முதுமையில் மனச்சோர்வின் அறிகுறிகள் .
மற்ற நோய்களைப் போல அல்லாமல் இந்நோயின் அறிகுறிகள் பலதரப்பட்டவை.தொடர்ந்து சோகநிலை, குற்ற உணர்வு, தகுதியற்றஉணர்வு,உதவியற்றஉணர்வு, நம்பிக்கையின்மை, எல்லாம்கெட்டதுஎன்கிறமனப்பான்மை, பொழுதுபோக்கில்நாட்டம் இல்லாமை, தூக்கமின்மையால் அதிகாலையில் எழுந்துவிடுவது, அளவுக்கு அதிகமாகத் தூங்குவது, பசி குறைதல், எடை குறைதல் அல்லது அதிகமாக உண்டு உடல் பருமன் அடைவது, சக்தியின்மை, அதிக அளவு களைப்பு, தற்கொலை பற்றிய எண்ணம், தற்கொலைக்கு முயற்சிசெய்வது, மனப்பதற்றம். கவனமின்மை, மறதி, எதிலும் முடிவுஎடுக்க முடியாத நிலை மற்றும் சிகிச்சைக்குப் பயனளிக்காத உடல் உபாதைகள்... உதாரணம்:தலைவலி, வயிற்றுக்கோளாறு, உடல் வலி.
நோய்களைத் தவிர மனச்சோர்வு வருவதற்கு வேறு பல காரணங்களும் உண்டு. உதாரணம்: த தள்ளாமை, மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை, தொடர்ந்து படுக்கையில் இருக்கவேண்டிய நிலை, வறுமை,கடன் தொல்லை,உறவினரின் எதிர்பாராத இழப்பு, குடும்பத்திலோ, சமுதாயத்திலோ மதிக்காத நிலை. இவ்வாறு வயதான காலத்தில் மனச்சோர்வு வருவதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் உண்டு.மனச்சோர்வு மிகவும் முற்றிய நிலையில் உள்ளவர்கள் தற்கொலைக்கு முயற்சிப்பர்.முதுமையில் இம் மனநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது அவ்வளவு சுலபமல்ல
வலிமை அடையச் செய்ய மருந்தை விட, முதியோர்களுடன் கலந்துபேசி முதலில் அவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்வதே முக்கியமானதாகும். அவர்களின் மனச்சோர்வுக்கு உடல் நோயைத் : தவிரமற்ற காரணங்கள் இருப்பின் அதற்குத் தக்க வழிமுறைகளைச் செய்துகொடுக்க வேண்டும். இந்த மனநலச் சிகிச்சையை அடிக்கடி தொடர்ந்து கொடுக்க வேண்டியிருக்கும். உதாரணம்: வீட்டில் உள்ளவர்களிடம் பேசி முதியோர்களுக்குத் தக்க மரியாதை அளிக்கச் செய்தல், தனிமையைத் தவிர்க்க நண்பர்களை அறிமுகம் செய்துவைத்தல், வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லுதல். ஆன்மிகத்தில் ஈடுபடச் செய்தல், தியானம் செய்யப் பழக்கப்படுத்துவது, முடிந்த அளவுக்கு நிதி வசதி பெற ஆலோசனைகூறுதல்... இப்படி
0
Leave a Reply