25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அரசு மருத்துவமனைகளில் குடி மற்றும் போதை சிகிச்சைக்கான பிரிவு மூலம் உள்நோயாளிகளாக தற்போது வரை  95 நோயாளிகள் மனநல மருத்துவர்கள் மூலம் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரசு மருத்துவமனைகளில் குடி மற்றும் போதை சிகிச்சைக்கான பிரிவு மூலம் உள்நோயாளிகளாக தற்போது வரை 95 நோயாளிகள் மனநல மருத்துவர்கள் மூலம் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர்

விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின்படி 2024-ம் ஆண்டு கடந்த மார்ச் மாதம் இராஜபாளையம், விருதுநகர் மற்றும் காரியாபட்டி அரசு மருத்துவமனைகளில் குடி மற்றும் போதை சிகிச்சைக்கான உள்நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டது.
அரசு மருத்துவமனை, இராஜபாளையத்தில் 6 படுக்கை வசதியுடனும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விருதுநகரில் 5 படுக்கை வசதியுடனும் மற்றும் அரசு மருத்துவமனை, காரியாபட்டியில் 4 படு;க்கை வசதியுடனும் செயல்பட்டு வருகிறது. இதில் உள்நோயாளிகளாக தற்போது வரை  95 நோயாளிகள் மனநல மருத்துவர்கள் மூலம் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர்.
உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெற்ற அனைவரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் மற்றும் மாவட்ட மனநலத் திட்டத்தின் கீழ் தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் உள்ளனர். மேலும், மாவட்டத்தில் உள்ள குடி மற்றும் போதை தொடர்பான சிகிச்சை தேவைப்படுவோர்  போதை சிகிச்சை பிரிவினை  பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் மனநலம் சம்பந்தமான ஆலோசனைக்கு மாவட்ட மனநல ஆலோசனை மையம் கைபேசி எண்:8300263423 –ஐ தொடர்பு கொள்ளலாம் என   மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள்  தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News