25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வேளாண்மைத்துறையின் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார ஊர்தி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வேளாண்மைத்துறையின் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார ஊர்தி

வேளாண்மைத்துறையின் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார ஊர்திகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று(07.10.2024) வேளாண்மைத்துறையின் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் சிறுதானியங்களில் சாகுபடியினை அதிகரித்தல்,  சிறுதானிய உணவு உட்கொள்வதனை அதிகரித்தல், சிறுதானிய பயிர்களுக்கான அரசின் திட்டங்கள் மற்றும் மானியங்கள் உள்ளிடவைகள் குறித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார ஊர்திகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த வாகனங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, சிறுதானியங்களில் சாகுபடியினை அதிகரித்தல் குறித்தும், சிறுதானிய உணவு உட்கொள்வதனை அதிகரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், சிறுதானிய பயிர்களுக்கான அரசின் திட்டங்கள் மற்றும் மானியங்கள் உள்ளிடவைகள் குறித்தும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே எடுத்துக் கூறியும், துண்டு பிரசுரங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளது.

இந்நிகழ்வில், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி க.விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) திருமதி சுமதி மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News