2-வது முறையாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் , தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு 8 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 3 ஆண்டு தடையை அனுபவித்ததமிழகத்தின் முன்னணி ஓட்டப்பந்தய வீராங்கனை எஸ்.தனலட்சுமி ,கடந்து ஆண்டு மறுபிரவேசம் செய்த அவர் ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்த 64-வது தேசிய தடகளத்தில் 100 மீட்டர் ஓட்டத்தில் 11.36 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கம் வென்று கவனத்தை ஈர்த்தார்.
அவரிடம்ரத்தம்மற்றும்சிறுநீர்மாதிரிசேகரிக்கப்பட்டு ஊக்கமருந்துசோதனைநடத்தியபோதுடிரோஸ்டானோலான்என்றஊக்கமருந்தைபயன்படுத்தியதுகண்டறியப்பட்டது. இதையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்டார். தேசிய ஊக்கமருந்துதடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கைகமிட்டிவிசாரித்தது. 2-வது முறையாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் அவருக்கு 8 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது
0
Leave a Reply