25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 03, 2024

கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

விருதுநகர் மாவட்ட காணொளி காட்சி கூட்டரங்கில்  (02.09.2024) கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது தொடர்பாக தலைமை செயலாளர் திரு.நா.முருகானந்தம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், ஆய்வுக்கூட்டம்  காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றதை தொடர்ந்து, மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் முன்னிலையில்;,  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S, அவர்கள் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை, சமூக பாதுகாப்பு அலுவலகம், குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.பெண்கள் கல்லூரி மற்றும் விடுதிகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். மாணவிகளுக்கு தொலைபேசியின் மூலம் பணியாளர்கள், மாணவர்கள் மூலமாகவோ தொந்தரவுகள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில்,  181,1091 ஆகிய புகார் எண்களை தொடர்பு கொள்ளலாம்.கல்லூரிகளில் மாணவிகளுக்கு எதிரான புகார்களை மறைப்பது கல்லூரி நிர்வாகத்தின் மிகப்பெரிய தவறாகும். அவ்வாறு செயல்படும் பட்சத்தில் அந்த கல்லூரி நிர்வாகத்தின் மீதும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீதும்  மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுக்களிடம் பெறப்படும் புகார்களுக்கு விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டு, சட்டத்தின் வழியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்த சட்டங்கள்,  விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மேலும், ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.எனவே, இதனுடைய முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு அனைத்து பள்ளி கல்லூரி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மேலாண்மை குழு இணைந்து செயல்பட வேண்டும்.கல்லூரிகளில் கண்காணிப்பு கேமரா, புகார்பெட்டி, பாலியல் துன்புறுத்தல் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள காவல்துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை ஆகிய துறை அலுவலர்கள் மூன்று நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.மேலும், மாவட்டத்தில் தொடர்ச்சியாக் கஞ்சா மற்றும் போதை பொருள்கள் குறித்து, தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக பள்ளிகளில் ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டு, மாணவர்களின் செயல்பாடுகள் குறித்தும், போதை பொருள்கள் பயன்பாடு, விற்பனை குறித்தும் தகவல் சேகரிக்கப்பட்டு கிடைக்கப்பட்டுள்ளன. இது குறித்து தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்.மாவட்டத்தில் குறிப்பாக பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும் குறிப்பாக பெண் குழந்தைகள் மாணவிகள் பாலியல் சார்ந்த குற்றங்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கும், போதை பொருட்களில் இருந்து அவர்களுடைய வாழ்க்கையை காப்பதற்கும் நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள்தெரிவித்தார்.இக்கூட்டத்தில், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரு.பிர்தௌஸ் பாத்திமா, மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு.அசோகன் (சைபர் கிரைம்), திரு.சூரியமூர்த்தி (குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரிரான குற்றங்களைத் தடுத்தல்) உட்பட காவல்துறை, பள்ளிக்கல்வித் துறை, சமூக நலத்துறை, கல்லூரி  நிர்வாக அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Sep 03, 2024

3-வது விருதுநகர் புத்தகத் திருவிழா - 2024 நடைபெறுவதை முன்னிட்டு, “மரமும் மரபும்” என்ற தலைப்பில் “சுற்றுச்சூழலும் தொன்மையும்” என்ற கருத்தினை மையப்படுத்தி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இலச்சினை(LOGO) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (02.09.2024) மூன்றாவது விருதுநகர் புத்தக திருவிழா, விருதுநகரில் அமைந்துள்ள கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாக பொருட்காட்சி மைதானத்தில் 27.09.2024 முதல் 07.10.2024 வரை 11 நாட்களுக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, “மரமும் மரபும்” என்ற தலைப்பில் சுற்றுச்சூழலும் தொன்மையும் என்ற கருத்தினை மையப்படுத்தி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட  இலச்சினையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் வெளியிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில், புத்தகவாசிப்பு முக்கிய பங்குவகிக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தினை ஊக்கப்படுத்த வேண்டும். புத்தகவாசிப்பினை ஒருமக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல சென்னை புத்தகக் காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், இலக்கிய சிந்தனைமிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் புத்தகக் காட்சிகள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் புத்தகத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகமும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும்  இணைந்து, விருதுநகரில் அமைந்துள்ள கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள பொருட்காட்சி மைதானத்தில் 27.09.2024 முதல் 07.10.2024 வரை 11 நாட்களுக்கு காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மாபெரும் புத்தகத் திருவிழா நடத்தப்பட இருக்கிறது.இப்புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், பிரபல எழுத்தாளர்களின் கருத்தரங்கு, சிறப்புப் பட்டிமன்றங்கள், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், நாட்டுபுற கலைநிகழ்ச்சிகள், தொல்லியல்துறை அரங்குகள், அரசுத்துறைகளின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும் மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு பயன்பெறுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதன்படி, இந்த புத்தகக் கண்காட்சி குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், “மரமும் மரபும்” என்ற தலைப்பில் சுற்றுச்சூழலும் தொன்மையும் என்ற கருத்தினை மையப்படுத்தி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட  இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில், இந்தப் புத்தகத் திருவிழா சிறப்புடன் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனை அனைவரும் கண்டுகளித்து, புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்பகங்களில்  தாங்கள் விரும்புகின்ற புத்தகங்களை வாங்கி பயன்பெறுமாறும், இந்த புத்தகத் திருவிழா குறித்து அனைத்துத் தரப்பினருக்கும் தகவல்களையும் கொண்டு செல்வதற்கு, போதுமான விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு பணிகளை செய்து, அனைவரும் பயன்பெறுவதற்கு பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்கள் போதிய ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Sep 03, 2024

வெடிவிபத்தில் உயிரிழந்த விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்த லேட் திரு.கண்ணன் என்பவரின் வாரிசுதாரருக்கு முதலமைச்சர் பொதுநிவாரண நிதியிலிருந்து காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (02.09.2024) திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஆவிச்சிபட்டி கிராமத்தில் 24-8-2024 அன்று தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்த லேட் திரு.கண்ணன் என்பவரின் வாரிசுதாரருக்கு முதலமைச்சர் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் வழங்கினார்.

Sep 03, 2024

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் (IPPB) மூலம் அஞ்சலகங்களில் குறைவான தவணைதொகைளை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டிற்கு ரூ.520/, ரூ.555/, ரூ.755/, பீரீமியத்தில் ரூ.10 இலட்சம்  அல்லது ரூ.15 இலட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.சாமானிய மக்களுக்கும் விபத்து காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள அஞ்சலங்கள் (தபால்காரர்/கிராம அஞ்சல் ஊழியர்கள்) மூலம் மிககுறைந்த பிரீமியம் தொகையுடன் கூடிய இந்த விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம். விண்ணப்ப படிவம், அடையாள/முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகித பயன்பாடுமின்றி தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனம் பயன்படுத்தி வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த காப்பீட்டில் சேர்ந்து கொள்ளலாம். சேமிப்பு கணக்கு துவங்க ஆதார் எண், தொலைபேசி எண், ரூ.200 ஆகியவை போதுமானது.திட்டத்தின் சிறப்பம்சங்கள்: ரூ.10.00 இலட்சம் / ரூ.15.00 இலட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு (விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு / நிரந்தர முழு ஊனம் / நிரந்தர பகுதி ஊனம்) ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி தொலைபேசி மூலம் கணக்கில்லா மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளும் வசதி விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.1,00,000 வரை விபத்தினால் மரணம் /  நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ.1,00,000/- வரை விபத்தினால் மரணம் / நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) திருமண செலவுகளுக்கு ரூ.1,00,000/- வரை விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகை ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.1000/- வீதம் 15 நாட்களுக்கு  ( 2 நாட்கள் கழிக்கப்படும்) விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியைகள் செய்ய ரூ.5000 வரை.  மேற்கண்ட பல்வேறு பலன்களை வழங்கும் இந்த விபத்து காப்பீட்டு பாலிசியை ஒருவர் எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் (வாகன விபத்து மட்டுமன்றி இடி, மின்னல் தாக்குதல், பாம்பு போன்ற விஷ பூச்சி கடி, தவறி விழுதல்) ஏற்படும் உடல் நல நெருக்கடிகளையும்/ நிதி நெருக்கடிகளையும்/ உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்கள் / தபால்காரர்கள் மூலம் இந்த விபத்து காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும், பிற காப்பீடு திட்டம் வைத்திருப்பவர்களும், இந்த காப்பீட்டில் பதிவு செய்துகொள்ளலாம் தொழிலதிபர்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை இந்த எளிய திட்டத்தில் சேர்ப்பதன் மூலம் நிறுவனம் மற்றும் ஊழியர்களும் பயன்பெற முடியும்., இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் மூலம் டேர்ம் இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் உத்திரவாதத்துடன் கூடிய பென்ஷன் திட்டம், முதிர்வு திட்டத்திலும் பொது மக்கள் சேர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Sep 02, 2024

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் செய்தியாளர் பயணத்தின்போது, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர், விருதுநகர் மற்றும் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்  அவர்கள் செய்தியாளர் பயணத்தின்போது, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், அத்திக்குளம் தேய்வேந்தரி கிராமத்தில், வேளாண்மைத்துறையின் மூலம் விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் திட்டத்தின்கீழ், 5 ஏக்கர் பரப்பளவில் சுமார் 1000 மகோகளி மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Aug 31, 2024

விநாயகர் சதுர்த்தி மற்றும் அதன் பின்னர் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், எதிர்வரும் 07.09.2024 அன்று விநாயகர் சதுர்த்தி மற்றும் அதன் பின்னர் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் (30.08.2024) நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில், எதிர்வரும் 07.09.2024 அன்று விநாயகர் சதுர்த்தி மற்றும் அதன் பின்னர் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, அரசின் விதிமுறைகள் மற்றும் மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் வழிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.அதன்படி, விழா ஏற்பாட்டாளர்கள் விநாயகர் சிலைகள் நிறுவவும் மற்றும் ஊர்வலம் நடத்தவும் படிவம் -1-ல் சிவகாசி சார் ஆட்சியர், மற்றும் சாத்தூர்ஃஅருப்புக்கோட்டை, வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர்களிடமிருந்து உரிய அனுமதி பெற  வேண்டும்.  சிலை உற்பத்தியாளர்கள் / சிலை வடிவமைப்பாளர்கள்ஃ கைவினைஞர்கள் / கலைஞர்கள் ஆகியோர்களுக்கு சிலை செய்வதற்கான உரிமம் அல்லது அனுமதி ஆனது சம்மந்தப்பட்ட உள்ளாட்சி மற்றும் நகர்புற நிர்வாகத்தினரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும். பொது அமைதி மற்றும் பாதுகாப்பு, மத நல்லிணக்கம் ஆகியவற்றை பேணும் பொருட்டு வருவாய்த்துறை / காவல்துறை / மாசுகட்டுபாட்டு வாரியம் ஆகிய துறையினரால் வகுக்கப்படும் நிபந்தனைகளை கண்டிப்பாக விழா ஏற்பாட்டாளர்கள் பின்பற்ற வேண்டும்.விநாயகர் சிலைகள் களிமண்ணால் மட்டுமே செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்ட்டர் ஆப் பாரீஸ் மற்றும் தெர்மாகோல்(பாலிஸ்டிரின்) போன்ற பொருட்களால் சிலைகள் அமைக்கப்படக் கூடாது.  சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம் / எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.  மேலும் சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது.  மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த / மக்கக்கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம்.சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்ஃபந்தல்கள் ஆகியவைகளை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் போன்ற பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.சிலைகள் நிறுவப்படும் இடங்களில் அமைக்கப்படும் தற்காலிக அமைப்பு, எளிதில் தீப்பற்றாத பொருட்களைக் கொண்டு (தகரம் மற்றும் சிமிண்ட் அட்டை) அமைக்கப்பட்டிருக்க வேண்டும். சிலையைச் சுற்றிலும் பாதுகாப்பான தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கண்டிப்பாக எளிதில் தீப்பற்றக் கூடிய தென்னங்கீற்று போன்ற பொருட்களிள் பயன்பாடு கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். சிலைகளானது அடி மட்டத்திலிருந்து அதாவது மேடை மற்றும் பீடம் உட்பட அதிகபட்சம் 10 அடி உயரத்தில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.மற்ற வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனை மற்றும் கல்வி சார்ந்த நிறுவனங்கள் அருகில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு அனுமதி கிடையாது.கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது.  ஒலிபெருக்கியினை காலை 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் வழிபாட்டு நேரங்களில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும். சிலைகள் வைக்கப்படும் இடங்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத இடத்தில் வைக்க வேண்டும். சிலைகள் வைக்கும் இடம், ஊர்வலம் செல்லும் பாதை போன்றவற்றை குறிப்பிட்டு அனுமதி பெற வேண்டும்.சிலைகள் அமைக்கும் விழா குழுவினர், சிலை குழு அமைத்து, சிலை வைக்கப்பட்ட நாள் முதல், சிலையை கரைக்கும் நாள் வரை குறைந்தபட்சம் இரு நபர்கள் தொடர்ந்து காவல் துறையினருடன் சேர்ந்து  24 மணி நேரமும்  பாதுகாப்பு அலுவலில் இருக்க வேண்டும். அரசியல் மற்றும் சாதி ரீதியான டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு அனுமதி கிடையாது. விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட தேதியிலிருந்து 5 தினங்களுக்குள் சிலைகள் கரைக்கப்பட வேண்டும். ஊர்வலம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் காவல்துறையினர் அனுமதிக்கும் வழித்தடங்களில் மட்டுமே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவேண்டும்.ஒவ்வொரு சிலைக்கும் ஒவ்வொரு நாளும் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்ட குழு உறுப்பினரின் பெயர், விலாசம், கைபேசி எண் ஆகியவற்றை முன்கூட்டியே தேதி வாரியாக பட்டியலிட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் எழுத்து மூலமாக கொடுக்க வேண்டும். ஊர்வலத்தின்போது பிற மதத்தினரின் மனதை புண்படுத்தும்படியான கோசங்களோ, வாசகங்களையோ பயன்படுத்தக்கூடாது. விநாயகர் சிலைகளை மினி லாரி மற்றும் டிராக்டர்கள் ஆகியவற்றில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் மாட்டுவண்டிகளில் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.மோட்டார் வாகனச்சட்டம் 1988-ன் படி அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே விநாயகர் சிலைகள் கரைக்கக்கூடிய வாகனங்களில் செல்ல வேண்டும். வருவாய் கோட்டாட்சியரின் அனுமதியில்லாமல் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றப்படும். அவ்வப்போது நிலவும்; சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு, அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை மாற்றம் செய்யவோ, வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவோ காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினருக்கு அதிகாரம் உண்டு. ஊர்வலத்தின்போது ஆயுதங்களை எடுத்துச் செல்லக்கூடாது. பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. ஊர்வலம் செல்லும்போது பொதுமக்களுக்கோ, போக்குவரத்திற்கோ இடையூறு செய்யக்கூடாது. சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு சிலைகள் கரைக்கப்பட வேண்டும்.கடந்த காலங்களில் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலை வைக்க வேண்டும். புதிய இடங்களில் சிலைகள் வைக்கவும்,  புதிய வழித்தடங்களில் செல்லவும் அனுமதி மறுக்கப்படுகிறது.விழா ஏற்பட்டாளர்கள், பந்தல்கள் மற்றும் மின் அமைப்பு அலங்காரங்கள் ஆகியவைகளுக்கான அனுமதியினை உரிய அலுவலர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். விழா ஏற்பட்டாளர்கள், வழிபாட்டுப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எளிதில் எரியக்கூடிய பொருட்கள் ஏதும் இல்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். விழா ஏற்பட்டாளர்கள், விநாயகர் வழிபாட்டின் போது அங்கீகரிக்கப்படாத மின் இணைப்பு மற்றும் மின் திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் ஏதும் இல்லை  என்பதை உறுதி செய்திட வேண்டும். விழா ஏற்பட்டாளர்கள், விநாயகர் வழிபாட்டு மற்றும் ஊர்வலத்தின் போது,  போதிய முதலுதவி மற்றும் அவசர மருத்துவ வசதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்திட வேண்டும். மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியத்தால் சிலைகள் கரைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள திருத்திய வழிகாட்டுதழின்படி சிலைகளை கரைப்பதற்க்கும், கரையாமல் உள்ள மீதி பொருட்களை அப்புறப்படுத்துவதற்கும், உரிய நடவடிக்கைகளை உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும்.சிலை கரைக்கப்பட்டதிலிருந்து 48 மணி நேரத்திற்குள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி ஃ நகராட்சி அமைப்புகளால், சிலை கரைக்கப்பட்ட இடத்திலுள்ள கரையாமல் இருக்கும் மீதமுள்ள பொருட்கள் அகற்றப்பட வேண்டும். சிலைகள் கரைக்கப்படவுள்ள நீர்நிலைகளில் குறிப்பாக நகராட்சி பகுதிகளில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினால் மூன்று கட்டங்களாக சிலைகள் கரைப்பதற்கு முன்பு, கரைக்கும் போது மற்றும் கரைத்த பின்பு நீரின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். தீ பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் விதிகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுவதை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் உறுதி செய்ய வேண்டும்.  மேலும் வழிபாட்டுப் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எளிதில் எரியக்கூடிய பொருட்கள் ஏதும் இல்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.விநாயகர் வழிபாட்டின் போது அங்கீகரிக்கப்படாத மின்இணைப்பு மற்றும் மின்திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் ஏதும் உள்ளதா என்பதை மின்சார வாரியத்தினர் கண்காணிக்க வேண்டும். இவ்விழாவிற்காக தற்காலிக மின்இணைப்பு கோரி வரப்பெறும் விண்ணப்பங்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, சட்டவிதிகளின்படி விரைவாக அனுமதி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஊர்வலம் செல்லும் பாதை மற்றும் வழிபாடு செய்யும் பகுதி ஆகியவைகளில் உள்ள மின்பாதையால் ஏதும் அசம்பாவிதமோ ஃ இடையூறோ ஏதும் ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை மின்வாரியத்துறையினரால் மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுமக்கள் பெரும்பாண்மையாக கூடும் இவ்விழா பகுதிகள் மற்றும் ஊர்வலங்கள் ஆகியவைகளில்,  போதிய முதலுதவி மற்றும் அவசர மருத்துவ வசதிகள் உள்ளதா என்பதை சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையினரால் உறுதி செய்திட வேண்டும்.         மேலும், விருதுநகர் மாவட்டத்தில், விநாயகர் சிலைகள் கரைக்கூடிய இடங்களாக தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இடங்கள்:-விருதுநகரைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து வரும் சிலைகள் கல்கிடங்கில் கரைக்க வேண்டும்.ஆவுடையாபுரத்திலிருந்து வரும் சிலைகள் அங்குள்ள உபயோகப்படுத்தப்படாத கிணற்றில் கரைக்க வேண்டும்.சிவகாசி நகர்ப்புறங்களில் இருந்து வரும் சிலைகள் தெய்வாணை நகரில் உள்ள உபயோகப்படுத்தப்படாத கிணற்றில் கரைக்க வேண்டும்.ஆ.புதுப்பட்டி மாரனேரி ஊர்களில் இருந்து வரும் சிலைகள் மாரனேரி கண்மாயில் கரைக்க வேண்டும்.திருவில்லிபுத்தூர்  நகரிலிருந்து வரும் சிலைகள் திருவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் கரைக்க வேண்டும்.பந்தல்குடியைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து  வரும்சிலைகள் பந்தல்குடி பெரிய கண்மாயில் கரைக்க வேண்டும்.இராஜபாளையம் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள சிலைகள் ஜெயவிலாஸ் பஸ் கம்;பெனிக்கு எதிர்புறம் உள்ள வடுகவூரணியில் கரைக்க   வேண்டும்.அம்மாபட்டி, ஏழாயிரம்பண்ணை, ஆலங்குளத்திலிருந்து வரும் சிலைகள் அப்பகுதியிலுள்ள  உபயோகப்படுத்தாத கிணறு, தெப்பம் மற்றும்ஆலங்குளம் குவாரி பகுதியில் கரைக்க வேண்டும்.கிருஷ்ணன்கோவில் சிலைகள் இராமச்சந்திராபுரம் கண்மாயில் கரைக்க வேண்டும்.குன்னூர் சிலைகள் குன்னூர் கண்மாயில் கரைக்க வேண்டும்.வத்திராயிருப்பு மற்றும் கூமாபட்டி சிலைகள் மகாராஜபுரம் மற்றும் கூமாபட்டி பெரியகுளம் கண்மாயில் கரைக்க வேண்டும்.அருப்புக்கோட்டை நகர்புறத்தில் இருந்து வரும் சிலைகள் பந்தல்குடி சாலையில் உள்ள பெரியகண்மாயில் கரைக்க வேண்டும்திருவில்லிபுத்தூர் தாலுகாவிலிருந்து வரும் சிலைகள் திருவண்ணாமலை  கோனகிரி குளத்தில்  கரைக்க வேண்டும்.    விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது சிலை அமைப்பினர் ஃ நிர்வாகிகள் ஊர்வலம் அமைதியான முறையில்  நடைபெற மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல் துறையினருக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும்  மேற்கூறிய விதிமுறைகளை மீறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்  என மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்தார்.

Aug 31, 2024

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம்(StartupTN) சார்பில் நடைபெற்ற, 101-வது “காபி வித் கலெக்டர்” கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்(30.08.2024) தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம்(StartupTN) சார்பில் நடைபெற்ற, புதிய தொழில் தொடங்க ஆர்வமிக்க கல்லூரி மாணவர்கள், ஸ்டார்ட்-அப் சூழல் அமைப்பில் உள்ள பங்குதாரர்கள்(Stakeholders) விருதுநகர் தணிக்கையாளர் அமைப்பின் பிரதிநிதிகளுடனான 101-வது “காபி வித் கலெக்டர்” கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள், புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புக்கள், அதற்கான அரசின் திட்டங்கள் குறித்தும், தொழில் திறன்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடி, பல்வேறு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் “காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி 07.01.2022 அன்று தொடங்கப்பட்டு, மொத்தம் 100 கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்நிகழ்ச்சியின் மூலம் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறைகளிலும் இருக்கக்கூடிய சிறந்த படைப்பாளிகள் மற்றும் சாதனையாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்கள்.அதன் ஒரு பகுதியாக, இன்று(30.08.2024) புதிய தொழில் தொடங்க ஆர்வமிக்க கல்லூரி மாணவர்கள், ஸ்டார்ட்-அப் சூழல் அமைப்பில் உள்ள பங்குதாரர்கள், விருதுநகர் தணிக்கையாளர் அமைப்பின் பிரதிநிதிகளுடனான 101-வது “காபி வித் கலெக்டர்” கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் StartupTN நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டு, புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புக்கள், அதற்கான அரசின் திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்கள்.தமிழக அரசு புதிய தொழில்களை தொடங்குவதற்கும், ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழில்களை ஊக்குவிப்பதற்கும் பல்வேறு துறைகள் மூலம் திட்டங்களையும், மானியங்களை வழங்கி, புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கும், தொழில் வளர்ச்சியை பெருக்குவதற்கும் தொடர்ச்சியாக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமானது, மாநிலத்தில்  புத்தொழில் மற்றும் புத்தாக்க தொழில்முனைவு செயல்பாடுகளில் தனிக்கவனம் செலுத்தி புத்தொழில் சூழமைவினை வலுப்படுத்தும் நோக்கத்தில், தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட நிறுவனம் ஆகும்.இந்த நிறுவனம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் 8 நிறுவனமாக இயங்கி வருகின்றது. இந்நிறுவனம் StartupTN என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்படுகின்றது. தமிழ்நாட்டினை உலகளாவிய அளவில் புத்தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்கு உகந்த தலைசிறந்த இடங்களில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்ற நீண்ட கால இலக்கினை முன்வைத்து, புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக துணிகர முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கித் தருவது, உலகத்தரம் வாய்ந்த தொழில்வளர் காப்பகங்களை வடிவமைப்பது, தொழில் விரைவாக்க பயிற்சிகள் அளிப்பது, சந்தைத் தொடர்புகளை ஏற்படுத்துவது, தொழில் முனைவு சார்ந்த பல்வேறு  செயல்பாடுகளை ஊக்குவிப்பது போன்ற  பலவகையான செயல்திட்டங்களை வகுத்து இயங்கி  வருகின்றது.விருதுநகர் மாவட்டம் தொழில் நிறுவனங்கள் அதிகப்படியாக எண்ணிக்கையில் கொண்ட மாவட்டமாகும். நமது பகுதிகளில் காலங்காலமாக இந்த சிறு, குறு, நடுத்தர தொழில்கள் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சமுதாயத்தில் பொருளாதாரத்தில் விளிம்பு நிலையில் இருக்கக் கூடிய மக்களுக்கு அரசினுடைய திட்டங்கள் விரைவாக சென்று சேர வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக புதிய தொழில் சிந்தனை கொண்ட மாணவர்கள், தொழில் தொடங்க தமிழ்நாடு அரசின் StartupTN என்ற நிறுவனம் மூலம் சிறப்பான வாய்ப்புகள் உள்ளன.இந்த நிறுவனம் மூலம் தமிழ்நாட்டில் தயாரிப்புகளை பல புத்தொழில் நிறுவனங்கள் புதுமையான உற்பத்தி செய்தாலும் அவற்றை சந்தைப்படுத்துவதிலும் வணிக சந்தையில் தனித்துவமான இடத்தை அடைவதிலும் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வண்ணம் சந்தைப்படுத்துதல்(Marketing) மற்றும் தனித்த வணிக அடையாளத்துடன் இயங்குதல்(Branding) ஆகியவற்றை குறித்த கற்றல் களமாக "பிராண்ட் லேப்ஸ்" என்ற தொடர் நிகழ்வு ஒருங்கிணைக்கப்படுகிறது.இன்னும் நமது மாவட்டத்தில் அதிகமாக தொழில் முனைவோர்கள் உருவாக வேண்டும். உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் மூலமாகத்தான் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். மாவட்ட நிர்வாகமும், அனைத்து துறைகளும் புதிய தொழில் முனைவோர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.

Aug 31, 2024

விருதுநகர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம்

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்ட முகாமானது 28.08.2024 நேற்று காலை 9 மணி முதல் இன்று 29.08.2024 காலை 9 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமின் கீழ், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதனடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட நேருஜி நகர் முதல் தெருவில் குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதாரம், குடிநீர் பராமரிப்பு உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.மேலும், நேருஜி முதல் தெருவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து நுண் உரம் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், நேருஜி நகரில் உள்ள மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை கிடைக்கப்பெறுகின்றதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.மேலும், நேருஜி நகர் பகுதியில் அமைந்துள்ள நவீன பொது சுகாதார வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு பாராமரிப்பு பணிகள் சரியாக மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.அதனை தொடர்ந்து, விருதுநகர் - மதுரை ரோட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் நீரில் கலந்துள்ள குளோரின் மற்றும் குடிநீர் விநியோகம் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், அகமது நகர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி வளாகத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில், நகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 8 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்  கீழ், தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்  உணவின் தரம்  குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S,ஆய்வு செய்தார்.இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையாளர் திருமதி தமிழ் செல்வி, நகராட்சி பொறியாளர் திரு. எட்வின்  பிரைட் ஜோஸ், சுகாதார அலுவலர் திரு.இளங்கோவன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Aug 31, 2024

முடிவுற்ற மக்களவைத் தேர்தல் 2024 தொடர்பாக மக்களின் அறிவு, அணுகுமுறை, பழக்கவழக்கங்கள் குறித்த அடிப்படை ஆய்வு பொதுமக்களிடம் செப்டம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது

முடிவுற்ற மக்களவைத் தேர்தல் 2024 தொடர்பாக மக்களின் அறிவு, அணுகுமுறை, பழக்கவழக்கங்கள் குறித்த அடிப்படை ஆய்வு  (Knowledge, Attitude and Practices -Endline Survey) விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி, இராஜபாளையம் மற்றும் சாத்தூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களிடையே செப்டம்பர்-2024 மாதத்தில்  மேற்கொள்ளப்படவுள்ளது.தேர்தல் பற்றிய மக்களின் அறிவு நிலை, நம்பிக்கை, வாக்காளர் பதிவு மற்றும் வாக்காளர் பதிவு செய்யாமைக்கான காரணம், வாக்களர்களிடையே கல்வியின் தாக்கம், புலம் பெயர்வு காரணமாக பதிவு செய்யப்படாத வாக்காளர்களின் எண்ணிக்கை, அஞ்சல் வாக்குகள் பற்றிய விழிப்புணர்வு குறித்த விவரங்கள் சேகரிப்பது இவ்வாய்வின் நோக்கமாகும்.  வாக்காளர்களின் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு, தேர்தல் பங்கேற்பில் முதல் முயற்சிகளை முன்னெடுத்து செல்வது, வலுப்படுத்துவது மற்றும் பல்வேறு தேர்தல் பதிவு இடைவெளிகளைக் குறைப்பதற்காக திட்டமிடுவதற்காக இக்கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், ஐந்து வாக்குச் சாவடிகளில் பத்து வாக்காளர்களிடம் இவ்விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது.  இளவயது வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலின வாக்காளர்கள், மாற்றுத் திறனாளிகள், முதன்முறை வாக்காளர்கள் மற்றும் வயது முதிர்ந்த வாக்காளர்கள் ஆகியோரிடம் முன்னுரிமை அடிப்படையில், பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை அலுவலர்களால் விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது.  இக்கணக்கெடுப்பில் வாக்காளர் பதிவு, வாக்காளர்களிடையே தேர்தல் குறித்த அறிவு, அணுகுமுறை, நடத்தை, நம்பிக்கை மற்றும் நடைமுறைகள், வாக்காளர்களின் விழிப்புணர்வு, வாக்காளர்களின் கல்வி, தொழில், சமூகம், தேர்தல் ஆணையத்தால் மாற்றுத்திறனாளிக்காக உருவாக்கப்பட்ட சாக்ஷம் ஆப் (Saksham app) பற்றி அறிவு, தூண்டுதல்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது.எனவே, உண்மையான புள்ளி விவரங்கள் அளித்து ஒத்துழைப்பு நல்குமாறும்  மக்களால் கொடுக்கப்படும் புள்ளி விவரங்கள் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும், மேற்படி விவரங்களின் அடிப்படையில் தேர்தல் நடைமுறைகள் குறித்த கொள்கை முடிவுகளையும், திட்டங்களையும் மேற்கொள்ளப்பட உள்ளதால் (Data based decision making) பொது மக்கள், களப்பணி மேற்கொள்ளும் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை அலுவலர்களுக்கு உரிய ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட நிர்வாக சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 31, 2024

சாத்தூர் வட்டாரத்தில் உள்ள நான்கு பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய நடமாடும் காய்கனி விற்பனை வாகனம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் விருதுநகர் மற்றும் சாத்தூர் வட்டாரத்தில் உள்ள நான்கு பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய நடமாடும் காய்கனி விற்பனை வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (30.08.2024) வழங்கினார்.

1 2 ... 16 17 18 19 20 21 22 ... 69 70

AD's



More News