25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆரோக்கியம்

Feb 24, 2025

ஜீரண உறுப்புகள் நன்கு செயல்பட பச்சைப் பட்டாணி

பச்சை பட்டாணியில் மாவுச்சத்து, கொழுப்பு, தயாமின், நயாசின், ரைபோஃப்ளேவின், புரதச்சத்து(இறைச்சியிலிருந்து கிடைக்கும் சக்திக்கு ஈடானது), கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி, சி, நார்ச்சத்து,போன்ற ஊட்ட சத்துக்கள் உள்ளன.உடலுக்குச் சக்தியைத் தரும், பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால் மூளைக்குத் தேவைப்படும் ஊட்டத்தைத் தரும், மூளை நோயைத் தடுக்கும்.ஜீரண உறுப்புகள் பலமடையும். குடல் புண்ணை ஆற்றும், வாய் துர்நாற்றமும் நீங்கும், வாய்,நாக்குப் புண் குணமாகும், ஜீரண உறுப்புகள் நன்கு செயல்படும்.கண் பார்வைக்கு வைட்டமின் ஏ இன்றியமையாதது.உடல் வலி, தலைவலி ஆகியவை ஏற்படாமல் இருக்கவும், பல், எலும்பு முதலியவை உறுதியுடன் இருக்கவும் இதிலுள்ள வைட்டமின் சி பயன்படுகிறது.நுரையீரல் நோய் குணமடையும், நுரையீரலுக்கும் இதயத்துக்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது, இதயம், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது.மருந்துபோல இதைத் தினமும் ஒரு கைப்பிடி அளவுபிறகாய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுங்கள்.

Feb 23, 2025

வயிற்றில் இருக்கும் நாள்ப்பட்ட கழிவுகளை வெளியேற்றி வயிற்றை சுத்தம் செய்ய …

வயிற்றை சுத்தம் செய்ய இதை மட்டும் செய்தால் போதும். அதற்கு, காலையில் வெறும் வயிற்றில், சோறு வடித்த கஞ்சி சூடாக ஒரு டம்ளர், அதில் ஒரு டம்ளர் நல்ல புளித்த மோர், கொஞ்சம் அதிகமாக உப்பு சேர்த்து நல்ல கலந்து, சூடாக, குடித்தால் அடுத்து ஒரு மணி நேரத்தில் வயிறு நல்ல சுத்தமாகி விடும். இப்படி மூன்று மாதம் ஒரு முறை செய்யலாம். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Feb 23, 2025

ஆரோக்கிய வாழ்வுக்கு ,

உணவு வயிற்றுக்கு, உறக்கம் மனதுக்கு, உழைப்பு பணத்துக்கு, உதவி சேவைக்கு,உத்தரவு பதவிக்கு ,உறவு குழப்பத்துக்கு,உயர்வு பெருமைக்கு ,உடை மானத்துக்கு ,உள்ளம் எண்ணத்துக்கு, உயிர் வாழ்வுக்கு ,உரிமை பாசத்துக்கு….

Feb 21, 2025

சத்துக்கள் நிறைந்த  முட்டை

பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்ட, குறைந்த விலையில் எளிதாக கிடைக்கும் ஒரு உணவுப்பொருள் என்றால் அது கோழி முட்டை மட்டுமே.தசைகளின்இயக்கத்திற்கு,மூளையின்செயல்பாட்டிற்கு,கண்களின்பார்வைக்கு,இதயத்தின் சீரான இயக்கத்திற்கு என்று ஒட்டுமொத்த உடலின் சீரான செய்ல்பாட்டுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் சீரான அளவில் கோழி முட்டை கொண்டுள்ளது.கால்சியம், வைட்டமின்ஏ, பி1, தையமின், வைட்டமின்பி2எனும்ரிபோப்ளேவின், குரோமியம், நியாசின், செம்பு, வைட்டமின்பி 5 எனும்பாந்தோயோனிக்அமிலம், இரும்பு, மெக்னீசியம்,மாங்கனீசு, பயோட்டின், மாலிப்டினம், போலேட், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம். துத்தநாகம், கோலின், ஒமேகா உள்பட பல்வேறு சத்துகள் முட்டையில் உள்ளன. ஊட்டச்சத்து நிபுணர்கள்,முட்டை என்பது உயர்தரபுரதம், அத்தியாவசிய கொழுப்புகள், உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கொண்ட முட்டையை, தினமும் உட்கொள்ளும் போது சத்துக்குறை பாட்டால் ஏற்படும் பல உடல் பாதிப்புகளை தடுக்கலாம் என்கிறார்கள்.

Feb 19, 2025

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் செவ்வாழை

செவ்வாழைப்பழத்தில் மற்ற பழங்களை விட குறைவான கலோரி அளவு கொண்டுள்ளது. இதில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது.   செவ்வாழைப்பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கும்.   செவ்வாழைப் பழம் சருமத்தில் உள்ள குருதி சுற்று இயக்கத்தை மேம்படுத்துகிறது. இதில் 75% நீர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் உள்ளதால், சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்க உதவுகிறது.   செவ்வாழைப் பழத்தில் உள்ள வைட்டமின் B6, ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.   தலைமுடியில் உள்ள பொடுகு மற்றும் வறட்சி குறைய, செவ்வாழைப் பழத்தை தேங்காய், எள் அல்லது பாதாம் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தேய்க்கலாம்.  ஏராளமான நன்மைகள் இருக்கும் நிலையில் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடலாம்.  

Feb 18, 2025

உடல் எடையை குறைக்கும் பேரிக்காய்.

பேரிக்காயில் ஏராளமான நார்ச்சத்து இருப்பதால்,ஏழைகளின் ஆப்பிள் என்று கூறப்படுகிறது.அதனை தினமும் சாப்பிட்டு வருபவர்களுக்கு பல வைட்டமின் சத்துக்கள் கிடைக்கும் .ஒரு பேரிக்காயில்6 கிராம் நார்ச்சத்து இருப்பதால், ஒரு பெண்ணுக்கு தேவைப்படும் சராசரி நார்ச்சத்து அளவில்24 சதவீதம் ஒரு பேரிக்காய் சாப்பிடுவதன் மூலம் பூர்த்தியாகிவிடும் என்று கூறப்படுகிறது.பேரிக்காய் போன்ற குறைந்த கலோரிகள் கொண்ட உணவை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடை சீக்கிரம் குறையும் என்றும் , பேரிக்காயில்84 சதவீதம் நீர் உள்ளதால்,உடலுக்கு தேவையான அளவுநீர்ச்சத்து கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.பேரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது, ஆரோக்கியமான உடல் மற்றும் நல்ல செரிமான அமைப்பு ஏற்படும்.

Feb 17, 2025

மூலநோய் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள்

மூலநோய் குணமாக என்னென்ன உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் மற்றும் முன்னோர்கள் கூறியது . துத்திக் கீரையுடன், சின்ன வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசியவைத்து உண்ணலாம்.  கருணைக் கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி, புளி சேர்த்து குழம்பாக வாரம் இருமுறை பயன்படுத்தி வரலாம்.  பிரண்டைத் தண்டை துவையல், சூப்பாக செய்து பயன்படுத்தலாம்.  முள்ளங்கிக்காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பீன்ஸ், கீரைகள், கோவைக்காய் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  கிழங்கு வகைகள், காரமான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். உடல்சூடு குறைய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.தினமும் 6-7 மணிநேரம் தொடர்ச்சியாக தூங்க வேண்டும். வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும்.  கோழிக்கறி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இளநீர், தர்பூசணி சாறு, முலாம் பழச்சாறு, மோர் இவைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  நார்ச்சத்து நிறைந்த ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யாப் பழம் மற்றும் வாழைப்பழம் உண்ண வேண்டும். 

Feb 03, 2025

பீர்கங்காய்

இருமல் சளி தலைவலி போன்ற உபாதைகள் இருந்தால், இதனை சாப்பிடக்கூடாது காரணம் தலையில் நீர் கோத்துக் கொள்ளும். இதில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த காய் என்பதால் வாங்கிய உடனே ,சமைத்து சாப்பிடுவது நல்லது, அதிகபட்சம் மூன்று நாட்களுக்குள் உபயோகித்து விட வேண்டும். இதை வாங்கும்போது தோல்களில் வெடிப்பு அல்லது நிறம் மாறிப் போயிருந்தால் வாங்க வேண்டாம். இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலுக்கும் மூல நோய்க்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் வயிற்றில் அமில சுரப்பு ,அதிகமாவதை தடுக்கும் மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். தோல் சம்பந்தமான அனைத்து கோளாறுகளுக்கும் ,நல்ல தீர்வை கொடுக்கக் கூடியது. சிறுநீரக கோளாறுகளுக்கு, நன்கு முற்றிய பீர்கங்காயை பயன்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் வைட்டமின்கள், தோல்  நோய்களையும் மற்றும் நீரழிவு நோய்களையும் குணப்படுத்துவதில் உதவுகின்றன. இதனை யாரும் இரவில் சாப்பிடக்கூடாது.

Jan 31, 2025

சுகப்பிரசவம் 

மருத்துவ காரணங்கள் அல்லாமல், வலிகளை தாங்க முடியாமலும், சிசேரியனை நோக்கி செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.ஆனால் ஆரோக்கியமான உடல்வலிமையோடு மனவலிமையும் கை கூடினால் சுகப்பிரசவம் எளிதான ஒன்று.மனஅழுத்தம் பிரசவத்திற்கு முதல் எதிரி.பிரசவம் எனக்கு எளிதில் நிகழும் என்ற கருத்தை மட்டுமே மனதில் வைத்து கொண்டு அந்த காலகட்டத்தை சந்தோசமாக அனுபவியுங்கள்.கர்ப்ப காலத்தின் பொழுது மேற்கொள்ளப்படும் எளிய உடற்பயிற்சிகள் தொடை மற்றும் இடுப்பு தசைகளை வலுவாக்குகின்றன.மேலும் பிறப்புறுப்பையும் இளக்கமாக்கி சுகபிரசவம் எளிதாக  நடைபெற உதவுகின்றது. ஆனால் இத்தைகைய உடற்பயிற்சிகள் முறையாக நிபுணர்களின் ஆலோசனையின் பெயரில் மேற்கொள்ள வேண்டும் இல்லையெனில் சிலநேரம் ஆபத்தாய் முடியக்கூடும்.எளிதான சுகப்பிரசவத்திற்கு தாயின் உடல் எடையும் வயிற்றில் உள்ள குழந்தையின் எடையும் குறிப்பிட்ட விகிதத்தில் இருப்பது அவசியம்.கர்ப்ப காலத்தின் பொழுது தாய்மார்கள் அவ்வப்போது எடையை பரிசோதித்துக் கொண்டு குழந்தைக்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.தேவையற்ற கலோரிகள் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.பிரசவத்துக்கு 10 நாட்களுக்கு முன்பாக சில சமயம் வலி வரும் அப்போ அது பிரசவ வலி தானா என்று தெரிந்து கொள்ள, ஒரு முட்டை (நாட்டுக்கோழி யாக இருந்தால் சிறப்பு) சிறிது மிளகு, 1 ஸ்பூன் விளக்கெண்ணை சேர்த்து ஆம்லெட் போட்டு சாப்பிட்டால் அதே நாளோ அல்லது மறு நாளோ குழந்தை வலி இல்லாமல் சுகப்பிரசவம் ஆகும். வலி வரும் போது எல்லாம் இதை செய்து சாப்பிடலாம்.

Jan 28, 2025

குடைமிளகாய்

இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது, அதிகசூட்டில் சமைக்கக் கூடாது.வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது.புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது.மூட்டு வலிக்கு மருந்தாகிறது.செரிமானப் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. வயிற்று வலி ,வாயுத் தொல்லை, வயிற்றுப் போக்கு ஆகியவற்றுக்கும் இது ஒரு நல்ல நிவாரணியாக உள்ளது.இரத்தத்தில் உள்ள சர்க்கரைஅளவை  சமநிலைப்படுத்தி, நீரிழிவையும்  கட்டுப்படுத்துகிறது. இதில் கலோரிகள் மற்றும்கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால் ,தேவையிலலாத கொலஸ்ட்ராலின் அளவுகளும் அதிகரிக்காமல் இருக்கும்.இதில் உள்ள கேயின்  என்னும் வேதிப் பலவிதமான உடம்பு வலிகளைக் குறைக்கிறது.ஒரு நல்ல ஆன்டி ஆக்சிடண்ட்டாக உள்ளது.இரத்த நாளங்கள், சருமம், எலும்புகள் ஆகியவை  சீராக செயல்பட இது உதவுகிறது.

1 2 ... 21 22 23 24 25 26 27 ... 37 38

AD's



More News