25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 27, 2024

கிருஷ்ணன்கோவில் அரசு மாதிரி பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் அரசு மாதிரி பள்ளியில் (26.09.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.நமக்கு கனவுகள் என்பது அதிகமாக இருக்கின்றது. கனவுகள் அடைய வேண்டும் என்றால் நம்பிக்கை, விடாம முயற்சி மற்றும் கடின உழைப்பு வேண்டும் என்பதை எல்லாம் விட தங்களுக்கு கனவுகளை அடைய வேண்டும் என்றால் நாம் அனைவரும் நன்கு படிக்க வேண்டும். அப்பொழுது தான் நம்முடைய உழைப்பிற்கு ஏற்ப பலன் உண்டு. அந்த பலன் கல்வியில் மிக அதிகமாக இருக்கும்.நீங்கள் ஒவ்வொரு நாளும் படிக்க படிக்க தான் முன்னேறி செல்வீர்கள். இன்றைக்கு அரசு பள்ளியில்; ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது மிகப்பெரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பு முன்பு இல்லை. ஏனென்றால் நம்முடைய கல்வி முறை  என்பது மாறி கொண்டே இருக்கும். அதாவது மருத்துவத்துறையில்,; கடந்த 50 வருடங்களில் 10 முறை மாற்றம் வந்துள்ளது. அதனால் நாம் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.நீங்கள் ஒவ்வொருவரின் உழைப்புக்கும் மிகப்பெரிய ஊதியம் காத்துக் கொண்டிருக்கிறது. அதனால், நீங்கள் எந்த அளவு உழைக்கின்றீர்களோ அந்த அளவுக்கு உயர்வீர்கள். பன்னிரண்டாம் வகுப்பில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானதாக இருக்கும் மற்றும் ஒவ்வொரு மணி நேரமும் நீங்கள் தேர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள். அதனை நீங்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.ஒருமுறை தேர்வு எழுதினால் மறுபடியும் அந்த வாய்ப்பு நமக்கு கிடைக்காது. ஒவ்வொரு மணி நேரமும் உங்களுக்கு ஒரு தங்க முட்டை போன்றது. அதனை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த ஒவ்வொரு மணி நேரமும் தங்களுக்கு திரும்ப கிடைக்காது எனவும், மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து பெரிய  அளவில் சாதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், வட்டாட்சியர், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Sep 27, 2024

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து நகராட்சி அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து நகராட்சி அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் (26.09.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Sep 27, 2024

காந்தி ஜெயந்தி தினமான 02.10.2024 அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது

விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி தினமான 02.10.2024 - அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.• கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். (01.04.2024 முதல் 30.09.2024 வரை)• கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல்.(2023-2024).• தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல்.• மக்கள் திட்டமிடல் இயக்கம்  குறித்து விவாதித்தல்.• மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம் குறித்து விவாதித்தல்.• ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவாதித்தல்.• இதர பொருட்கள்  குறித்து விவாதித்தல்.எனவே, 02.10.2024 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 27, 2024

வீர விருது பெற்றோர், போரில் உயிர் தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோரை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த வீர விருது பெற்றோர், போரில் உயிர்தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படைவீராகள் மற்றும் படையில் பணிபுரிவோர்களை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் 30.09.2024 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது.எனவே, விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த வீரவிருது பெற்றோர், போரில் உயிர்தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள் மற்றும் படைவீரர்களை சாந்தோர்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தங்களது அடையாள அட்டை நகலுடன் தங்கள் குறைகள் குறித்த மனுவுடன் (இரட்டை பிரதிகளில்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து விண்ணப்பம் வழங்கி பயனடைறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள்  கேட்டுக்கொண்டுள்ளார்.

Sep 26, 2024

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் 2024-2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில்,  (25.09.2024) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத்தலைவர்/ விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் தலைமையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர் செயலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.நவாஸ்கனி  அவர்கள், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீகுமார் அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.மத்திய அரசு திட்டங்கள் மற்றும் அதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட அளவில் கண்காணித்து நிறைவேற்றுவது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் (DISHA)  பணியாகும். மத்திய அரசின் திட்டப்பணிகளை செயல்படுத்தும்போது ஏற்படும் இடர்களை சரியான நேரத்தில் களைந்து அதற்கான தீர்வுகளை கண்டு பணிகளை சிறப்பாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டியாக இந்தக்குழு செயல்படுகிறது.விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணித்திடும் பொருட்டு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம் காலாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம் இன்று நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களிடம் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட பொது விநியோகத்திட்டம், டிஜிட்டல் இந்தியா - பொது தகவல் மையம், நில ஆவணங்கள் கணினி மயமாக்குதல், தேசிய நெடுஞ்சாலை- மத்திய சாலைதிட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், மதிய உணவு திட்டம், பிரதம மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (PMAY(G)  தூய்மை பாரத இயக்கம் (கி) (SBM(G) ஜல் ஜீவன் மிஷன் திட்டம், பிரதம மந்திரி கிராம முன்னேற்றத் திட்டம்(PMAGY) பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (PMGSY),    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்தார இயக்கம், தூய்மை பாரத இயக்கம்  - மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் (SBM) அம்ருத் திட்டம், அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டம், இராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா (RKVY),  பரம்பரக்கத் கிருஷி விகாஸ் யோஜனா (PMVY)  நீர்வடிப் பகுதிகளில் பருவநிலை பாதுகாப்புத் திட்டம், மண் வள அட்டை  இயக்கம், பிரதான் மந்திரி கிரிஷ் சஞ்சாயி யோஜனா இயக்கம், பிரதம மந்திரி விவசாய நீர்பாசனத் திட்டம் (PMKSY),  தேசிய விவசாய வளர்ச்சித் திட்டம் (NADP),  தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம்(e-NAM), தேசிய நலக் குழுமம், பிரதம மந்திரி கனிஜ் சேஷ்த்ரா கல்யாண் யோஜனா(PMKKY), மாவட்ட கனிம வள நிதி, தேசிய சமூக நலத்திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டம், தேசிய செயற்கை முறை கரூவூட்டல் திட்டம், தேசிய கால்நடை இயக்கம், உட்பட பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு  மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.இக்கூட்டத்தில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் நன்றாக உள்ளது எனவும், அதேபோன்று மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவினை அந்தந்த பள்ளி தலைமையாசிரிகள் ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்ட்டது.மேலும், அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திட வேண்டும் எனவும், பதிவு செய்துள்ள குழந்தைகள் தொடர்ச்சியாக அங்கான்வாடி வருவதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும்,மாவட்ட திறன் பயிற்சி  அலுவலகம் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, தனியார் நிறுவனங்களின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு, வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி கௌசல் விகாஷ் யோஜனா திட்டம் குறித்து விழிப்புணர்வையும், முகாம்களையும் நடத்தி, அதிக நபர்கள் பயன்பெறுவதை உறுதி செய்திட வேண்டும் எனவும், தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.மேலும், மேற்கண்ட திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளில் என்னென்ன சிரமங்கள் உள்ளது என்பது குறித்தும், என்னென்ன திட்டங்களுக்கு நிதி வராமல் நிலுவையில் உள்ளது என்பது குறித்தும், புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் ஆகியவை குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் அது குறித்து, சம்பந்தப்பட்ட துறை மத்திய அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நமது மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் அனைத்தும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அரசு அலுவலர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி, நமது மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல  அனைவரின் ஒத்துழைப்பை நல்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ப்ரியா ரவிச்சந்திரன்.,இ.ஆ.ப., திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, உட்பட அனைத்து நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Sep 26, 2024

செவலூர் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம் செவலூர் ஊராட்சியில்  (25.09.2024) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்

Sep 26, 2024

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம்

மாவட்டத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம் செப்டம்பர் 20-ம் தேதி முதல் அந்தந்த வட்டார பஞ்சாயத்து அலுவலகங்களில் விடுபட்ட பயனாளிகளுக்கு புதியதாக பதியப்பட்டு வருகிறது. இதுவரை இம்முகாமில் 2710 பயனாளர்கள் கலந்து கொண்டனர், அதில் 1978 பயனாளர்களுக்கு புதியதாக மருத்துவ காப்பீட்டு அட்டை பதியப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், ஊராட்சி மன்ற  அலுவலகங்களில் முகாம்கள் நடைபெற இருக்கிறது.அதன்படி, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 25.09.2024 அன்று கஞ்சநாயக்கன்பட்டியிலும், 26.09.2024, 27.09.2024 மற்றும் 28.09.2024 ஆகிய தினங்களில் பாளையம்பட்டியிலும், 30.09.2024 மற்றும் 01.10.2024 ஆகிய தினங்களில் பாலவநத்தத்திலும், 03.10.2024 மற்றும் 04.10.2024 ஆகிய தினங்களில் சூலக்கரையிலும், 05.10.2024 மற்றும் 07.10.2024 ஆகிய தினங்களில் குல்லூர்சந்தையிலும், 08.10.2024 அன்று புலியூரானிலும், 09.10.2024 அன்று கோவிலான்குளத்திலும், 10.10.2024 அன்று ஆத்திபட்டியிலும்,காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 25.09.2024 அன்று முஷ்டக்குடிறிச்சியிலும், 26.09.2024 அன்று அரசகுலத்திலும், 27.09.2024 அன்று காட்டுகுத்தகை கரிசல்குளத்திலும், 28.09.2024 அன்று வரலொட்டியிலும், 30.09.2024 அன்று குரண்டியிலும், 01.10.2024 அன்று ஜோகில்பட்டியிலும், 03.10.2024 அன்று மேலகல்லங்குளத்திலும், 04.10.2024 அன்று வி.நாங்கூரிலும், 05.10.2024அன்று நந்திக்குண்டுவிலும், 07.10.2024 அன்று எஸ்.மறைக்குளத்திலும், 08.10.2024 அன்று மந்திரியோடையிலும், 09.10.2024 அன்று புளியம்பட்டியிலும்,10.10.2024 அன்று முடுக்கன்குளத்திலும்,நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 25.09.2024 அன்று ஆணைக்குளத்திலும், 26.09.2024 அன்று செம்மனேந்தலிலும், 27.09.2024 அன்று மானூரிலும், 28.09.2024 அன்று பிள்ளையார்குளத்திலும், 30.09.2024 அன்று எருமைக்குளத்திலும், 01.10.2024 அன்று கட்டனூரிலும், 03.10.2024 அன்று பனையூரிலும், 04.10.2024 அன்று அகத்தக்குளத்திலும், 05.10.2024 அன்று புல்வாய்க்கரையிலும், 07.10.2024 அன்று அத்திகுளத்திலும், 08.10.2024 அன்று செம்பொன்னேறுஞ்சிலும், 09.10.2024 அன்று இருஞ்சிறையிலும், 10.10.2024 அன்று இலுப்பையூரிலும்,இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 25.09.2024 மற்றும் 26.09.2024 ஆகிய தினங்களில் முகவூரிலும்,  27.09.2024 மற்றும் 28.09.2024 ஆகிய தினங்கள் சேத்தூரிலும், 30.09.2024, 01.10.2024 மற்றும் 03.10.2024 ஆகிய தினங்களில் அயன்கொல்லங்கொண்டானிலும், 04.10.2024 மற்றும் 05.10.2024 ஆகிய தினங்களில் அய்யனாபுரத்திலும், 07.10.2024 மற்றும் 08.10.2024 ஆகிய தினங்களில்  சொக்கநாதன்புத்தூரிலும், 09.10.2024 அன்று கிருஷ்ணாபுரத்திலும், 10.10.2024 அன்று சுந்தரநாச்சியார்புரத்திலும்,சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 25.09.2024 மற்றும் 26.09.2024 ஆகிய தினங்களில் சத்திரப்பட்டியிலும், 27.09.2024 மற்றும்  28.09.2024 ஆகிய தினங்களில் முத்துராமலிங்கபுத்திலும், 30.09.2024 மற்றும் 01.10.2024 ஆகிய தினங்களில் என்.ஜி.ஓ.காலனியிலும், 03.10.2024 அன்று பந்துவார்பட்டியிலும், 04.10.2024 மற்றும் 05.10.2024 ஆகிய தினங்களில் சின்னக்காமன்பட்டியிலும், 07.10.2024 அன்று கோல்வார்பட்டியிலும், 08.10.2024அன்று கத்தாலம்பட்டியிலும், 09.10.2024 அன்று மணிப்பாறைப்பட்டியிலும், 10.10.2024 அன்று மேலமடையிலும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 25.09.2024 மற்றும் 26.09.2024 ஆகிய தினங்கள்; நாரணாபுரத்திலும், 27.09.2024 மற்றும் 28.09.2024 ஆகிய தினங்களில் மீனம்பட்டியிலும்,  30.09.2024 மற்றும் 01.10.2024 ஆகிய தினங்களில் மாரனேரியிலும், 03.10.2024 அன்று அனுப்பன்குளத்திலும், 04.10.2024 அன்று கட்டளைப்பட்டியிலும், 05.10.2024 அன்று ஈஞ்சாரிலும், 07.10.2024 அன்று நடையனேரிலும், 08.10.2024 அன்று மேலஆமத்தூரிலும், 09.10.2024 அன்று துரைச்சாமிபுரத்திலும், 10.10.2024 அன்று பேராபட்டியிலும் நடைபெறவுள்ளது.மேலும், திருவில்லிபுத்தூர்  ஊராட்சி ஒன்றியத்தில்; 25.09.2024  மற்றும் 26.09.2024 ஆகிய தினங்களில் சிவந்திப்பட்டியிலும், 27.09.2024, 28.09.2024 மற்றும் 30.09.2024 ஆகிய தினங்களில் மம்சாபுரத்திலும், 01.10.2024 மற்றும் 03.10.2024 ஆகிய தினங்கள்; மல்லியிலும், 04.10.2024 அன்று அச்சகுளத்திலும், 05.10.2024 மற்றும் 07.10.2024 ஆகிய தினங்களில் அத்திக்குளம் செங்குளத்திலும், 08.10.2024 அன்று இடையன்குளத்திலும், 09.10.2024 அன்று முள்ளிக்குளத்திலும், 10.10.2024 அயன்நாச்சியார் கோவிலிலும்,திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில், 25.09.2024 அன்று ம.ரெட்டியபட்டியிலும், 26.09.2024 மற்றும் 27.09.2024 ஆகிய தினங்களில் கல்லூரணியிலும், 28.09.2024 மற்றும் 30.09.2024 ஆகிய தினங்களில் முத்துராமலிங்கபுரத்திலும், 01.10.2024 மற்றும் 03.10.2024 ஆகிய தினங்களில் பூலங்களிலும், 04.10.2024 அன்று சவாசபுரத்திலும், 05.10.2024 அன்று தொப்பலாக்கரையிலும், 07.10.2024 அன்று காளையார் கரிசல்குளத்திலும், 08.10.2024 அன்று  தமிழ்பாடியிலும், 09.10.2024 அன்று குலேசகரநல்லூரிலும் 10.10.2024 அன்று வேலாயுதபுரத்திலும்,வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 25.09.2024 முதல்; 28.09.2024 வரை ஏழாயிரம்பண்ணையிலும், 30.09.2024, 01.10.2024 மற்றும் 03.10.2024 ஆகிய தேதிகளில் வெம்பக்கோட்டையிலும், 04.10.2024 மற்றும் 05.10.2024 ஆகிய தேதிகளில் விஜயகரிசல்குளத்திலும், 07.10.2024 மற்றும் 08.10.2024 ஆகிய தேதிகளில் செவல்பட்டியிலும், 09.10.2024 அன்று விஜயரெங்கபுரத்திலும், 10.10.2024 அன்று ஆலங்குளத்திலும், விருதுநகர்  ஊராட்சி ஒன்றியத்தில், 25.09.2024 அன்று சத்திரரெட்டியபட்டியிலும், 26.09.2024 மற்றும் 27.09.2024 ஆகிய தினங்கள் ரோசல்பட்டியிலும், 28.09.2024 மற்றும் 30.09.2024 ஆகிய தினங்களில் ஆவுடையாபுரத்திலும், 01.10.2024 மற்றும் 03.10.2024 ஆகிய தேதிகளில் தம்மநாயக்கன்பட்டியிலும், 04.10.2024 மற்றும் 05.10.2024 ஆகிய தேதிகளில் சிவஞானபுரத்திலும், 07.10.2024 மற்றும் 08.10.2024 ஆகிய தேதிகளில் காசிரெட்டியபட்டியிலும், 09.10.2024 அன்று வி.முத்துலிங்கபுரத்திலும், 10.10.2024 அன்று செங்குன்றாபுரத்திலும்,வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில், 25.09.2024 முதல் 27.09.2024 வரை கூமாப்பட்டியிலும், 28.09.2024, 30.09.2024 மற்றும் 01.10.2024 ஆகிய தேதிகளில் சுந்தரபாண்டியத்திலும், 03.10.2024, 04.10.2024 மற்றும் 05.10.2024 ஆகிய தேதிகளில் குன்னூரிலும், 07.10.2024 முதல் 09.10.2024 வரை மகாராஜபுரத்திலும், 10.10.2024 அன்று ரெங்கப்பநாயக்கன்பட்டியிலும் புதியதாக மருத்துவ காப்பீட்டு அட்டை பதிவு செய்யும் முகாம்கள் நடைபெற உள்ளது.எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இம்முகாமில் இதுவரை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யாமல் இருப்பவர்கள் கலந்து கொண்டு, காப்பீட்டு அட்டை பதிவு செய்து பயன்பெறுமாறும், இம்முகாமிற்கு வருபவர்கள் குடும்ப அட்டை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை அசல் மற்றும் நகல் எடுத்து வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் விபரங்களுக்கு தொலைபேசி எண் 73730-04974-யை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Sep 25, 2024

தேசிய நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில்,  (24.09.2024) பசுமை தமிழக தினத்தை முன்னிட்டு, திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இணைந்து நடத்திய தேசிய நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் மரக்கன்றுகள் நட்டு  துவக்கி வைத்தார்.கடந்த சில நாட்களாக நிலவும் வெப்பநிலை என்பது இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாக இருந்து வருகிறது.   இதற்கு முன்பாக இந்த தேதியில், இந்த மாதத்தில் அதிகமான வெப்பநிலை இதுவரை பதிவாகவில்லை. நாட்டிலேயே அதிகமான வெப்பநிலை நேற்றைய முந்தைய தினம் மதுரையில் இருந்தது.இதெல்லாம்  பருவநிலை  மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை காட்டுகிறது. குறிப்பாக தமிழ்நாடு அதிகப்படியாக நகர்ப்புறமாக வளர்ச்சி அடையக்கூடிய மாநிலமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 50 சதவீதத்திற்கும் மேலான மக்கள் நகரப்புறங்களில் தான் வசிக்கிறார்கள்.  2030ல் இது  70 சதவிகிதமாக மாறி விடும் என்கிறார்கள்.  வரும் 2040-ல் ஏறத்தாழ 90 சதவீதமான மக்கள் நகர்ப்புற பகுதிகளில் தான் வசிப்பார்கள். அதனால் நகரத்தின் மீது அவற்றின் இயற்கை வளங்களின் மீது நாம் தரக்கூடிய அழுத்தம் என்பது மிக அதிகமாக இருக்கின்றது. இட நெருக்கடி, சுற்றுச்சூழல், தனிமனித சுகாதாரத்தை ஒட்டி வரக்கூடிய பிரச்சினைகள் அதிகமாகும்.   நகரமயமாகும் போது அதற்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் போது உடனடியாக இது  சுற்றுச்சூழலை பாதித்து பருவநிலை மாற்றத்தை உண்டாக்கும். எனவே நாம் வாழக்கூடிய பூமியில் இந்த பூமியை வாழ்வதற்கு ஏற்ப மாற்ற வேண்டுமானால், உரிய பசுமை பரப்பை நாம் வைத்திருக்க வேண்டும். ஒரு நாட்டில் 33 சதவீதம் பசுமை பரப்பு இருக்க வேண்டும். மூன்றில் ஒரு பகுதி காடுகளாக இருக்க வேண்டும். இது விருதுநகர் மாவட்டத்தில் 10 விழுக்காடுக்கும் குறைவாகவே இருக்கிறது.மரக்கன்றுகளை நடுதலை தினந்தோறும்  மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் அவர்கள் எந்த துறையில் பணிபுரிபவராக இருந்தாலும், அதை ஒட்டி நம்மால் முயன்ற அளவிற்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு மரம் நடுதலை அதிகப்படியான எண்ணிக்கையில் மேற்கொள்ள வேண்டும். மரம் நடுவதோடு மட்டுமல்லாமல் அதை ஓராண்டுக்காவது பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Sep 25, 2024

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம் செப்டம்பர் 20-ம் தேதி முதல் அந்தந்த வட்டார பஞ்சாயத்து அலுவலகங்களில் விடுபட்ட பயனாளிகளுக்கு புதியதாக பதியப்பட்டு வருகிறது. இதுவரை இம்முகாமில் 2710 பயனாளர்கள் கலந்து கொண்டனர், அதில் 1978 பயனாளர்களுக்கு புதியதாக மருத்துவ காப்பீட்டு அட்டை பதியப்பட்டுள்ளது. மேலும் கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ள ஊராட்சிகளின் ஊராட்சிமன்ற அலுவலகங்களில் முகாம் நடைபெற இருக்கிறது. மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய 73730-04974- என்ற தொலைபேசி எண்னை தொடர்பு கொள்ளலாம். இம்முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Sep 25, 2024

இந்திய இரயில்வே தேர்வு வாரியம் (RRB) மூலம் அறிவிக்கப்பட்டுள்ள Non-Technical Popular Categories(NTPC) பணியிடங்களுக்கு ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு

இந்திய இரயில்வே தேர்வு வாரியம் (RRB) மூலம் அறிவிக்கப்பட்டுள்ள Non-Technical Popular Categories(NTPC) பன்னிரெண்டாம் வகுப்பு கல்வித்தகுதிக்கு (3445 பணிக்காலியிடங்கள்) மற்றும் பட்டப்படிப்பு கல்வித்தகுதிக்கு (8113 பணிக்காலியிடங்கள்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்போட்டித் தேர்வுக்கு முறையே 20.10.2024 மற்றும் 13.10.2024-ஆகிய தேதிக்குள் www.rrbchennai.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள ஆர்வலர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு 27.09.2024 அன்று விருதுநகர் இந்து நாடார் செந்திக்குமார நாடார் கல்லூரியில் காலை 09.30 மணி முதல் நடைபெற இருக்கிறது. இவ்வகுப்பில் திறன் வாய்ந்த பயிற்றுநர்கள் கலந்து கொண்டு தேர்வு குறித்த அடிப்படை பயிற்சி மற்றும் தேர்வு குறித்த ஐயங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் விருதுநகர் இந்து நாடார் செந்திக்குமார நாடார் கல்லூரிக்கு நேரில் வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை 93601-71161 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். எனவே இப்போட்டித் தேர்வுக்கு தயாராகும் ஆர்வலர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 68 69

AD's



More News