25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் போதைப் பொருட்கள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் தேர்வைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் போதைப் பொருட்கள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் தேர்வைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் போதைப் பொருட்கள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் தேர்வைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (03.07.2024) தலைமையில் நடைபெற்றது. இந்த போதைப் பொருட்கள் என்பது உடலில் வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு தற்காலிக மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. போதை பொருட்களில் இருந்து நமக்கு மகிழ்ச்சி வருவதில்லை. போதைப் பொருட்களை உட்கொள்வதால் உங்கள் உடலில் ஏற்படக்கூடிய விரும்பத்தகாத மாற்றங்களா அந்த மகிழ்ச்சி வருகிறது.

துருவப்பகுதிகளில் வாழும் மனிதர்களுக்கு உணவுப்பொருட்கள் எளிதாக கிடைப்பதில்லை. அவர்கள் நெடுதூரம் சென்று வேட்டையாடி உணவினை பெறுவது கடினம். அதற்கு ஒரு நுட்பத்தை கையாண்டு வேட்டையாடுகின்றனர். கூர்மையான கத்தியின் மீது பனிக்கட்டியினை வைத்து, அதன் மீது மற்ற விலங்கின் இரத்தத்தை ஊற்றி விடுவார்கள். அதை அந்த விலங்கு இரத்தம் என நினைத்து சாப்பிடும் போது, அதன் நாக்கு கூர்மையான கத்தியினால் அறுபட்டு, இரத்தம் வரும். அப்படி வரக்கூடியது தன்னுடைய இரத்தம் என அறியாமலேயே அதனை சுவைக்கும் போது, முழுவதுமாக இரத்தம் வெளியேறி இறந்து விடும். இதை ஒரு மனிதன் பயன்படுத்தக்கூடிய போதைக்கு உதாரணமாக கூறலாம்.இரத்தம் எவ்வாறு விலங்கிற்கு சுவையாக இருக்கிறதோ அதே போல் போதைப்பொருட்களிலிருந்து வரும் இன்பம் என்பது அந்த போதைப்பொருட்களினால் கிடைக்கக்கூடிய இன்பம் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. அது உங்கள் உடலில் உள்ள வேதி மாற்றங்களால் உங்கள் உடல் உறுப்புகள் சிதைந்து, உங்களுடைய பொருளாதாரம் அழிந்து, அதன் மூலமாக வரக்கூடிய இன்பம் தான் போதைப்பொருட்களுக்கான இன்பம் ஆகும்.

எனவே, இந்த போதைப் பொருளுக்கு எதிரானவர்களாக மாணவர்கள் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டும். இந்த மகிழ்ச்சியை விட நாம் அனுபவிப்பதற்கு உலகம் முழுவதும் மகிழ்ச்சிகள் நிறைய இருக்கின்றன. நீங்கள் புதிதாக பிடித்த ஒரு செயலை செய்கின்ற போதும், விளையாட்டு, கலை, இலக்கியம் ஆகியவற்றில் ஆர்வம் இருந்தால் அதில் ஈடுபடும் போதும், பொழுது போக்கான மலை ஏறும் பயிற்சி மேற்கொள்ளுதல், பிடித்த இடங்களுக்கு பயணம் செய்தல் போன்றவைகள் மூலம் நிறைய மகிழ்ச்சிகளை பெற முடியும். அப்படிப்பட்ட மகிழ்ச்சிகளை நீங்கள் புரிந்து கொண்டு, போதைப் பொருட்கள் மூலம் கிடைக்கக்கூடிய தற்கால மகிழ்ச்சிகளை ஒதுக்கக்கூடிய, அவற்றை நீங்கள் சமூகத்திற்கு எடுத்துச் சொல்ல கூடியவர்களாக இருக்க வேண்டும்.மேலும், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்றிலிருந்து ஒன்பது மாதத்தில் பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது.தமிழ்நாட்டில மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், அறிவியல், மீன்வளம் சார்ந்த அரசு கல்லூரிகளில் உள்ள ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட இடங்களில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவச் செல்வங்களுக்கு 7.5 சதவிகித இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த இடங்களுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் மற்ற ஒதுக்கீடுகளை விட குறைவாக இருக்கும். தமிழ்நாட்டினுடைய தலைசிறந்த அரசு கல்லூரிகளில் சென்று சேர வேண்டும் என்றால் இதெல்லாம் மிகப்பெரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பு எவ்வளவு பெரியது என்பதை நிச்சயமாக இங்கு இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தெரிவதில்லை. ஆனால் இது குறித்து, ஒரு மருத்துவம் அல்லது பொறியியல் கல்லூரி நுழைவுத் தேர்வில் ஓரிரு மதிப்பெண்கள் வித்தியாசத்தில் வாய்ப்பை தவற விட்ட மாணவர்களுக்கு தான் தெரியும். இது குறித்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News