25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இந்திய சைகை மொழி மற்றும் சர்வதேச காது கேளாதோர், சைகை மொழி விழிப்புணர்வு கருத்தரங்கம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய சைகை மொழி மற்றும் சர்வதேச காது கேளாதோர், சைகை மொழி விழிப்புணர்வு கருத்தரங்கம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், (07.10.2024) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின் இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினம்-2024 முன்னிட்டு, இந்திய சைகை மொழி மற்றும் சர்வதேச காது கேளாதோர் சைகை மொழி விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.காது கேளாத மாற்றத்திறனாளிகள் பேருந்து நிலையம், அரசு அலுவலகம், மருத்துவமனை போன்ற இடங்களுக்கு வரும் பொழுது, அவர்களுடன் உரையாடுவதற்காக அனைவருக்கும் ஒரு அடிப்படையான ஒரு புரிதல் இருக்க வேண்டும்.

அனைத்து அரசு அலுவலகங்களிலும், மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகும் வகையில், முறையான சாய்வு தள பாதை, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ப்ரெய்லி எழுத்துக்களால் ஆன விளம்பர பலகைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், காதுகேளாத மாற்றுத்திறனாளிகளையும், அரசு அலுவலர்கள் மற்றும்  பொதுமக்களிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறன.நாகரீகம் அடைந்த சமுதாயத்தில் எல்லோரையும் ஒருங்கிணைத்து யாரையும் தனித்துவமாக விட்டு விடாமல், அனைவரும் ஒன்றாக ஒரே சூழலில் வரும் பொழுது இந்த சைகை மொழி தேவைப்படுபவர்கள் மிகக் குறைவாக இருந்தாலும், அவர்களுக்கான சம உரிமை இந்த சமுதாயத்தில் இருக்க வேண்டும்.

அதை உறுதிப்படுத்துவதற்கு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி. குறிப்பாக அரசு அலுவலர்கள் இந்த சைகை மொழிகளை தெரிந்து கொள்வதன் அவசியம் என்னவென்றால், அரசு அலுவலகங்களில் அணுக வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு பதில் அளிக்கவும், குறைந்தபட்சம் அவர்களுக்கான அடிப்படையான சைகை மொழிகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இந்த நிகழ்ச்சி என தெரிவித்தார்.இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில், காது கேளாதவர்களுடன் உரையாடுவதற்கு சைகை மொழி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்தும் பல்வேறு இந்திய சைகைகள் குறித்தும் ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர்(பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, உதவி ஆணையர் (கலால்) திரு.கணேசன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News