25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 25, 2024

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் செயல்படுத்திட ஏதுவாக வாகன நிறுவனங்களிடமிருந்து (Travel Agency) விலைப்புள்ளிகள் பெற விண்ணப்பங்கள்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் TN-RIGHTS  மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்;டம் செயல்படுத்திட ஏதுவாக வாகன நிறுவனங்களிடமிருந்து (Travel Agency) விலைப்புள்ளிகள் பெறவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வாகன நிறுவனங்கள் கீழ்கண்ட நிபந்தனைகளுடன் விண்ணப்பம் செய்பவர்களுக்கு முன்னுரிமைவழங்கப்படும். வாகனம், GSTபதிவு வாகன உரிமைபெற்ற ஓட்டுனர், எரிபொருள் செலவினம், வாகன பராமரிப்பு மற்றும் இதர தகுதியுடன் விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் 01.10.2024-க்குள் விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.மேலும் விவரம் பெறுவதற்கு தொலைப்பேசி எண்.04562-252068 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 24, 2024

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை

விருதுநகர் தெப்பம் பஜாரில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில்  (23.09.2024) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.  கோ-ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ம் ஆண்டு துவக்கப்பட்டு தொடர்ந்து 89 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது.கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருப்புவனம் பட்டு சேலைகள்;, கோவை மென்பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், கைத்தறி சுங்குடி சேலைகள், காஞ்சி காட்டன் சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், சேலம் காட்டன் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், திண்டுக்கல் காட்டன் சேலைகள் மற்றும் அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக லினன்ஃபருத்தி (டுiநெn ஃ ஊழவவழn) சட்டைகள், லுங்கிகள் மற்றும் வேட்டிகள் உள்ளன. மேலும் மகளிருக்காக சுடிதார் இரகங்கள், நைட்டிகள் மற்றும்; குர்தீஸ்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்காக தருவிக்கப்பட்டுள்ளது.கைத்தறி ரகங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. கோ - ஆப்டெக்ஸில் மாதாந்திர சேமிப்பு திட்டமும் நடைமுறையில் உள்ளது.கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி இரகங்களை மின் வணிக வலைதளமான றறற.உழழிவநஒ.உழஅ என்ற இணையதளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். விருதுநகர் விற்பனை நிலையத்தில் சென்ற ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.40.26 இலட்சங்கள் ஆகும். தீபாவளி 2024 விற்பனை குறியீடாக ரூ.55.00 இலட்சங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரித்தார்.

Sep 24, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில்  (23.09.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு,  விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.  மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.  இக்கூட்டத்தில் தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பம் செய்த மனுதாரருக்கு உடனடியாக மனுவை பரிசீலனை செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் சார்பில் தையல் இயந்திரத்தினை மாட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் 05.10.2024 அன்று விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் நடைபெற உள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட்டு பொதுமக்களுக்கு வழங்கினார்.இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் திருமதி இ.கார்த்திகேயனி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொழில்நெறிவழிகாட்டி) திருமதி பிரியதர்ஷினி, உதவி ஆணையர் (கலால்) திரு.கணேசன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 24, 2024

2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (23.09.2024) துவக்கி வைத்தார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ /மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள்  மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 26 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு 8,106 பள்ளி மாணவர்களும், 5,499 கல்லூரி மாணவர்களும், 267 மாற்றுத்திறனாளிகளும், 706 அரசு அலுவலர்களும், 1724 பொதுமக்களும் என மொத்தம் 16,302 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர்.அதன்படி,  இன்று  நடைபெற்ற  அரசு அலுவலர்களுக்கான  தடகள, கேரம் உள்ளிட்ட  விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.மாவட்ட அளவில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்கள், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறுவார்கள். மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும், இவ்வாண்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதல் முறையாக நான்காம் இடம் பெற்றவர்களுக்கும் மூன்றாம் பரிசிற்கு இணையாக பரிசுகள் வழங்கிட உள்ளது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமார மணிமாறன்,  அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 24, 2024

வெம்பக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 தொலைதூரப் பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் மாலை நேரங்களில் மருத்துவ சேவைகள் வழங்கும் விதமாக மருத்துவர்கள் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கான பணி நியமன ஆணை

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது சுகாதாரத்துறை மூலம் மாவட்டத்தில் தொலைதூர கிராமப் பகுதிகளில் உள்ள மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, மாலை நேரங்களில் மருத்துவ சேவைகள் வழங்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 தொலைதூரப் பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர்கள் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (23.09.2024) வழங்கினார்.இத்திட்டத்தின் மூலம் மருத்துவர்கள் தொலைதூர பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் வாரத்தில் மூன்று நாட்கள் (மாதத்திற்கு 12 நாட்கள்) மாலை 6 மணி முதல் 8 மணி வரை மருத்துவ ஆலோசனை, சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைகளை வழங்குவர். இதில், மருத்துவர்கள் நோயாளிகளின் சிகிச்சையை தொடர மற்றும் சமூக விழிப்புணர்வு செயல்பாடுகளை நடத்திட  இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் ஆதரவாக இருப்பர். மருத்துவ சேவைகளை மேம்படுத்தவும், பெரிய மருத்துவமனைகளின் சுமையை குறைப்பதும் மற்றும் நோயாளிகளுக்கு விரைவாக சிகிச்சை அளிப்பதும் இதன் நோக்கமாகும்.தற்போது இச்சேவைகள் நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் தட்சனேந்தல், ஆனைக்குளம் மற்றும் இருவர்குளம் ஆகிய துணை சுகாதார நிலையங்களுக்கும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் காரேந்தல், கீழக்குடி மற்றும் பி.தொட்டியங்குளம் ஆகிய சுகாதார நிலையங்களுக்கும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் மம்சாபுரம், பனையடிபட்டி மற்றும் வலையகுளம் என மொத்தம் 9 துணை சுகாதார நிலையங்களில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இச்சேவைகளை வழங்கும் வகையில் 9 மருத்துவர்கள் மற்றும் 9 இடைநிலை சுகாதார பணியாளர்கள் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் மருத்துவர்கள் மற்றும் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருந்துகள் மற்றும் உபயோகப் பொருட்களை கொண்டு வந்து பயன்படுத்துவார்கள். எனவே, அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்தச்சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Sep 24, 2024

வன்கொடுமையால் பாதிக்கப்பபட்டு இறந்த நபரின் வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணி நியமன ஆணை

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (23.09.2024) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த நபரின் வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் வழங்கினார்.அதன்படி, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு  இறந்த சிவகாசி வட்டம் விஸ்வநத்தத்தை சேர்ந்த லேட் திரு.செல்வராஜ் என்பவரின் தாயார் திருமதி வேல்த்தாய் மற்றும் மனைவி    திருமதி முனீஸ்வரி என்பவருக்கும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் அரசு வழங்கும் நிவாரணத் தொகை ரூ.3,00,000/- (மூன்று இலட்சம் மட்டும்) முதல் தவணையாகவும், பின்பு இரண்டாம் தவணையாக ரூ.3,00,000/ (மூன்று இலட்சம் மட்டும்) இருவரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டது.மேலும், திருத்தப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2016-ன் கீழ் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட லேட் திரு.செல்வராஜ் என்பவரின் தாயார் திருமதி வேல்த்தாய் என்பவருக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.5000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) பெறுவதற்கான ஆணையினையும் மற்றும் அவரது மனைவிக்கு  ஆதிதிராவிட நலத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியில், கருணை அடிப்படையிலான சமையலர் பணிக்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.ரமேஷ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Sep 24, 2024

தேசிய ஊட்டச்சத்து மாதம்-2024-ஐ முன்னிட்டு, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்துக் கல்வி குறித்த ஒரு நாள் கருத்தரங்கம்

விருதுநகர் மாவட்டம்,  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  (23.09.2024) ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா -2024  கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்துக் கல்வி குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.குழந்தை இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதற்கும், ஆரோக்கியமான குழந்தைகள் உருவாக்குவதற்கும், மிக மிக முக்கியமானது ஊட்டச்சத்தும் தாய்ப்பாலும் ஆகும். முதல் ஆயிரம் நாட்கள் ஆனது மிகவும்  பொன்னான நாட்கள் ஆகும்.ஒரு கரு உருவானதில் இருந்து, அந்த குழந்தை பிறந்த ஆரம்ப காலம் முதல் இரண்டு ஆண்டு காலம் வரை உள்ள ஆயிரம் நாட்களும் குழந்தைக்கும், தாய்க்கும் மிக முக்கியமான நாட்கள். அந்த ஆயிரம் நாட்களில் அவர்களுக்கு முழுமையான ஊட்டச்சத்து மிக முக்கியமானதாகும். குறிப்பாக இரத்த சோகை அளவு மிக முக்கியமானது. இந்த ஊட்டச்சத்தை எல்லாம் குழந்தைகளும் பெற வேண்டும் என்பதற்காகவும், கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் நன்கு வளரவேண்டும் என்பதற்காகவும் தான் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலமாக தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்த இணை உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், கர்ப்பிணி பெண்கள் நோய் தொற்று வராமல் தன் சுத்தத்தையும், தன்னை  சுற்றி நோய் தொற்று வராமல் தடுப்பது  பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெண் கருவுற்றதில் இருந்து குழந்தை பிறக்கும் வரையிலும் அவர்களுக்கு தொடர்ச்சியாக எப்படி ஊட்டச்சத்து பெற வேண்டும் என்பது குறித்து, கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.கர்ப்பிணி  பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைவாக இருப்பதால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாகவும், ஊட்டச்சத்து குறைபாட்டுடனும் பிறக்கின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம் இளம் வயதில் பெண்களுக்கு திருமணம் செய்து கொள்வது தான்.  அதனால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படுகிறது. இரும்பு சத்து அளவு குறைவாக இருக்கிறது. அதனால் இது குறித்து பெண்களுக்கு அறிவுரை மற்றும் விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும். ஒரு ஆரோக்கியமான குழந்தை என்பது  குழந்தையின் தாய்க்கு மட்டும் அல்லாமல், அந்த குடும்பத்திற்கும், அதை விட சமூகத்திற்கும் மிகவும் முக்கியம் ஆகும். ஊட்டச்சத்து குறைப்பாட்டால் உண்டாகும் இரத்த சோகை குறைப்பாட்டை போக்குவதற்கு அரசு மருத்துவமனைகளில் வழங்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அதோடு ஊட்டச்சத்து மிக்க உணவை நம் அன்றாட எடுத்துக்கொண்டோம் என்றால் நாம் மருந்துகளை சாப்பிட  வேண்டிய அவசியம் இருக்காது. எனவே அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் சரியான வகையில் ஊட்டச்சத்து உணவினை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இது போன்ற தொடர்ச்சியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொழுது தான் நாம் எதிர்காலத்தில் ஒரு ஆரோக்கியமான மகப்பேறு உறுதி செய்ய முடியும். எனவே அதற்குரிய நடவடிக்கைகளை நாம் அனைவரும் இணைந்து எடுக்க வேண்டும் என்று இந்த தேசிய ஊட்டச்சத்து மாத நிகழ்ச்சியில் நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், தேசிய ஊட்டச்சத்து மாதம் -2024 -ஐ முன்னிட்டு, “அனைவரும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் பெறுவதை உறுதி செய்வோம்” என்ற கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

Sep 24, 2024

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் வாரம் ஒரு நகராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முகாமிட்டு ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளார்.

விருதுநகர் மாவட்டத்திற்குட்டபட்ட நகராட்சிகளில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்தும், பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறவும், நடைபெற்றுவரும் பணிகள்  மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், வாரம் ஒரு நகராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முகாமிட்டு ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளார்.அதன்படி, திருவில்லிபுத்தூர் நகராட்சியில் 26.09.2024 அன்றும், அருப்புக்கோட்டை நகராட்சியில் 03.10.2024 அன்றும், விருதுநகர் நகராட்சியில் 10.10.2024 அன்றும், சாத்தூர் நகராட்சியில் 17.10.2024 அன்றும் மற்றும் இராஜபாளையம் நகராட்சியில் 24.10.2024 அன்று பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வுகாணும் பொருட்டும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வு மேற்கொள்ள  உள்ளார்.எனவே, அந்தந்த நகராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் தெரிவித்து, அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Sep 24, 2024

தனியார் பட்டாசு  தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மரணமடைந்த வெம்பக்கோட்டை வட்டம்அம்மையார்பட்டி  கிராமத்தைச் சேர்ந்த வாரிசுதாரர்களுக்கு முதலமைசரின்  பொது நிவாரண நிதி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் 23.09.24 வெம்பக்கோட்டை வட்டம் செவல் பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பட்டாசு  தொழிற்சாலையில் 19.09.2024 அன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் மரணமடைந்த வெம்பக்கோட்டை வட்டம்அம்மையார்பட்டி  கிராமத்தைச் சேர்ந்த லேட் திரு. கோவிந்தராஜ்  என்பரின் வாரிசுதாரரான தாயார்திருமதி.முருகேஸ்வரிஎன்பவருக்குமுதலமைசரின்  பொது நிவாரண நிதியிலிருந்து ரூ3 இலட்சம்  மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் I A S அவர்கள் வழங்கினார். 

Sep 23, 2024

விருதுநகர் ஊராட்சி மற்றும் விருதுநகர் நகராட்சி பகுதிகளில் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் சிறப்பு கள ஆய்வு

விருதுநகர் ஊராட்சி மற்றும் விருதுநகர் நகராட்சி பகுதிகளில் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் நேரில் சென்று  சிறப்பு கள ஆய்வு மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மாணவர்கள் 100 சதவிகிதம் பள்ளி படிப்பை முடிப்பதற்கும், பள்ளி படிப்பு முடித்து உயர் கல்வி சேர்வதையும் உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மாவட்ட நிர்வாகம் மூலம் எடுக்கப்பட்டு, தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும்  இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு ஆகஸ்ட் 2024 வரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களில் 9 முதல் 12 ஆம்  வகுப்பு வரை அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 113 மாணவர்களும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 53 மாணவர்களும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 30 மாணவர்களும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 82 மாணவர்களும்,திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 74 மாணவர்களும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 168 மாணவர்களும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 67 மாணவர்களும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 338 மாணவர்களும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 62 மாணவர்களும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 137  மாணவர்களும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 182 மாணவர்களும்,  என மொத்தம் 1306 மாணவர்கள் தொடர்ச்சியாக 15 நாட்களுக்கும் மேலாக இடைநிற்றல் மாணவர்களாக  உள்ளனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), துணை ஆட்சியர்கள், துணைக்காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர்கள் உட்பட  அலுவலர்களுக்கு ஒவ்வொரு அலுவலர்களுக்கும் தனித்தனியாக  இடைநின்ற மாணவர்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டு, ஒவ்வொரு அலுவலர்களும் நேரில் சந்தித்து, இடைநிற்றலுக்கான காரணம் அறிந்து, குறைகளை நீக்கி, மீண்டும் பள்ளியில் சேர நடவடிக்கை எடுக்கும் வகையில் மாணவர்களை நேரில் சென்று சந்தித்து, இடைநிற்றலுக்கான காரணங்கள், குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்வதற்கான கள ஆய்வினை  மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் விருதுநகர் நகராட்சி  பகுதிகளில் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று சிறப்பு கள ஆய்வு மேற்கொண்டார். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சொல்கின்ற காரணங்களின் அடிப்படையில், அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு, பள்ளியில் சேர்வதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, நிதியுதவி, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்குதல், சிறப்பு வகுப்புகள் எடுத்தல், ஆர்வமின்மையை போக்கி மீண்டும் பள்ளியில் சேர்த்தல், புலம்பெயர்ந்தவர்களை கண்டறிந்து உரிய வழிகாட்டுதல், கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு இடைநிற்றல் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 68 69

AD's



More News