாயத்தில் பெருமளவில் லாபம் கிடைப்பதாக திருவாரூர் விவசாயி தெரிவிக்கிறார்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்டம் சிமிழி கிராமத்தை சேர்ந்த விவசாயி கூறுகையில்,“பல ஆண்டுகளாக தோட்டக்கலை பயிர்களான கத்திரி, வெண்டை சோளம், உள்ளிட்டவைகளை கோடை கால பயிர்களாக பயிரிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளோம். இதனால் இந்த ஆண்டு கலை வெட்டுதல், உரம் வைத்தல் உள்ளிட்டவையோடு சுமார்20,000 ரூபாய் செலவில் காய்கறிகள் சாகுபடி செய்திருக்கிறேன்.

சுமார்40,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.3 மாத காலம் மட்டுமே பயிர் சாகுபடி செய்யப்படும். நேரடியாக நானே சென்று விற்பனை செய்து வருகிறேன்.குறைந்தஅளவுபயிரிடப்பட்டுள்ளதால் பராமரிப்பு பணியை நானே மேற்கொண்டு வருகிறேன். வெண்டைக்காய் அறுவடை காலமானது 30 முதல் 40 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகி விடும்.

நல்ல வளமானதாகவும், பசுமையானதாகவும் இருக்கும். அதேபோல் அதிகளவிலான உரங்கள் பூச்சிக்கொல்லிமருந்துகள்பயன்படுத்துவதில்லை. டிஏபி,யூரியா, பொட்டாஷ் போன்ற அடி உரங்கள் மட்டும் வைக்கப்பட்டு வாரணைக்கப்படுகிறது. பூச்சி தாக்கத்திலிருந்து பயிர்களை காப்பாற்ற பஞ்சகாவியம் கால்நடைகளின் கோமியம் உள்ளிட்டவைகள் பயன்படுத்தப்படுகிறது.

பூச்சி தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்போது மட்டும் ஏதேனும் ஒரு மருந்து மட்டும்கடைசிநேரங்களில்பயன்படுத்தப்படுகிறது” என அவர் தெரிவித்தார்.வெண்டைக்காய் சாகுபடி முறையான கவனிப்பு இருந்தால், குறைந்த நாட்களிலேயே பெருமளவில் லாபம் கிடைப்பதாக திருவாரூர் விவசாயி தெரிவிக்கிறார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News