விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காரிசேரி கிராமத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் முன்னிலையில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் (08.07.2026) நடைபெற்றது.இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 1 பயனாளிக்கு ரூ.1 இலட்சம் மதிப்பிலான விபத்து நிவாரண உதவித்தொகையையும், 155 பயனாளிகளுக்கு ரூ.56.79 இலட்சம் மதிப்பில் இணைய வழி பட்டாக்களையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.26,000/- மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் தேய்ப்பு பெட்டிகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.13,000/- மதிப்பில் தையல் இயந்திரங்களையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் 4 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு ரூ.8000/- மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்களையும், வேளாண்மைத்துறையின் சார்பில், 6 பயனாளிகளுக்கு ரூ.48,374/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத் துறையின் சார்பில், 3 பயனாளிகளுக்கு ரூ.71,300/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டைகளையும் என மொத்தம் 177 பயனாளிகளுக்கு ரூ.59.46 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும் அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டும், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மூலம் பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டும் வருகிறது.தமிழக அரசின் சிங்கபெண் அதிரடிப்படை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுத்து, துரிதமாகச் செயல்பட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் காவல் உதவியை, 1091 என்ற உதவி எண் மூலம் நேரடியாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடர்பு கொள்ளலாம்.விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டிற்கான வேலை நாட்கள் 100-லிருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வேலை நாட்களும் ஊதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சரியான பணியினைத் தேர்வு செய்து கிராமப்புறக் குடும்பங்களுக்கு பணி வழங்கப்படும்.எல் நினோ மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கையாக தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கவும், விவசாய உற்பத்தியில் கவனம் செலுத்தவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிட சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.எனவே, பொதுமக்கள் இதுபோன்று பல்வேறு துறைகள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து கொண்டு, பயன்பெற வேண்டுமெனவும், மற்றவர்களுக்கும் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர்) திரு.ரவி மீனா இ.வ.ப., சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,இ.ஆ.ப., தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கு.மோகனா, சிவகாசி வட்டாட்சியர், அரசு அலுவலர்கள், உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும், மற்றும் தன்னார்வ இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளுடன் "நீங்களும் கலெக்டர் ஆகலாம்" என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் இன்று(07.07.2026) குழந்தைகளுக்கு ஊக்க உரையுடன் கலந்துரையாடினார்.விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர்நீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம் 2015, இன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் இல்லங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கீழ் 8 குழந்தைகள் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது.இக்குழந்தைகள் இல்லங்களில் தற்போது 171 (ஆண் - 79, பெண்- 92) குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளில் ஆதார், பிறப்புச்சான்று, சாதிச்சான்று மற்றும் வங்கிக்கணக்குகள் இல்லாத குழந்தைகளுக்கு அதற்கான சான்றுகளை பெற்றுத்தருவது தொடர்பாக சிறப்பு முகாம் 07.07.2026 இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.மேலும், இம்முகாமில் கலந்து கொண்ட இல்லங்களிலுள்ள குழந்தைகள் மற்றும் இல்ல நிர்வாகிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குழந்தைகளை தனது அலுவலக அறையில் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, "நீங்களும் கலெக்டர் ஆகலாம்" என்று ஊக்கமூட்டும் வகையில் அறிவுரை வழங்கி, உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து, அதனை அடைய விடாமுயற்சியுடன் கல்வி கற்று முன்னேற வேண்டும் என தெரிவித்தார். மாவட்ட ஆட்சித்தலைவரின் ஊக்கமளிக்கும் வார்த்தைகள் குழந்தைகளிடையே தன்னம்பிக்கையையும், உயர்ந்த இலட்சியங்களை நோக்கி பயணிக்கும் உற்சாகத்தையும் ஏற்படுத்தின.இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி, அரசு அலுவலர்கள், குழந்தைகள், பாதுகாவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பேரூராட்சி பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் (07.07.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது, வத்திராயிருப்பில் நெடுஞ்சாலைத்துறை(கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சார்பில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிய புறவழிச்சாலை அமைக்கும் பணியினையும், சமூக நீதி விடுதியில் மாணவர்களின் தங்குமிடம், கழிவறை வசதிகள், விடுதி வளாகத்தின் தூய்மை, வழங்கப்படும் உணவின் தரம், தங்குமிடம் மற்றும் பிற அடிப்படை வசதிகள் குறித்தும், வத்திராயிருப்பு பேரூராட்சி, 12 ஆவது பகுதியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளையும், பண்டாரக்குடி தெரு, 1 வது பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீரில் குளோரின் அளவு குறித்தும், இந்து தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளையும், மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு உட்கொண்டும் ஆய்வு செய்தார்.பின்னர், வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்திலும், இ-சேவை மையத்திலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் தொடர்பாக நடைபெற்ற கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பினையும் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.பேரூராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மையின் கீழ் ஈரமான திடக்கழிவு, உலர்ந்த திடக்கழிவு, சுகாதார திடக்கழிவு, சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய திடக்கழிவு என நான்கு வகையாக தரம் பிரித்து பெற வேண்டும் எனவும், இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் சுகாதாரமானதாகவும், சுவையாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அனைத்து பகுதிகளுக்கும் குடிநீரை தட்டுப்பாடின்றி வழங்கிட வேண்டும் எனவும், அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீர்வு வழங்க வேண்டும் எனவும்,இ-சேவை மையங்களில் விண்ணப்பங்கள் உரிய காலக் கெடுவுக்குள் பரிசீலித்து, சான்றிதழ்கள் தாமதமின்றி வழங்கிட வேண்டும் எனவும், மேலும், இப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் மற்றும் சேவைகள் பொதுமக்களுக்கு முறையாக சென்றடைவதை தொடர்புடைய அரசு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் துறை அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது வட்டாட்சியர், பேரூராட்சி செயல் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
தமிழக அரசு மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வேலைதேடும் இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்காக 25 % மானியத்தில் தொழில் கடனுதவி வழங்கி வருகிறது.இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற 18 முதல் 45 வயது வரையுள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், சிறப்பு பிரிவினரான ஆதி திராவிடர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநர் ஆகியோர்கள் 55 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.கல்வித் தகுதி குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். (மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது). குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000 -க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.இத்திட்டத்தின் கீழ் வியாபாரத் தொழில்களுக்கு மட்டும் அதிகப்பட்ச தொகையாக ரூ.15.00 இலட்சம் வரை கடனுதவியாகப் பெறலாம். இக்கடனுக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் மானியமாக பெற்று பயன்பெறலாம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டு வருவதால் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து அரசு மான்யத்தை பெற்று பயன்பெறலாம்.மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தொழில் மையத்தினை நேரிலோ அல்லது (04562-252739) என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S , அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (06.07.2026) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற “இளம் பேரிடர் நண்பன்”- (Yuva Aapda Mitra Volunteers Training) பயிற்சி பெற்ற 355 தன்னார்வலர்களுக்கு வழங்குவதற்காக வரப்பெற்ற பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் பார்வையிட்டார். இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது அரசின் மீட்புப் படையினர் வருவதற்கு முன்பாக, உயிர்ச்சேதத்தைக் குறைக்கவும், துரிதமாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், “இளம் பேரிடர் நண்பன்” என்ற தலைப்பில் என்.சி.சி (NCC), என்.எஸ்.எஸ் (NSS), மை பாரத் (My Bharath) தன்னார்வலர்களுக்கு ஒரு வார காலம் உறைவிட பயிற்சி விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரியில் மற்றும் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் 01.07.2026 முதல் 07.07.2026 வரை நடைபெற்று வருகிறது.விருதுநகரில் 200 தன்னார்வலர்கள் மற்றும் சிவகாசியில் 155 தன்னார்வலர்கள் என மொத்தம் 355 தன்னார்வலர்களுக்கு வழங்குவதற்காக தலா ரூ.8,500/-வீதம் மொத்தம் ரூ.30.17 இலட்சம் மதிப்பில் 16-வகையான பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படவுள்ளது.இந்த பாதுகாப்பு உபகரணங்களில் தனிநபர் மிதக்கும் சாதனம் (பாலியூரிதேன் நுரையால் செய்யப்பட்ட உயிர் காப்பு அங்கி) (Personal Floatation Device (Life Jacket made of Polyurethane foam), 2 டார்ச் அல்லது அவசரகால விளக்கு (சூரிய சக்தியில் இயங்குவது) (Torch or emergency light (solar enabled), பாதுகாப்புக் கையுறைகள் (Safety Gloves (Leather), Pocket Knife, முதலுதவிப் பெட்டி (காயக்கட்டுத் துணிகள், பஞ்சு, கிருமிநாசினி களிம்புகள், கத்தரிக்கோல், இடுக்கி, கையுறைகள், சிபிஆர் முகமூடிகள், பிளவுக்கட்டுகள், இரத்தப்போக்கை நிறுத்தும் கட்டுகள்) First Aid kit (Bandages, cotton, antiseptic creams, scissors, tweezers, gloves, CPR masks, splints, tourniquets)), எரிவாயு பற்றவைப்பான் (Gas Lighter), விசில் (Whistle), தண்ணீர் புட்டி (Water Bottle), முதுகுப்பை மற்றும் கொசுவலை (Rucksack and Mosquito net Red colour uniform Dress with NDMA logo backside and SDMA logo front she and tracksuit (2 set)) (பின்புறத்தில் NDMA சின்னமும், முன்புறத்தில் SDMA சின்னமும் கொண்ட சிவப்பு நிற சீருடை மற்றும் டிராக்சூட் (2 செட்)), நீர் புகாத உடை / மழை அங்கி (Water Resistant Clothing / Rain coat), கம் பூட்ஸ் (Gum Boots), பாதுகாப்புக் கண்ணாடிகள் (Safety Goggles), பாதுகாப்புத் தலைக்கவசம் (நீர் புகாதது) ராஃப்டிங்) (Safety Helmet (Water Rafting)), தூசி எதிர்ப்பு முகக்கவசம் (Dust Resistant Mask), பிரதிபலிப்பு ஜாக்கெட்(Reflective Jacket) உள்ளிட்ட 16 தொகுப்புகள் உள்ளன. இதன் மூலம் இயற்கை இடர்பாடு காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைக்கு உபகரணங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மைத்துறை) திரு.சோனையன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (06.07.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.4.16 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S,. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன.மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.4.16 இலட்சம் மதிப்பிலான செயற்கை கால்களை வழங்கினார்.தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 670 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சேவைகளைப் பெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கு.மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் தொடர்பு திட்ட முகாம் 08.07.2026 அன்று சிவகாசி வட்டம், காரிசேரி கிராமத்தில் உள்ள கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா , I A S., அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.ஒவ்வொரு மாதமும் 2-ஆவது புதன்கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், 08.07.2026 அன்று சிவகாசி வட்டம், காரிசேரி கிராமத்தில் உள்ள கலையரங்கத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் மனுக்கள் வழங்கி தீர்வு பெறலாம். ஏற்கனவே, பெறப்பட்ட மனுவின் மீது தீர்வு காணப்பட்டு, தகுதியுள்ள மனுதாரர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் தம்மநாயக்கன்பட்டி புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (04.07.2026) ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் கடன் விவரங்கள், உரிய தேதியில் திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வட்டி சலுகைகள், மானியங்கள், விவசாய நகைக் கடன்கள் உள்ளிட்டவை குறித்தும், சங்கத்தின் கணக்குகள், தணிக்கை விவரங்கள், கணிணி மயமாக்கல் பணிகள் குறித்தும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.அதனைத் தொடர்ந்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு விண்ணப்பங்கள் உரிய காலக் கெடுவுக்குள் பரிசீலிக்கப்படுகிறதா, சான்றிதழ்கள் தாமதமின்றி வழங்கப்படுகிறதா, பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா, கணினி மற்றும் இணைய வசதிகள் முறையாக செயல்படுகிறதா, பணியாளர்களின் சேவை தரம் திருப்திகரமாக உள்ளதா உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.மேலும், பொதுமக்கள் சிரமமின்றி அரசு சேவைகளைப் பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இந்த ஆய்வின் போது சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், கே.புதூர் கிராமத்தில்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், வீட்டுமனை ஒதுக்கீடு உத்தரவுகள் பெற்ற 25 பயனாளிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (04.07.2026) வழங்கினார்.தமிழ்நாடு அரசு சொந்தமாக வீடு இல்லாமல் அரசின் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி வாழ வேண்டும் என்பதற்காக இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் ஏழை குடும்பங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யப்படுகிறது.இலவச மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு இல்லாமல் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்படுகிறது. மேலும், ஆக்கிரப்பு நிலத்திற்கு உண்டான பட்டாவையும் அரசே இலவசமாக வழங்கி வருகிறது.அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் விருதுநகர் வட்டம் கே.புதூர் கிராமத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த 25 குடும்பங்கள் இலவச வீட்டுமனை உத்தரவுகள் பெற்றுள்ளதாகவும்,இதுவரை இந்த இடங்களுக்கான பட்டா இல்லை என்பதால், இடங்களை அளவீடு செய்து, பட்டா வழங்கிடுமாறு கோரிக்கை வைத்தனர்.அதனடிப்படையில், அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து, 25 குடும்பங்களுக்கான இடங்களை அளவீடு செய்து, இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று வழங்கினார்.இந்த இடங்களுக்கான அரசு உத்தரவுகளை பெற்றிருந்தாலும், அரசு பட்டா இல்லாமல் சிரமப்பட்டு இருந்தோம். தற்போது எங்கள் அனைவருக்கும் எங்கள் இடங்களை தனித்தனியாக அளவீடு செய்து, இலவச பட்டாக்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கியது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது எனவும், இலவச பட்டா வழங்கியதன் மூலம் எங்களுக்கு இந்த இடத்திற்கான அரசு அங்கீகாரம் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்வின் போது, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.தேவசகாயம்,விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் திரு.ராஜாமணி, மண்டல துணை வட்டாட்சியர் திரு.பா.முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாறு தடுப்பணை அருகே சாத்தூர் இன்னர் வீல் கிளப் (SATTUR INNER WHEEL CLUB ) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் சார்பில், சாத்தூர் நகரின் வழியாகப் பாயும் வைப்பாறு நதியில் உள்ள முள்செடிகளை அகற்றி மரம் நட்டு பராமரிக்கும் பணிகளை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கடற்கரைராஜ் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (04.07.2026) தொடங்கி வைத்தார்.மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தோன்றும் நிசபா நதி, தேவியாறு, நகரியாறு, சீவலப்பேரியாறு மற்றும் காயல்குடியாறு ஆகிய சிற்றாறுகள் ஒன்றிணைந்து வெம்பக்கோட்டை அணைப் பகுதியில் வைப்பாறாக உருவாகின்றன. அங்கிருந்து விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக சுமார் 80 கிலோமீட்டர் பயணித்து வங்கக் கடலில் கலக்கின்றன. இந்நதி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கும், விவசாயத்திற்கும் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது.தற்போது சாத்தூர் நகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் வழியாகப் பாயும் சுமார் 2.50 கிலோமீட்டர் நீளமுள்ள வைப்பாற்றின் கரைகள் மற்றும் ஆற்றுப்பகுதிகளில், நீரோட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சீமைக் கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. மேலும், பொதுமக்களால் கொட்டப்படும் திடக்கழிவுகளால் ஆற்றின் சுற்றுச்சூழல் பெருமளவில் மாசடைந்துள்ளது.இதனைக் கருத்தில் கொண்டு, வைப்பாற்றை தூய்மைப்படுத்துதல், சீமைக் கருவேல மரங்கள் மற்றும் புதர்களை அகற்றுதல், ஆற்றங்கரைகளை சீரமைத்தல், மேலும் கரையோரங்களில் நாட்டுமரக் கன்றுகளை நட்டு பசுமையை உருவாக்குதல் ஆகிய பணிகளை சமூக நல நோக்கத்துடன் INNER WHEEL CLUB SATTUR என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் மேற்கொண்டுள்ளது.இந்த முயற்சியின் மூலம் சாத்தூர் பகுதியில் பாயும் வைப்பாறு தூய்மையான, இயற்கை வளம் மிக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆறாக மாற்றப்படுவதோடு, நீரோட்டம் மேம்பட்டு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கும் பெரும் பயன் கிடைக்கும்.அந்த வகையில் சாத்தூர் நகரின் வழியாகப் பாயும் வைப்பாறு நதியில் உள்ள முள்செடிகளை அகற்றிமரம் நட்டு பராமரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், செயற்பொறியாளர்(வைப்பாறு வடிநிலக் கோட்டம்) திருமதி மலர்விழி, சாத்தூர் நகர்மன்றத்தலைவர் திரு.குருசாமி, தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.