கடலைப்பருப்பு கார தோசை.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 1 கப்,கடலை பருப்பு – கால் கப்,துவரம் பருப்பு - கால் கப்,
உளுந்து - 1 ஸ்பூன்,வர மிளகாய் – 5,சின்ன வெங்காயம் – 15,பூண்டு - 7 பல்,
கறிவேப்பிலை – சிறிதளவு,கடுகு – அரை ஸ்பூன்,மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்,
மிளகு - 1 ஸ்பூன்,சீரகம் - 1 ஸ்பூன்,எண்ணெய் - தேவையான அளவு,உப்பு - தேவையான அளவு ,
செய்முறை:
இட்லி அரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த அரிசி, பருப்புடன் வர மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள், மிளகு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கி, எண்ணெய் தடவவும்.
அரைத்த மாவை எடுத்து தோசைக்கல்லில் பரப்பி, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்.இதே முறையில் அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டு எடுக்கவும்.
0
Leave a Reply