25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தமிழ்நாடு அரசின் ‘TN Alert” என்ற கைபேசி செயலி மூலம் வானிலை முன்னெச்சரிக்கைகளை பொதுமக்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு அரசின் ‘TN Alert” என்ற கைபேசி செயலி மூலம் வானிலை முன்னெச்சரிக்கைகளை பொதுமக்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்

வடகிழக்கு பருவமழை - 2024 வானிலை முன்னெச்சரிக்கைகளை பொதுமக்கள் முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக தமிழ்நாடு அரசால் ‘TN Alert” என்ற கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இச்செயலியின் மூலம் பொதுமக்கள் அனைவரும் வெப்பநிலை, மழை போன்ற வானிலை அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் நான்கு நாட்களுக்கு முன்பான வானிலை அறிக்கைகள், தினசரி மழை அளவுகள், நீர்த்தேக்க நிலை மற்றும் வெள்ள அபாயம் போன்ற விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும், பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளான பொதுமக்கள் தங்கள் புகார்களை இச்செயலியில் பதிவு செய்து உரிய தீர்வு காணவும், மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது.  
எனவே அனைத்து பொதுமக்களும் மேற்காணும் செயலினை Google Play Store- லிருந்து பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News