தேவையான பொருட்கள் - புழுங்கல் அரிசி 3 கப், உளுந்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன், வெந்தயம் 1 டீஸ்பூன், வெண்டைக்காய் 15, உப்பு தேவையான அளவு.செய்முறை அரிசி, பருப்பு, வெந்தயம், நன்றாகக் கழுவி5 மணி நேரம் ஊறவைக்கவும். வெண்டைக்காய் பொடியாக வெட்டிக் கொள்ளவும். தண்ணீர் வடித்து விட்டு அரிசி கலவை, வெண்டைக்காய், சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். பின் உப்பு சேர்த்து கரைத்து 10 மணி நேரம் மூடி வைக்கவும். பின் தோசை வார்க்கவும், வெண்டைக்காய் தோசை ருசியாக இருக்கும். இதற்கு எள்ளுப் பொடி, எள்ளுச் சட்னி, தேங்காய் சட்னி, சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் - வெண்டைக்காய் 8 எண்ணம், மஞ்சள் பொடி கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, அரைக்க - சின்ன வெங்காயம் 5, பச்சைமிளகாய் 3, சீரகம் அரை டீஸ்பூன், முந்திரி 4 எண்ணம், தேங்காய் கால் கப் துருவியது. இஞ்சி, 2 இன்ச், பொரிகடலை 1 டேபிள் எப்பூன். இவை அனைத்தையும் லேசாக வதக்கி, நைசாக அரைத்துக் கொள்ளவும். தாளிக்க- தேங்காய் எண்ணெய்2 டேபிள் எஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், வத்தல்2 எண்ணம், ஒரு கொத்து கறிவேப்பிலை ,பொடியாக வெட்டிய மல்லி இலை சிறிதளவு, தயிர் அரை கப்.செய்முறை- வெண்டைக்காய்3 இன்ச் அளவிற்கு வெட்டி வைக்கவும். தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு, வத்தல், கறிவேப்பிலை தாளித்து, வெண்டைக்காய் சேர்த்து அடுப்பில் சிம்மில் வைத்து ,வெண்டைக்காயை நன்றாக வேக விடவும். வெண்டைக்காய் வெந்தவுடன், மஞ்சள் பொடி, உப்பு அரைத்த விழுது சேர்க்கவும், பின் தயிரை நன்றாக கடைந்து விட்டு ,இதில் சேர்த்து குழம்பு பக்குவத்திற்கு தண்ணீர் சேர்க்கவும். நுரைத்து வந்தவுடன் மல்லி இலை தூவி இறக்கவும். குழம்பு கொதிக்க கூடாது.
தேவையான பொருட்கள்:வெண்டைக்காய்250 கிராம்,கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு1 தேக்கரண்டி,காய்ந்த மிளகாய்3,தேங்காய் துருவல், புளி- சிறிதளவு,எண்ணெய், உப்பு,கறிவேப்பிலை, தண்ணீர் தேவையான அளவு.செய்முறை:வாணலியில், எண்ணெய் சூடானதும், வெண்டைக்காயை நன்கு வதக்கவும். கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், புளியை தனியாக எண்ணெயில் வறுக்கவும். இவை ஆறியதும் தேங்காய் துருவல், கறிவேப்பிலை, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.சுவைமிக்க, 'வெண்டைக்காய் துவையல்!' தயார். சத்துக்கள் நிறைந்தது. இட்லி, தோசைக்கு, பக்க உணவாக பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள் - வெண்டைக்காய் - அரை கிலோ, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன், கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், கடலை மாவு -2 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு.செய்முறை:வெண்டைக்காயைத் தண்ணீரில் நன்கு கழுவித் துடைக்கவும். ஈரமே இருக்கக்கூடாது. வெண்டைக்காயின்தலைப்பகுதியையும், வால் பகுதியையும் நீக்கிவிட்டு இரண்டாகக் கீறவும் .நடுவில் இருக்கும் விதைகளைக் கூடியமட்டும் நீக்கவும். மேலும் மெல்லிசாக நீளவாக்கில் நறுக்கவும். இப்படியே எல்லா வெண்டைக்காய்களையும் நறுக்கிய பிறகு.மசாலாப் பொருட்கள், கடலை மாவு, அரிசி மாவு. தேவையான உப்பு சேர்த்து நன்கு கைகளால் கலக்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசைந்தால், மசாலாக் கலவை வெண்டைக்காய்களுடன் நன்கு ஒட்டிவிடும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன், வெண்டைக்காய்களை எடுத்துச் சிறிது சிறிதாக உதிர்த்துப் போட்டு வேக வைக்கவும். இருபுறமும் திருப்பிப்போட்டு எடுக்கவும். மொறுமொறுப்பான சுவையான வெண்டைக்காய் வறுவல் ரெடி.
தேவையான பொருட்கள்: - 1/2 கப் வெண்டைக்காய் வற்றல்,1/2கப் சாம்பார் வெங்காயம்,10 பல் பூண்டு,1 தக்காளி,1டீஸ்பூன் மிளகாய் தூள்,1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்,1டேபிள்ஸ்பூன் தனியாத்தூள், 1/2டீஸ்பூன் சீரகத் தூள், 1கப் புளி கரைசல்அரைப்பதற்கு - 1டேபிள்ஸ்பூன் பச்சரிசி, 1/4 டீஸ்பூன் வெந்தயம்,1/4கப் தேங்காய் தாளிக்க - 3டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்,1/4 டீஸ்பூன் கடுகு கறிவேப்பிலை, மிளகாய் வற்றல்செய்முறை - வெண்டைக்காய் வற்றல் குழம்பு செய்ய தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.வாணலியை ஸ்டவ்வில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும், வெண்டைக்காய் வற்றல் சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுத்து வைக்கவும்.பச்சரிசி, தனியா, வெந்தயத்தை வரும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.சூடாறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து, தேங்காய்,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.பின்னர் வாணலியில் எண்ணை சேர்த்து காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.கடுகு பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்கு வதங்கியதும் தனியாத்தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், சேர்த்து நன்கு வதக்கவும்.அத்துடன் வறுத்து வைத்துள்ள வெண்டைக்காய் வற்றலை சேர்க்கவும்.வெண்டைக்காய் வற்றல் ,மசாலா நன்கு வதக்கியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கலந்து மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.குழம்பு நன்கு கொதித்து எண்ணை பிரிந்து வரும் போது கடுகு வற்றல் தாளித்து சேர்த்து, மல்லி இலை தூவி இறக்கவும்.இப்போது தயாரான வெண்டைக்காய் வத்தல் குழம்பை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.இந்த வெண்டைக்காய் வத்தல் குழம்பு மிகவும் அருமையான சுவையில் ,சூடான சாதத்தில் கலந்து சாப்பிட மிக மிக சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் - பச்சரிசி 400 grams , பால் 2 லிட்டர், சீனாகற்கண்டு 1 கிலோ, நெய் ஒன்னே கால் படி, முந்திரிப்பருப்பு 20 எண்ணம், கிஸ்மிஸ்பழம் 1 மேஜைக்கரண்டி, ஏலப்பொடி கால் தேக்கரண்டி, தேங்காய் 1 மூடி,செய்முறைபச்சரிசியை750 மில்லி லிட்டர், தண்ணீரில்(ஒரு பங்கு அரிசிக்கு3 பங்கு தண்ணீர்) போட்டு நன்றாக குழைய வேக விட வேண்டும். பின்2லிட்டர் பாலை ஊற்றி ,நெய்யில் பொரித்த முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ்பழம், வதக்கி தேங்காய்த் துருவலையும் சாதத்துடன் கலந்து பொடி செய்த சீனா கற்கண்டையும் கலந்து, சிறு தணலில் வைத்து அடிபிடிக்காமல் கிளறி ஏலப் பொடி கலந்து இறக்கவும். குறிப்பு- சீனாகற்கண்டிற்குப் பதிலாக 500 grams, சீனியை கலந்து சீனிச் சாதம் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள் - 150கிராம் வெள்ளை கண்டல்1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்தேவையான அளவு உப்பு1 பெரிய வெங்காயம் கட் செய்தது2 பச்சை மிளகாய் கட் செய்தது1/2 டீஸ்பூன் மிளகாய்தூள்1/2 டீஸ்பூன் கறிமசால் தூள்1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 4டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் சிறிதளவு கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை3டேபிள்ஸ்பூன் எண்ணெய்1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு1டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது செய்முறை- சுண்டலை குறைந்தது8மணி நேரம் ஊற வைக்கவும். பின் குக்கரில் போட்டு மஞ்சள்தூள் சேர்த்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, பின் உப்பு சேர்த்து வேக வைத்து வடிகட்டி வைக்கவும்(5விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்)ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், வெங்காயம், கடுகு, உளுத்தம்பருப்பு,தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய் தூள்,1/4 டீஸ்பூன் உப்பு, கறிமசால் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். வேக வைத்த சுண்டலை சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு, காரம் சேர்ந்து நன்கு வதங்கியதும் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். சுவையான மசாலா சுண்டல் ரெடி.
தேவையான பொருட்கள்பச்சைபயறு- 2கப்தேங்காய்துருவல் -அரைகப்கடுகு -கால்ஸ்பூன்உளுந்தம்பருப்பு- அரைஸ்பூன் பெரியவெங்காயம்-1வரமிளகாய்-2கருவேப்பிலை-1கொத்து உப்புத்தூள்-தேவைக்குசமையல் எண்ணெய் தாளிக்கசெய்முறை- முதலில்பச்சை பயறை சுத்தம் பண்ணி வேகவைத்துக்கொள்ளவும். வடிகட்டி உப்புத்தூள் சேர்த்துக் கொள்ளவும். வெங்காயத்தை கட் பண்ணிக் கொள்ளவும்.ஒரு வாணலியில் தாளிக்கிற அளவுக்கு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, வரமிளகாய், கருவேப்பிலை, கட்பண்ணிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.அதிலேயே தேங்காய் துருவல் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். உப்பு சேர்த்த பச்சைப்பயறையும் சேர்த்து ,நன்கு எல்லாம் கலக்கும்படி கலந்துவிடவும். பச்சை பயறு சுண்டல் ரெடி.
தேவையான பொருட்கள்1/2ஸ்பூன் கடுகு1ஸ்பூன் கடலை பருப்பு1ஸ்பூன் உளுத்தம் பருப்பு3 பச்சை மிளகாய்ஒரு கப் காய்ந்த பச்சை பட்டாணி2 வெங்காயம்2 ஸ்பூன் தேங்காய் துருவல்தேவையானஅளவுஉப்புசமையல் எண்ணெய் தாளிக்கசெய்முறை- எண்ணெய் ஊற்றி கடுகு கடலை பருப்பு உளுத்தம் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். சிவந்த பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தூள் உப்பு போட்டு, நன்றாக வதக்கவும்.பச்சை பட்டாணியை ,8 hoursஊறவைத்து குக்கரில் வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வெந்த பட்டாணியை போட்டு கிளறவும். நன்றாக தாளித்த பிறகு, மேலே தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். பச்சை பட்டாணி சுண்டல் ரெடி.
தேவையான பொருட்கள்:வெள்ளை பட்டாணி - 1 கப் (உலர்ந்த ரகம்) மாங்காய் (துருவியது) -1/4 கப் + 1 டீஸ்பூன்தேங்காய் - 1/4 கப்(துருவியது)மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்உப்பு - தேவைக்கேற்பகொத்தமல்லி இலை - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)எலுமிச்சை - அரை பிழிந்தது (விரும்பினால்)எண்ணெய் - 1 டீஸ்பூன்கடுகு -1 தேக்கரண்டிகறிவேப்பிலை - சிறிதளவு (விரும்பினால்) செய்முறை:வெள்ளைப் பட்டாணியை இரவில் அல்லது குறைந்தபட்சம்8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து3 விசில் வரும் அளவிற்கு வேக வைக்கவும். அழுத்தம் வெளியேறும்போது, தண்ணீரில் இருந்து பட்டாணியை வடிகட்டி வைக்கவும்.மாங்காயைத் துருவி, தயாராக வைக்கவும்.வேகவைத்த பட்டாணி, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். பிறகு துருவிய மாங்காய் மற்றும் தேங்காய் சேர்த்து2 முதல்3 நிமிடம் கிளறவும். இறுதியாக, எலுமிச்சையை பிழிந்து, கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும், தீயை அணைக்கவும்.சூடாக இருக்கும் போது பரிமாறவும்.வதக்கிய பிறகு துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். சிறந்த சுவைக்காக நொறுக்கப்பட்ட இஞ்சியை ஒரு தேக்கரண்டி சேர்க்கலாம். இது செரிமானத்திற்கும் உதவுகிறது.உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் எலுமிச்சையை தவிர்க்கலாம்.