25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


காரியாபட்டி வட்டத்தில்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காரியாபட்டி வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம்

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்ட முகாமானது 18.09.2024 இன்று காலை 9 மணி முதல் மறுநாள் 19.09.2024 அன்று காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமின் கீழ், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டம், காரியப்பட்டி வட்டத்தில், மீன்வளம், மீனவர் நலத்துறை சார்பில், மாண்புமிகு  மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி, தோணுகால் சந்திரக்குளம் கண்மாயில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நீர்நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.பின்னர், வரலொட்டி ஊராட்சியில், தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பில், பனை விதைகள் நடும்  முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பள்ளிக்கு மட்டும் அனுப்புங்கள், படிப்பும் பாதுகாப்பும் எங்கள் பொறுப்பு என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டம்,  காரியாபட்டி வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டம் மூலம் நடைபெற்று வரும் ஆய்வுப்பணிகளில் இன்று(18.09.2024) காரியாபட்டி அரசு மெல்ல கற்போருக்கான  பள்ளியில், அங்குள்ள ஆசிரியர்களிடம் மாணவர்களின் கல்வி தரம், கற்பிக்கும் முறைகள் மற்றும் வருகைப்பதிவேடு உள்ளிட்டவைக் குறித்து கேட்டறிந்தார்.பின்னர் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் போது தாங்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டும் என மாணவியர்களிடம்மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரை  வழங்கினார்.மேலும், காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சமைக்கப்படும் உணவு மற்றும் முட்டையின் தரம் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், காரியாபட்டி வட்டத்தில் உள்ள நூலகத்தினை ஆய்வு செய்து, நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்களின் விபரம், நூல்களின் இருப்பு மற்றும் போட்டித்தேர்வு தயாராகி வரும் மாணவ,மாணவியர்களிடம் நூலகத்தின் பயன்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.மேலும், காரியாபட்டி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளின் விபரம் குறித்தும் மற்றும் காரியாபட்டி கால்நடை மருத்துவமனையில், கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.காரியாபட்டி வட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடை எண் 1 -ல் உள்ள குடிமைப் பொருட்களை சரிபார்த்து, பொருட்களின் இருப்பு மற்றும் தரம்  குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், காரியாபட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று பார்வையிட்டு, அங்குள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், வயதுகேற்ற எடை, உயரம் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சரிபார்த்து  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காரியாபட்டி பேரூராட்சியில் ரூ.25 இலட்சம் மதிப்பில் வார்டு எண் -10-ல் கோல்டன் நகரில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு வருவதையும், காரியாபட்டி பேரூராட்சியில், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.10.27 கோடி மதிப்பில், 5 மேல்நிலைத்தேக்கத் தொட்டி புதிதாக அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து, காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.பின்னர், அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்.,த.கா.ப., அவர்கள் முன்னிலையில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, வட்டாட்சியர் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News