25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தலைமையில்  (16.09.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டாமாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு,  விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை,  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.  மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.  முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச்சார்பில், பாவாலி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை மாற்றுத்திறனாளி நல அலுவலகத்திற்கு ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் சப்தகிரி மறுவாழ்வு அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்படும் 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கான தொழிற்பயிற்சி இல்லம் செயல்படுவதற்காக ஒப்படைத்தார்.                      

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  நலத்துறையின் சார்பில், அருப்புக்கோட்டை வட்டம், வெள்ளையாபுரம் கிராமத்தில் உள்ள 6 பயனாளிகளுக்கு  தலா ரூ. 3.60 இலட்சம் மதிப்பில், இலவச வீட்டுமனை பட்டாக்களையும்,மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி சேருவதற்கு  பொருளாதார உதவி வேண்டி, விண்ணப்பம் அளித்த இரண்டு மாணவிகளுக்கு  மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து  தலா ரூ.2500/- என  மொத்தம் ரூ.5000/- மதிப்பிலான காசோலைகளையும்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

பின்னர், திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நேற்று நடைபெற்ற, திருக்குறள் முற்றோதல் விழாவில் கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள்  அனைவரையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து, பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.அமர்நாத், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் திரு.ரமேஷ், உதவி ஆணையர் (கலால்) திரு.கணேசன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News