25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


சமையல்

Oct 18, 2025

.பாதுஷா .

தேவையான பொருட்கள் -இரண்டரை கப்  மைதா ,1ஸ்பூன் பேக்கிங் பவுடர்,1/2கப் நெய்,2 கப் சர்க்கரை,1/2ஸ்பூன் ஏலக்காய் தூள்,சிறிதளவு புட் கலர்,பொரிப்பதற்கு எண்ணெய்செய்முறை -முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும் அத்துடன் உருகிய நெய்யையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்நெய் மாவுடன் கலந்தவுடன் கையில் பிடித்து பார்த்தால் நன்றாக பிடிக்க வரவேண்டும் அதுதான் பதம் அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து விரல்களால் பிசைய வேண்டும்.. அழுத்திப் பிசைய கூடாது அழுத்திப் பிசைந்தால் லேயர் லேயராக வராது... எல்லாம் ஒன்றாகக் கலந்தால் போதும் நன்றாக பிசைய வேண்டும் என்பதெல்லாம் இல்லை..பிசைந்த மாவை இரண்டு கைகளாலும் எடுத்து பிளந்து பார்த்தால் உள்ளே லேயர் லேயராக தெரியும் இதுதான் பக்குவம் அதிகமாக பிசைய வேண்டாம்... இதை 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை மூடி போட்டு மூடி வைக்கவும்.. 15 நிமிடம் ஆவதற்குள் நாம் சர்க்கரை பாகு காய்ச்சி அதை லேசாக ஆற வைக்கவும் பாதுஷாவை பொரித்து லேசான சூட்டில் இருக்கும்போது சர்க்கரை பாகில் சேர்த்தால் நன்றாக இருக்கும்.. பாகு அதிக சூடாக இருக்கக் கூடாது..ஒரு பாத்திரத்தில் சர்க்கரை ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரை கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும் அரைப் பதம் தெரியவில்லை என்றால் கரண்டியில் சர்க்கரைப் பாகை தூக்கி ஊற்றினால் கடைசி சொட்டு நன்றாக ஜவ்வு மாதிரி கீழே விழும் அதுதான் பக்குவம்...ஏலக்காய் தூளை சேர்க்கவும்.. நான் இதில் கேசர் கலர் சேர்த்து உள்ளேன்.. இது குங்குமப்பூ சேர்த்தது போல் இருக்கும் உங்களிடம் குங்குமப்பூ இருந்தால் நீங்கள் இந்த கலருக்கு பதிலாக அதை சேர்த்துக் கொள்ளலாம்..இப்போது பாதுஷாவை கையில் எடுத்து லேசாக வட்டமாக உருட்டி வடை போல் தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட வேண்டும்.. எண்ணெய் எப்படி காய வேண்டும் என்றால் பாதுஷாவை அதில் போட்டால் 1,2 பப்பிள்ஸ் தான் மேலே வரவேண்டும் அதிகமாக எண்ணெய் காய்ந்து இருக்க கூடாது..இருபக்கமும் பொன்னிறமாக வெந்தவுடன் சர்க்கரை பாகில் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்கள் ஊற வைத்தால் போதுமானது.. அதற்கு மேல் ஊற வைத்தால் குலோப்ஜாமுன் மாதிரி ஆகிவிடும்..விருப்பப்பட்டால் மேலை பிஸ்தாவும் சில்வர் லீப்பும் வைத்து அலங்கரிக்கலாம்.. இப்போது சுவையான இனிப்பான பாதுஷா தயார்...

Oct 11, 2025

பிஸ்கட் அல்வா.

தேவையான பொருட்கள் :பிஸ்கட் பாக்கெட் - 2பால் - 1/2 லிட்டர்நெய் - 150 கிராம்முந்திரி - 100 கிராம்செய்முறை :முதலில் மில்க் பிஸ்கட்களை வாங்கி அதனை சிறு துண்டுகளாக உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு சாஸ் பான் வைத்து அதில் பால் ஊற்றி, 1 க்ளாஸ் தண்ணீர் ஊற்றி கெட்டியாக மாறும் வரை காய்ச்சிக் கொள்ள வேண்டும். அடுத்தாக அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் நெய் சேர்த்து உருகிய பின்னர் பொடித்து வைத்துள்ள முந்திரியை சேர்க்க வேண்டும்.முந்திரி நன்கு சிவந்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இப்போது கடாயில் இருக்கும் நெய்யினை சிறிது எடுத்து தனியாகஒரு பௌலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கடாயில் இருக்கும் நெய்யில் உடைத்து வைத்துள்ள பிஸ்கட் பீஸ்களை சேர்த்து வதக்கி விட வேண்டும்.பிஸ்கட் வதங்கிய பின் அதில் காய்த்து வைத்துள்ள பாலை ஊற்ற வேண்டும். பால் ஊற்றிய பிறகு, கடாயில் இருக்கும் கலவையை கைவிடாமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும். கட்டிகள் தட்டாதவாறு கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும்.கலவை அல்வா பதத்தில் வந்த பிறகு அதில் எடுத்து வைத்துள்ள நெய் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அவ்ளோதான் நெய்யின் கமகம மணத்தில் பிஸ்கட் அல்வா ரெடி!

Oct 11, 2025

திணை அல்வா.

தேவையான பொருட்கள்-திணைஅரிசி மாவு - 200 கிராம்,வெல்லம் - 200 கிராம்,ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி,சுக்குத்தூள் - 2 சிட்டிகை,முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு - தலா 10 கிராம்,நெய் - 100 கிராம்.செய்முறை-திணைஅரிசி மாவுடன் வெல்லம், தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும்.சட்டியில் சிறிது நெய்யை விட்டு சூடாக்கி, கரைத்து வைத்துள்ள மாவை, சிறிது சிறிதாக விட்டு, நன்றாகக் கிளறவும்.கட்டியாகாமல் பார்த்துக்கொள்ளவும்.இடைவிடாமல் சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.அல்வா, சட்டியில் ஒட்டாமல் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் தூவி இறக்கவும்.இப்போது சூப்பரான சத்தான திணைஅல்வா ரெடி.

Oct 11, 2025

அன்னாசிப்பழ அல்வா.

தேவையானவை: நறுக்கிய அன்னாசிப்பழம்ஒரு கப். சர்க்கரை - ஒன்றரை கப், நெய் அரை கப், கலர் - கால் டீஸ்பூன், முந்திரி, பாதாம்பருப்பு - தேவையான அளவு.செய்முறை: அன்னாசிப்பழத்தை வேகவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அடிகனமான கடாயை சூடாக்கி, அதில் சர்க்கரையைக் கொட்டி ஒட்டும் பதம் வரும்போது, பழ விழுதைக் கொட்டி கிளறவும். அல்வா இறுகி வரும்போது நெய் விட்டு,கலர், முந்திரி, துருவிய பாதாம்பருப்பை சேர்த்து இறக்கவும்.கெட்டியாகவில்லை என்றால்,2 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவை கரைத்து விட்டு கிளறினால் அல்வா பதம் வந்துவிடும்.அன்னாசிப்பழ அல்வா ரெடி.

Oct 11, 2025

சுரைக்காய் அல்வா!

தேவையான பொருட்கள்:சுரைக்காய்- 1சர்க்கரை -500 கிராம்நெய் - 200 கிராம்ஏலக்காய் பொடி,முந்திரி, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:சுரைக்காயை சுத்தம் செய்து தோல், விதை நீக்கி, சிறு துண்டுகளாக்கி அரைக்கவும். வாணலியில் சர்க்கரையை, தண்ணீரில் கலந்து பாகு காய்ச்சவும். அதில் அரைத்த சுரைக்காயை சேர்க்கவும். நன்றாகவெந்ததும், நெய் சேர்த்து கிளறவும். அல்வா பதம் வந்ததும் வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி துாவி இறக்கவும்.சுவை மிக்க, 'சுரைக்காய் அல்வா!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

Oct 11, 2025

பப்பாளி அல்வா!

தேவையான பொருட்கள்:பால் -1 லிட்டர்பப்பாளி பழம் - 1ஆரஞ்சு ஜூஸ்  - 1 கப் சர்க்கரை - 500 கிராம் நெய் - 250 கிராம் முந்திரி,ஏலக்காய் துாள் - தேவையான அளவு செய்முறை:பப்பாளி பழத்தை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் வேக வைக்கவும். அதை விழுதாக அரைத்து,ஆரஞ்சு பழ ஜூஸ் சேர்க்கவும். கடாய் சூடானதும் நெய், சர்க்கரையுடன் அரைத்த விழுதை சேர்த்து கிளறவும். சுருண்டு வரும்போது முந்திரி, ஏலக்காய் துாள் போட்டு இறக்கவும். ஆறிய பின் துண்டுகளாக்கவும்.சுவை மிக்க,'பப்பாளி அல்வா!' தாயார். சத்துகள் நிறைந்தது. அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

Oct 11, 2025

ஆப்பிள் அல்வா.

தேவையானவை: தோல் சீவி நறுக்கிய ஆப்பிள் ஒரு கப் சர்க்கரை -  ஒரு கப், நெய் - அரை கப், பால் கால் கப், கலர் - சிறிதளவு. முந்திரி, திராட்சை தேவையான அளவு.செய்முறை: ஆப்பிளில் பால் விட்டுவேக வைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். கடாயை சூடாக்கி, அதில் சர்க்கரையை போட்டு இளம்பாகு காய்ச்சி, அரைத்த ஆப்பிளை சேர்க்கவும். கலவை இறுகி வந்ததும் நெய் விட்டு, கலர், முந்திரி. திராட்சை சேர்த்து இறக்கவும்.விருப்பப்பட்டால்2 டேபிள்ஸ்பூன் பச்சரிசி மாவு, ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் கலந்து கட்டியில்லாமல் கரைத்து ஊற்றிக் கிளறவும். அல்வா சீக்கிரத்தில் இறுகிவிடும்.சுவையான ஆப்பிள் அல்வா ரெடி.

Oct 04, 2025

பொரி சாலட்.

தேவையான பொருட்கள்-1 கப்பொரி 1/2 தக்காளி பொடியாக வெட்டியது1/2 வெங்காயம் பொடியாக வெட்டியது2டீஸ்பூன்எலுமிச்சை சாறுமிளகு தூள் - சிறிதளவு.செய்முறை -பொரியில் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து கொள்ளவும்.பின்னர்  மிளகு தூள் மற்றும் லெமன் சாறு கலந்து பரிமாறவும்.

Oct 04, 2025

.மசாலா பொரி

தேவையான பொருட்கள் :-1 கப்பொரி1 டேபிள்ஸ்பூன்வெங்காயம்(பொடியாக வெட்டியது)மாங்காய்-1 துண்டு பொடியாக வெட்டியது)வேகவைத்த தோலுரித்த வேர்க்கடலை-1டேபிள் ஸ்பூன்1டேபிள்ஸ்பூன்மிக்சர்1/4 டீஸ்பூன் மிளகாய் தூள்1/2 முடி எலுமிச்சை சாறுகேரட்-1துருவியது.செய்முறை -ஒரு பௌலில் பொரி, வெங்காயம், மாங்காய், கேரட், வேர்க்கடலை, மிளகாய் தூள் போட்டு கிளறவும். எலுமிச்சை சாறு விட்டு பரிமாறவும்.

Oct 04, 2025

பொரி உருண்டை.

தேவையான பொருட்கள்-1 படிபொரி2 கட்டி வெல்லம்ஏலக்காய்2 ஸ்பூன் எள்4 ஸ்பூன் தேங்காய் பல்செய்முறை முதலில் எள்ளை வறுக்கவும். அடுத்து தேங்காய் பல் போட்டு வதக்கவும். அடுத்து பொடித்த வெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லம், கரைந்தவுடன் வடிகட்டவும். பிறகு பாகு காய்ச்சவும். பாகு  பதம் வர வேண்டும், அடுத்து பாகில் பொரி, எள், தேங்காய், ஏலக்காய் போட்டு நன்கு கிளறவும்.பிறகு மிதமான தீயில் வைத்தே உருண்டை பிடிக்கவும். குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான ஸ்னாக்ஸ் ரெடி.

1 2 ... 19 20 21 22 23 24 25 ... 66 67

AD's



More News