விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் (20.09.2024) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் பயிர் விளைச்சல் போட்டியில் நெல் பயிரில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற நல்லூர்பட்டி, வத்திராயிருப்பு விவசாயிக்கு ரூ.15000/- வழங்கப்பட்டது. பயிர் விளைச்சல் போட்டியில் நெல் பயிரில் மாவட்டஅளவில் இரண்டாம் பரிசு பெற்ற முள்ளிகுளம், திருவில்லிபுத்தூர் விவசாயிக்கு ரூ.10000/- வழங்கப்பட்டது. பயிர் விளைச்சல் போட்டியில் மக்காச்சோளம் பயிரில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற சுப்ரமணியபுரம், வெம்பக்கோட்டை விவசாயிக்கு ரூ.10000/- வழங்கப்படுகிறது. பயிர் விளைச்சல் போட்டியில் மக்காச்சோளம் பயிரில் மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு பெற்ற கங்கர்செவல், வெம்பக்கோட்டை விவசாயிக்குரூ.5000/- வழங்கப்பட்டது. தோட்டக்கலைத்துறையின் மூலம் வெங்கடேஷ்வாபுரம் என்ற விவசாயிக்கு SHDS மாடித்தோட்ட தொகுப்பு ஒரு எண்ணம் ரூ.450/- மானியத்தில் வழங்கப்பட்டது. என்.மேட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயிக்கு வேளாண்மை வளர்ச்சித்திட்டதின் கீழ் நறுமணப்பொருட்கள் மற்றும் மிளகாய் விதைகள் ரூ.6000/- மானியத்தில் வழங்கப்பட்டது. பனையடிப்பட்டியை சேர்ந்த விவசாயிக்கு வேளாண்மை வளர்ச்சித்திட்டதின் கீழ் நறுமணப்பொருட்கள் மற்றும் மிளகாய் ரூ.4,800/- மானியத்தில் வழங்கப்பட்டது. எம்.துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த விவசாயிக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வெண்டை விதை ரூ.1,500/- மானியத்தில் ஆகிய இடுபொருட்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. கண்மாய்கள் மற்றும்; ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று முன்னுரிமை அடிப்படையில் அப்பகுதிக்குரிய வட்டாட்சியர், செயற்பொறியாளர், நீர்வளத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, விருதுநகர் இணைந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்கள். சீமைக் கருவேல மரங்களை அரசு ஆணையின்படி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சீமைக் கருவேல மரங்களை அகற்றினால் மட்டுமே வனவிலங்குள் காட்டுப்பன்றிகள் பயிர் சேதத்தினை தடுக்க முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள். விருதுநகர், திருவில்லிபுத்தூர் மற்றம் இராஜபாளையம் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி எடுத்த நடவடிக்கையின் விபரத்தை உடன் தொடர்புடைய அலுவலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். வனவிலங்குகளால் பயிர்சேதம் ஏற்படும் பட்சத்தில் வனத்துறையினர் முன்னுரிமை அடிப்படையில் கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு உடனடியாக வழங்கிட வேண்டும். கம்பிக்குடி கால்வாய் திட்டத்தினை செயல்படுத்திட துரித நடவடிக்கையினை எடுக்குமாறு செயற்பொறியாளர், குண்டாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரம் போதியளவு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டது. மாவட்டத்தில் மல்லிகை செண்ட் தொழிற்சாலை அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (20.09.2024) விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இம்முகாமில் கலந்துகொண்ட மாணவர்களில் 97 மாணவர்களுக்கு ரூபாய் 6.75 கோடிக்கான கல்விக்கடன் பெறுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், இம்முகாமில் மாவட்டத்திலுள்ள 200 தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கி கிளைகளின் மாவட்ட அளவிலான வங்கி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அனைத்து வங்கிகள் சார்பாகவும் அரங்குகள் அமைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்விக்கடன் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மாணவர்களிடம் நேரடியாக கல்விக்கடன் விண்ணப்பங்கள் வங்கிகளின் மூலம் பெறப்பட்டன. இந்த முகாமின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் வங்கிக்கிளைகளில் பரிசீலனை செய்யப்பட்டு 20 நாட்களுக்குள் தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கடன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.சு.பாண்டிச்செல்வன், அனைத்து வங்கிகளின் மாவட்ட பிரதிநிதிகள், மாவட்டம் முழுவதிலும் இருந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் 2025-ன் முன் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக வாக்குசாவடிகள் பகுப்பாய்வு மறுசீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதன் தொடர்சியாக (20.09.2024) மாலை 03.30 மணியளவில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஏற்கெனவே நடத்தப்பட்ட கூட்டத்தில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் பொதுமக்களின் நலன் ஆகியவற்றின் அடிப்படையில் வாக்குச்சாவடி மையங்கள் நேரிடையாக பார்வையிடப்பட்டு வாக்காளர் பதிவு அலுவலர்கள் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட வாக்குச்சாவடி இடமாற்றம்/கட்டிடம் மாற்றம், வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, வாக்குச்சாவடி பெயர் மாற்றம், புதிய வாக்குச்சாவடி உருவாக்கம் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு, அவர்களது ஒப்புதல் பெறப்பட்டது.மறுசீராய்வு பணியில் 202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியும், 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி, 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் இரண்டு வாக்குச்சாவடிகள், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் மூன்று வாக்குச்சாவடிகள், 208-திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி என மொத்தம் 08 வாக்குச்சாவடிகள் புதியதாக ஏற்படுத்தப்பட உள்ளன.வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு மற்றும் மறுசீராய்வு பணிகளுக்குப் பிறகு விருதுநகர் மாவட்டத்தின் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1893-ல் இருந்து 1901 ஆக உயரும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (20.09.2024) வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பகுதி அளவிலான தையல் தொழில் குழுக்களுக்கான வாங்குபவர் மற்றும் விற்பவர்களுக்கான (Buyer-Seller) வணிக இணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் 14 ஆடை உற்பத்தியாளர்கள் நிறுவனங்களும், 6 பகுதி அளவிலான தையல் தொழில் குழு நிர்வாகிகளும் மற்றும் ஆடை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தின் வாயிலாக பகுதி அளவிலான தையல் தொழில் குழுக்களுக்கான கொள்முதல் மற்றும் விற்பனை ஆணை ஆடை உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்து தரப்பட்டது. இதன் மூலம் தையல் தொழில் குழுக்களின் வருமானம் அதிகரிக்கவும் பெண் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டது இக்கூட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் திருமதி ராஜாத்தி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில், தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழில் மூலப்பொருட்களான சல்பர், பொட்டாசியம் குளோரேட் மற்றும் பொட்டாசியம் பெர் குளோரேட் ஆகிய இராசாயணப் பொருட்களை விற்பனை செய்ய படைக்கலன் உரிமம் படிவம் எண்:VIII--இன்படி உரிமம் பெற்றுள்ள டிப்போக்கள் / டிரேடர்ஸ்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் விதிமீறல்களினால் ஏற்படும் தீ / வெடி விபத்துகளினாலும், வீடுகளில் கள்ளத்தனமாக உரிய அனுமதியின்றி கருந்திரி உற்பத்தி செய்யும் போது ஏற்படும் வெடி விபத்துகளினாலும், தொடர்ந்து பல்வேறு உயிரிழப்புகளும் மற்றும் பலர் காயமடைந்தும் உள்ளனர்.எனவே இது போன்ற விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு, தீப்பெட்டி மற்றும் பட்டாசு உற்பத்திக்குத் தேவையான பட்டாசு உற்பத்தி செய்யும் மூலப்பொருள்களான சல்பர், குளோரேட் மற்றும் சிவப்பு பாஸ்பரஸ் ஆகிய இரசாயனப் பொருட்களை தீப்பெட்டி மற்றும் பட்டாசு உற்பத்தி செய்வதற்கு உரிய அனுமதி பெற்றுள்ள தொழிற்சாலையினருக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்.அவ்வாறின்றி தீப்பெட்டி மற்றும் பட்டாசு உற்பத்தி செய்வதற்குரிய உரிமம் இல்லாத தனி நபர்களுக்கு அத்தியாவசிய மூலப்பொருள்களான சல்பர், குளோரேட் மற்றும் சிவப்பு பாஸ்பரஸ் ஆகிய இரசாயனப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.அவ்வாறு விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்படும்பட்சத்தில், தொடர்புடைய டிப்போக்கள் / டிரேடர்ஸ்கள் மீது படைக்கலச் சட்ட விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்து செய்து, அந்நிறுவனத்தினை நடத்தி வரும் உரிமதாரர் மீது சட்டப்படியான உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும் விவசாயப் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் சல்பர், பாஸ்பரஸ் மற்றும் சிவப்பு பாஸ்பரஸ் போன்ற இரசாயனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களிடமிருந்து, விவசாயத் தேவைக்காக பெற்று மேற்படி மூலப்பொருட்களை தீப்பெட்டி மற்றும் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் கள்ளத்தனமாக உற்பத்தி செய்யப்படுவதாக தெரியவருகிறது.எனவே விவசாயப் பயன்பாட்டிற்காக மேற்படி இரசாயனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் உரிய விதிமுறைகளின்படி விவசாயிகளுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும், அவ்வாறில்லாமல் விவசாயப் பயன்பாட்டிற்காகப் பெறப்பட்ட மேற்படி மூலப்பொருட்களைச் சட்டத்திற்குப் புறம்பாக மேற்படி பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவரும்பட்சத்தில், அந்நிறுவனத்தின் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அந்நிறுவனத்தினை நடத்தி வரும் உரிமதாரர் மீது சட்டப்படியான உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களால் 23.07.2009 அன்று உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதல்வர் கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.இத்திட்டம் 10.01.2022 அன்று மேலும் 1.47 குடும்பங்களுக்கு பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் விரிவுபடுத்தப்படுத்தப்பட்டது.இத்திட்டத்தின்படி காப்பீட்டு திட்ட பயனாளி குடும்பத்திற்கு ஓராண்டிற்கு ரூ.5 இலட்சம் வரை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட தனியார் அரசு மருத்துவமனைகளில் எவ்வித கட்டணமுமின்றி சிகிச்சை பெறலாம். நமது விருதுநகர் மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் மாவட்டத்தில் கிராமம் வாரியாக செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் அக்டோபர் 28 ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் நடைபெற இருக்கிறது.இம்முகாமில் இதுவரை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யாமல் இருப்பவர்கள் கலந்து கொண்டு, காப்பீட்டு அட்டை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இம்முகாமிற்கு வருபவர்கள் குடும்ப அட்டை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை அசல் மற்றும் நகல் எடுத்து வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் விபரம் : மாவட்ட திட்ட அலுவலர், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், விருதுநகர், 73730-04974 என்ற தொலைபேசி எண்னை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமைதோறும் காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நிலம் தொடர்பான மனுக்கள் அதிக அளவில் அளிக்கப்படுவதால் மேற்படி நிலம் தொடர்பான மனுக்களுக்கு உரிய தீர்வு வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய் கிழமை அன்று காலை 11 மணி முதல் 12.30 மணி வரை நிலம் (நிலம் எடுப்பு, நில ஆக்கிரமிப்பு, பட்டா மாறுதல், பட்டா மேல்முறையீடு, பட்டா இரத்து, இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் நிலச்சீர்திருத்தம் தொடர்பான மனுக்கள்) தொடர்பான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.இந்த மாதத்திற்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமானது 24.09.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11.00 மணி முதல் 12.30 மணி வரை நடக்கவிருக்கிறது. இதற்கான மனுக்கள் பதிவு காலை 10.00 மணி முதல் நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில் அனைத்து வட்டங்களைச் சார்ந்த வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல் துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.மேலும் இது குறித்த விவரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஐ-பிரிவு, தொலைபேசி எண்: 04562-252742, விருதுநகரில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்-2024 23.09.2024 அன்று மாவட்ட அளவிலான PRADHAN MANTRI NATIONAL APPRENTICESHIP MELA (PMNAM) அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகரில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் நடைபெறவுள்ளது. மேற்;கண்ட முகாமில், கீழ்க்காணும் அரசு /பிரபல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். 1. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விருதுநகர்2. தமிழ்நாடு அரசு மின்பகிர்மானக் கழகம்3. தமிழ்நாடு அரசு சிமெண்ட்ஸ்4. தமிழ்நாடு நகர் ஊரமைப்புக் கழகம்5. MRF Tyres6. Sundaram Fasteriers Ltd.,7. Ramco Cements Ltd.,8. Deivendran Plastics9. TTK Health Care. Pvt. Ltd.,10. Saranya Precession Tools11. Dalmia cements Ltd.,12. TVS Motor company Ltd., Hosur. மேலும் ITI - இல் உள்ள தொழிற்பிரிவுகான 1) Fitter 2) Machinist 3) MMV 4) MRAC 5) ELECTRICIAN 6) Turner 7) Welder 8) Wireman 9) Surveyor மற்றும் பிற தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று இதுநாள்வரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாதவர்கள், இத்தொழிற் பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.தொழிற்பழகுநர் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி காலத்தில் உதவித்தொகையாக மாதத்திற்கு ரூ.7700/- முதல் ரூ.13500/- வரை வழங்கப்படும். மேலும் தொழிற்பழகுநர் பயிற்சிக்குப்பின் மத்திய அரசின் தொழிற்பழகுநர் சான்றிதழ், (National Apprenticeship Certificate) மற்றும் முன்னணி நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பும் வழங்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பேருந்து நிலைய அமைவிடத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், ரூ.6.20 கோடி மதிப்பில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் மற்றும் ஒட்டுமொத்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.5.60 கோடி மதிப்பில் ஊராட்சி ஒன்றிய பேருந்து நிலையம் அமைப்பதற்கும்,நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் ஆணைக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், ரூ.1.31 கோடி மதிப்பில் விடுதிக் கட்டடம் கட்டுவதற்கும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் (19.09.2024) அடிக்கல் நாட்டினார்.பின்னர், மல்லாங்கிணரில் நடைபெற்ற விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், ரூ.30.81 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மல்லாங்கிணறு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பினையும், மண்டபசாலையில்(இருப்பு) ரூ.30.84 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ரெட்டியபட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பினையும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் திறந்து வைத்தார்.மேலும், மாவட்டத்தில் உள்ள 27 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 100 துணை சுகாதார நிலையங்களுக்கு சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் ரூ.34 இலட்சம் மதிப்பில் மருத்துவ உபகணரங்களை (Vertical Autoclave Machine, ECG Machine, Semi Auto Analyser, Glucometer with Strips, Rediant Warmer, Fowler Cart) நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் வழங்கினார்.கன்னிச்சேரி புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அறுவை அரங்கம் தொடர்ச்சியாக செயல்படுத்தும் வகையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் மயங்கவியல் மருத்துவர்களை பணியமர்த்தும் கட்டணத்தை சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் ரூ.6.44 இலட்சத்திற்கான காசோலையினை வட்டார மருத்துவ அலுவலரிடம் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் வழங்கினார்.திருச்சுழி ஒன்றியப்பகுதியில் நீண்ட நெடுங்காலமாக மக்களுடைய கோரிக்கையாக இருந்து வந்த பெரும் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.திருச்சுழி பகுதியானது இன்றைக்கு வேகமாக முன்னேற்றம் காணக்கூடிய வளர்ந்து வரும் தொகுதியாக இருந்து வருகிறது. ஒரு காலத்தில் சாலைகள் இல்லாமல் இருந்த இந்த பகுதி, தற்போது ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரங்களுக்கு இடையில் மாவட்ட சாலைகள் மற்றும் மாநில நெஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.திருச்சுழி தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருத்துவமனை, தொழிற்பயிற்சி நிலையம், சமூக சுகாதாரக் கூடங்கள், மகளிர் காவல் நிலையங்கள் என அனைத்து வசதிகளிலும் முன்னேறி இருக்கக்கூடிய பகுதியாக மாறி வருகிறது.அதன் ஒரு பகுதியாக, திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில், ரூ.6.20 கோடி மதிப்பில் புதிய 100 சமுதாய வீடுகள், சமுதாயக் கூடம், நூலகம், குழந்தை நல மையம், விளையாட்டு மைதானம், பூங்கா, சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பிறப்பால் அனைவரும் சமம் என்ற எண்ணத்தை உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களின் பெயரில் சமத்துவபுரம் அமைக்கவும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.60 கோடி மதிப்பில் 1097.22 சதுர மீட்டர் பரப்பளவில் பேருந்து நிற்கும் இடம், கடைகள், ஓய்வறை, மழைநீர் வடிகால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, இருசக்கர வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஊராட்சி ஒன்றிய பேருந்து நிலையம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.மேலும், மல்லாங்கிணறு மற்றும் ரெட்டியபட்டியில்(மண்டபசாலையில்-இருப்பு) அலுவலக அறை, பொது அறை, உணவு அருந்தும் அறை, சமையல் அறை, படுக்கை அறை, காத்திருப்போர் அறை, கழிப்பறை உள்ளிட்ட வடதிகளுடன் கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.மேலும், இப்பகுதியில் சாலைகளாக இருந்தாலும் சரி, குடிநீராக இருந்தாலும் சரி அல்லது ஒவ்வொரு கிராமங்களுக்கும் இருக்கக்கூடிய அனைத்து அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் என அனைத்தையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.தந்தை பெரியார் நாட்டிலேயே சாதி, சமய வேறுபாடுகளை உரித்து, சமதர்மத்தை மேம்படுத்த வேண்டும். அனைவரும் பிறப்பின் அடிப்படையில் இருக்கக்கூடிய வேறுபாடுகளை உரித்து எல்லோரும் நாம் மனித குலம், அனைவருக்கும் சமவாய்ப்புகள் என்று நம் அனைவரையும் தலை நிமிர செய்திருக்கக் கூடிய தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் உருவாக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு உங்களைத்தேடி உங்கள் ஊரில், மக்களுடன் முதல்வர் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் மக்களின் இருப்பிடத்திற்கே சென்று அரசு சேவைகளை வழங்கி வருகிறது. இதுபோன்ற மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.பொருளாதாரத்தில் இன்னும் பல்வேறு உயர்வுகளை அடைவதற்குடைய வாய்ப்புக்களை பெற்றிருக்கும் இந்த பகுதியின் உடைய பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் முக்கியமாக இருப்பது உட்கட்டமைப்பு வசதிகள். சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள், புதிய பேருந்து வழித்தடங்கள் என்று ஒரு பகுதியினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு இதுபோன்று உட்கட்டமைப்புகள் தான் இன்றியமைதாதது. மக்கள் தொகை அடர்த்தி குறிப்பிட்ட அளவு இருந்தால்தான், அந்த பகுதிக்கென்று மக்கள் தொகைக்கேற்ப ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட வசதிகள் வரும். ஆனால் இந்தப் பகுதியில் மக்கள் தொகை அடர்த்தி குறைவாக இருந்தாலும், அதற்குரிய அரசு விதிமுறைகளில் உரிய விதிவிலக்குகளை பெற்று, இந்த பகுதிக்கென்று புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களையும், புதிய பேருந்து வழித்தடைகளையும் மாண்புமிகு அமைச்சர் அவர்களின் முயற்சியால், இப்பகுதியில் அதிகமாக கிடைக்கப்பெற்றிருக்கிறது.நீண்ட கால கோரிக்கையான திருச்சுழியில் அரசு கலைக் கல்லூரி கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த ஆண்டு புதிதாக அங்கு மாணவர்கள் விடுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது.மேலும், திருச்சுழி ஊராட்சி பேருந்து நிலையம், தந்தை பெரியார் சமத்துவபுரம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மூலமாக இந்த பகுதி எதிர்காலத்தில் சிறந்த பொருளாதார வளர்ச்சியடையவும், இந்த பகுதி மக்கள் சிறந்த பொருளாதார வாழ்க்கை முன்னேற்றம் பெறுவதற்கும் இது போன்ற திட்டங்கள் உதவியாக இருக்கும்.இதுபோன்ற திட்டங்கள் உரிய காலகட்டத்திற்குள் விரைந்து நிறைவேற்றி, இதை தரமாகவும் அதே நேரத்தில் விரைவாகவும் முடிக்க மாவட்ட நிர்வாகம் மூலம் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.வள்ளிக்கண்ணு, உதவி செயற்பொறியாளர் திருமதி அனிதா, திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திரு.பொன்னுத்தம்பி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் திருமதி காளீஸ்வரி, காரியாபட்டி பேரூராட்சி தலைவர் திரு.செந்தில், மல்லாங்கிணறு பேரூராட்சித் தலைவர் திரு.துளசிதாஸ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் திரு.கமலி பாரதி, தங்கதமிழ்வாணன், திரு.சிவக்குமார், திருச்சுழி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் திரு.சந்தனபாண்டியன், முக்கிய பிரமுகர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சிமன்றத்தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், ஆணைக்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.20 இலட்சம் (19.09.2024) மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S, அவர்கள் தலைமையில், நிதி மற்றும் மனிதவன மேலாண்மைத்துறை அமைச்சர் திரு தங்கம்தென்னரசு அவர்கள் திறந்து வைத்தார்.