25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


சமையல்

Nov 29, 2025

பாசிப்பருப்பு, கேப்பை தோசை.

தேவையான பொருட்கள் :-பாசிப்பருப்பு -1 கப், கேப்பை மாவு - 1கப், தேவையான அளவு உப்பு.செய்முறை:-பாசிப்பருப்பை1 மணிநேரம் ஊறவைக்கவும். பின் மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொண்டு, கேப்பை மாவைக் கலந்து உப்பு சேர்த்து, 4 மணி நேரம் புளிக்க வைத்து ,தோசை சுடலாம்.உடனே சுட வேண்டும் என்றால் அரை டீஸ்பூன் சோடா உப்பு சேர்த்து சுடலாம்.  காரச் சட்னி, தேங்காய் சட்னி சுவையாக இருக்கும். 

Nov 29, 2025

கொள்ளு தோசை.

தேவையான பொருட்கள் :-கொள்ளு - 250 கிராம், உளுந்து - 125 கிராம், இட்லி அரிசி-250 கிராம், வர மிளகாய் - 6, பெருங்காயத்தூள்- சிறிதளவு, உப்பு -தேவையான அளவு.செய்முறை- கொள்ளு, உளுந்து, இட்லி அரிசி, வர மிளகாய்,இவை அனைத்தையும், உப்பு சேர்க்காமல்5 மணிநேரம் ஊறவைத்து, பின் மிக்ஸியில் நைசாக அரைத்து, உப்பு.பெருங்காயத்தூள் சேர்த்து, 2மணிநேரம் புளிக்கவைத்து தோசை சுடவும். 

Nov 29, 2025

கோதுமை ரவை, உளுந்து தோசை.

தேவையான பொருட்கள்:- கோதுமை ரவை -1 கப், உளுந்தம் பருப்பு - அரை கப், லேஸ் அவல் - அரை கப்,  உப்பு - தேவையான அளவு. இவை மூன்றையும், தனித்தனியாக மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 1 மணி நேரம் ஊற வைக்கவும். செய்முறை- உளுந்தை நைஸாக அரைத்துப் பின், கோதுமை ரவை, அவல் சேர்த்து நைசாக அரைக்கவும். பின் உப்பு சேர்த்து, கரைத்து வைத்து 6 மணி நேரம் புளிக்க வைத்து ,பின் தோசை ஊற்றவும். சுவையான தோசை ரெடி.

Nov 29, 2025

சம்பா ரவை, தக்காளி தோசை.

தேவையான பொருட்கள்:-  சம்பா கோதுமை ரவை-1கப்,  தக்காளி -1 (பெரியது), காய்ந்த மிளகாய் - 4, சீரகம் - அரை டீஸ்பூன், இஞ்சி - சிறிதளவு, அரிசி மாவு - அரை டேபிள்ஸ்பூன்,கொத்தமல்லி இலை, கருவேப்பிலை இலை -(பொடியாக நறுக்கியது) சிறிதளவு, உப்பு தேவையான அளவு,செய்முறை: சம்பா கோதுமை ரவை, இஞ்சி அனைத்தையும் கால் மணி நேரம் ஊற வைத்து, நைஸாக அரைக்கவும். பின் அரிசி மாவு, கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, உப்பு சேர்த்து,தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். பின் தோசை சுடலாம். இதற்கு தேங்காய் சட்னி, பொடி சுவையாக இருக்கும். 

Nov 29, 2025

துவரம் பருப்பு தோசை .

தேவையான பொருட்கள் :- துவரம்பருப்பு1 டம்ளர்(கோபுரமாக), புழுங்கல் அரிசி1 டம்ளர்(தலை தட்டி) ,வத்தல்4 காரத்திற்கேற்ப, சீரகம் அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.செய்முறை :- அரிசி, துவரம் பருப்பை நன்றாக கழுவி2 மணி நேரம் ஊறவைக்கவும். பின் மிக்ஸியில் போட்டு அதனுடன் வத்தல், சீரகம், போட்டு நன்றாக நைசாக அரைக்கவும். பெருங்காயத்தூள் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். அரைத்த மாவை உடனே தோசை சுடலாம். இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார் சுவையாக இருக்கும்.

Nov 29, 2025

ஐவ்வரிசி தோசை .

தேவையான பொருட்கள் :- புழுங்கல் அரிசி 2 டம்ளர், ஐவ்வரிசி 1 டம்ளர், தயிரில் ஊறவைக்கவும், உப்பு தேவையான அளவு.செய்முறை :-இரண்டையும் தனித் தனியாக4 மணி நேரம் ஊறவைக்கவும், முதலில்ஐவ்வரிசியை நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பின் அரிசியை தண்ணீர் இல்லாமல் போட்டு, சிறிது, சிறிதாக தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து ஐவ்வரிசியுடன் சேர்த்து, கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். மாவு புளித்து வந்தவுடன் தோசை சுடவும், ஐவ்வரிசி தோசைக்கு தக்காளி, தேங்காய் சட்னி, சுவையாக இருக்கும். 

Nov 22, 2025

.காலிஃபிளவர்  கிரேவி.

தேவையான பொருட்கள் காலிபிளவர் - 1 (சிறு துண்டுகளாக நறுக்கி, வேகவைத்தது),வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது),தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது),இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,பச்சை மிளகாய் - 2-3 (கீறியது),மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் (அல்லது காரத்திற்கு ஏற்ப),மல்லித் தூள் - 1 டீஸ்பூன்,கரம் மசாலா தூள் -  அரை டீஸ்பூன்,சீரகத் தூள் - அரை டீஸ்பூன்,எண்ணெய் - 2-3 டேபிள்ஸ்பூன் ,கடுகு, உளுந்து – தாளிக்க,கறிவேப்பிலை – சிறிதளவு,உப்பு - தேவையான அளவு,கொத்தமல்லி இலைகள் - அலங்கரிக்க செய்முறை காலிபிளவரை சிறு துண்டுகளாக நறுக்கி, வெந்நீரில் சிறிது உப்பு சேர்த்து5-7 நிமிடங்கள் வேகவைத்து, தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து சேர்த்து தாளிக்கவும். பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரைவதக்கவும்.இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.நறுக்கிய தக்காளி சேர்த்து, அது மென்மையாகும் வரை வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.வேகவைத்த காலிபிளவர் துண்டுகளையும், தேவையான அளவு உப்பையும் சேர்த்து மசாலாவுடன் நன்கு கலக்கவும். கிரேவிக்குத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கரம் மசாலா தூள் சேர்த்து, 5-10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.கிரேவி கெட்டியானதும், கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கவும். சுவையான காலிபிளவர் கிரேவி தயார். இதனை சப்பாத்தி, பூரி அல்லது சாதத்துடன் பரிமாறலாம். 

Nov 22, 2025

.காலிஃபிளவர் பக்கோடா:

.காலிஃபிளவர் பக்கோடா:தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் – 1 சிறியது,கடலை மாவு – அரை கப்,அரிசி மாவு – தேவைக்கேற்ப,மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி,மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி,இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி தழை - சிறிதளவுசோள மாவு (விரும்பினால்) - 2 தேக்கரண்டி,உப்பு – தேவைக்கேற்ப,எண்ணெய் - பொரிப்பதற்கு செய்முறை: காலிஃப்ளவரை சிறிய பூக்களாக வெட்டி, வெந்நீரில் 5 நிமிடம் போட்டு, பின்னர் தண்ணீரை வடித்து தனியே வைக்கவும்.ஒரு பெரிய பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு (சேர்ப்பதாக இருந்தால்), மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், இஞ்சி-பூண்டு விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து, பக்கோடா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவு காலிஃப்ளவர் பூக்களில் ஒட்டும்படி இருக்க வேண்டும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.மசாலா கலந்த காலிஃப்ளவர் பூக்களை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.மொறுமொறுப்பான காலிஃப்ளவர் பக்கோடாவை சாஸ் அல்லது சட்னியுடன் பரிமாறவும். குறிப்புகள்: மொறுமொறுப்புக்கு அரிசி மாவு அல்லது சோள மாவு சேர்த்தால் நல்லது.மசாலாவின் அளவை உங்கள் சுவைக்கேற்ப கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.வெங்காயம், மிளகாய் சேர்த்து செய்தால் பக்கோடா இன்னும் சுவையாக இருக்கும். 

Nov 22, 2025

காலிஃபிளவர் பிரியாணி.

தேவையான பொருட்கள்அரிசி: 1 கப் (பாசுமதி),காலிஃபிளவர்: 1 (சின்ன துண்டுகளாக நறுக்கியது),வெங்காயம்: 1 (நீளமாக நறுக்கியது),தக்காளி: 1 (நறுக்கியது),பச்சை மிளகாய்: 2 (கீறியது),இஞ்சி பூண்டு விழுது: 1 தேக்கரண்டி,மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி,,மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,கரம் மசாலா - 1 தேக்கரண்டி,மல்லி தூள் - 1 தேக்கரண்டிநெய் அல்லது எண்ணெய் - 2 தேக்கரண்டி,பட்டை, கிராம்பு, ஏலக்காய் – சிறிதளவு,பிரிஞ்சி இலை – 1,புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு,உப்பு - தேவையான அளவு செய்முறைபாசுமதி அரிசியை நன்கு கழுவி, 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.ஒரு குக்கரில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பின்னர் தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.நறுக்கிய காலிஃபிளவர் துண்டுகளை சேர்த்து மெதுவாக கிளறி, பின்னர் ஊற வைத்த அரிசியை சேர்த்து மெதுவாக கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் (பொதுவாக 1.5 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர்) மற்றும் கொத்தமல்லி, புதினா இலைகள் சேர்த்து குக்கரை மூடி, 1 அல்லது 2 விசில் வரும் வரை சமைக்கவும்.குக்கர் ஆவியான பிறகு, மெதுவாக கிளறி, சூடான காலிஃபிளவர் பிரியாணியை உங்களுக்குப் பிடித்த ராய்தா அல்லது தயிருடன் பரிமாறவும். 

Nov 22, 2025

காலிஃபிளவர் வறுவல்.

தேவையான பொருட்கள்.காலிஃபிளவர் - 1பெரிய வெங்காயம் - 1தக்காளி - 1இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்மிளகாய்த்தூள் - 1-2 டீஸ்பூன் (உங்கள் காரத்திற்கு ஏற்ப)மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்கரம் மசாலா -  அரை டீஸ்பூன்சோம்புத்தூள் - அரை டீஸ்பூன்உப்பு - தேவையான அளவுஎண்ணெய் - வறுப்பதற்கு தேவையான அளவுகறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு செய்முறைகாலிஃபிளவரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, வெந்நீரில் 5 நிமிடங்கள் போட்டு எடுத்து தனியாக வைக்கவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.எண்ணெய் சூடானதும் சோம்பு சேர்த்து தாளிக்கவும்.பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, சோம்புத்தூள் மற்றும் உப்பு சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.அடுப்பை குறைத்து, நறுக்கிய காலிஃபிளவர் துண்டுகளை சேர்த்து, மசாலாவில் நன்கு கலக்கவும்.சிறிது தண்ணீர் தெளித்து, மூடி போட்டு 5-7 நிமிடங்கள் வேக விடவும்.பின்னர் மூடியைத் திறந்து, தண்ணீர் வற்றும் வரை காலிஃபிளவர் நன்கு வறுபடும் வரை வதக்கவும்.கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். 

1 2 ... 19 20 21 22 23 24 25 ... 70 71

AD's



More News