மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, விருதுநகரில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் 27.09.2024 முதல் 07.10.2024 வரை 11 நாட்களுக்கு காலை 10.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடைபெறவுள்ள விருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.இப்புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்புத்தக அரங்கில், கலை, இலக்கியம், வரலாறு, சரித்திரம், சமூகம், தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், உலக தலைவர்களினுடைய வரலாற்று பதிவுகள், குழந்தைகளுக்கு அறிவை வளர்ப்பதற்கு தேவையான புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம், தகவல் களஞ்சியம் ((Encyclopedia), தமிழக அரசினுடைய வேலைவாய்ப்புக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கான (TNPSC Guide) வழிகாட்டி புத்தகங்கள், IAS, IPS, IFS-படிப்பிற்கான வழிகாட்டி புத்தகங்கள், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பள்ளி புத்தகங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் ரூ.10/- முதல் ரூ.1000/- வரையிலான புத்தகங்கள் ஆயிரக்கணக்கான தலைப்பில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் ஒரே கூரையின் கீழ் குவிக்கப்பட்டுள்ளது.தொல்லியல் துறை மூலம் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி, தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் மூலம் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், மேற்கு தொடர்ச்சி மலை, அதில் வாழும் உயிரினங்கள் குறித்த கண்காட்சி அரங்கம், பழங்காலம் முதல் தற்போது வரை உள்ள நாணயங்கள் குறித்த கண்காட்சி மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய காப்பிய பூங்கா உள்ளிட்ட விளையாட்டு பகுதிகள் மற்றும் பல்வேறு வகையான உணவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும் மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், மூன்றாவது விருதுநகர் புத்தக திருவிழாவில் மேடைப் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள், கவிஞர்கள், முனைவர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய அரங்கு, கருத்தரங்கு மற்றும் பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி, (30.09.2024) அன்று ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (பயிற்சி/ மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்) மேலாண்மை இயக்குனர் மரு.இரா.ஆனந்தகுமார்,I A S., அவர்கள் எழுதிய “ நிழலும் நெகிழும்”;, ஒரு நிமிசம் ஒரு விசயம்”என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும், மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் திரு.கே.விவேகானந்தன்,இ.ஆ.ப., அவர்கள் “நிழலும் நெகிழும்” என்ற தலைப்பிலும், காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா.திருநாவுக்கரசு,இ.கா.ப., அவர்கள் “திருக்குறள்” என்ற தலைப்பிலும், பொதுச்செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மரு.த.அறம் அவர்கள் “ஒரே ஒரு பூமி” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்ற உள்ளனர். மேலும், பேச்சாளர் திரு.எஸ்.ராஜா அவர்களின் பாரம்பரியத்தை பெரிதும் போற்றுபவர் ஆண்களே, பெண்களே என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற உள்ளது.நாளை மறுநாள் 01.10.2024 அன்று திரு.பி.கே.பெரியமகாலிங்கம் அவர்கள் எழுதிய ரகசியம் என்ற நூல வெளியீட்டு நிகழ்ச்சியும், நாவலாசிரியர் திருமதி அ.வெண்ணிலா அவர்கள் “மரமும் மாதரும்” என்ற தலைப்பிலும், இந்து தமிழ் திசை நாளிதழ் முதுநிலை உதவி ஆசிரியர் கவிஞர் மு.முருகேஷ் அவர்கள் “குழந்தை இலக்கியத் தடத்தில்” என்ற தலைப்பிலும், கவிஞர் திருமதி கவிதா ஜவஹர் அவர்கள் “மண் பயனுற வேண்டும்” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.எனவே, இப்புத்தகத் திருவிழாவில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், (27.09.2024) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் “இரத்த சோகை இல்லாத கிராமம்” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழானை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் ஆகியோர் போதிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் 2024-25-ம் நிதி ஆண்டிற்கு “இரத்த சோகை இல்லாத கிராமம்” குறித்த சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழாவாக விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு ஊராட்சி அளவிலும், வட்டார அளவிலும், பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களைக் கொண்டு மாவட்ட அளவில் சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா இன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு. திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (27.09.2024) ஸ்ரீவித்யா கல்வியியல் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வரும் 30 கல்லூரி மாணவிகளுடனான "‘Coffee With Collector” என்ற 105- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவிகளுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 105 -வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.தமிழ் ஆர்வத்தை வளர்த்தல், சிறுகதை படைத்தல், படைப்பிலங்கியங்கள், தமிழ் அறிஞர்கள் குறித்தும் கல்லூரி மாணவிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் இலட்சியம் உண்டு. இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் கல்லூரியில் பயிலும் மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலக சுற்றுலா தினம் - 2024- னை முன்னிட்டு, “சுற்றுலாவும் அமைதியும்” (Tourism And Peace) என்ற கருத்துருவின் அடிப்படையில் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற கட்டுரை, ஓவியம் மற்றும் வினாடிவினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் (27.09.2024) வழங்கினார்.ஆண்டுதோறும் உலகம் முழுவதும் செப்டம்பர் 27 ஆம் நாள் உலக சுற்றுலா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இவ்வாண்டில் “சுற்றுலாவும் அமைதியும்” என்ற கருப்பொருளோடு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையின் சார்பாக விருதுநகர் அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து கடந்த 24.09.2024 மற்றும் 25.09.2024 ஆகிய நாட்களில் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் வினாடிவினாப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வின்போது, மாவட்ட சுற்றுலா அலுவலர், அரசு அலுவலர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகரில் உள்ள மாவட்ட மத்திய கூட்;டுறவு வங்கியில், (27.09.2024) நடைபெற்ற 33-ஆம் ஆண்டு பொதுப்பேரவைக் கூட்டத்தில் 33 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.83 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வழங்கினார்.வங்கியின் உடைய சேவைகள், பல்வேறு அரசினுடைய திட்டங்கள், வங்கிகளின் வாயிலாக பெறுவதாக இருந்தாலும், இப்படி எந்த ஒரு பணவர்த்தனைக்கும் வங்கிகளின் சேவை வழியாகத்தான் அதை பெற வேண்டும். அது தான் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான அடிப்படையானது என்றும், பல்வேறு வங்கிகளுடைய சேவைகள் கிராமப்புறங்களில் இருக்கிறது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் ஏறத்தாழ ஒன்றை லட்சம் மகளிர் சுய உதவிக்குழுவில் பெண்கள் இருக்கின்றனர். அதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறு சிறு தொழில்களை செய்யக்கூடிய தொழில் முனைவோர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலமாகவும் அல்லது மற்ற வணிக வங்கிகளின் மூலமாகவும் அதிகப்படியான கடன்களை வழங்குவதற்கு மிக முக்கியமான நடவடிக்கைகளை தற்போது ஏற்படுத்தி வருகிறோம்.அதில் கிராமப்புற பகுதிகளில் வணிக வங்கிகள் இல்லாத இடங்களில் கூட கூட்டுறவு சங்கங்களின் வழியிலும் மற்றும் நகர்புற பகுதிகளில் மத்திய வங்கிகளின்; கிளைகள் மூலமும் அதிகப்படியான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், தொழில்நுட்பங்கள் மாவட்ட கூட்டுறவு வங்கிகள்; மற்ற தொழில் வங்கிகளை ஒப்பிடும்போது குறைவாக இருக்கிறது. இதனை பல்வேறு திட்டங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற மத்திய கூட்டுறவு வங்கிகள் முழுமையாக பொது மக்களுடைய சேவைகள் பெறுவதற்கு அனைத்து வசதிகளும் தற்போது இருக்கிறது.கூட்டுறவு சங்கங்கள் கிராமங்கள் தோறும் இருந்தாலும் , வணிக வங்கிகள் ஒவ்வொரு பகுதியில் இருந்தாலும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதை ஒட்டிய நிறுவனங்கள் ஒவ்வொரு நகர்ப்புறத்தில் இருந்தாலும் இன்னும் வங்கி சேவைகளை ஏழை எளிய பொதுமக்களுக்கு எடுத்து செல்வதற்கு நிறைய தேவைகள் இருக்கிறது அந்த தேவைகளை எல்லாம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய வங்கிகளின் பணியாளர்கள் அனைவரும் அர்ப்பணிப்போடு நிறைவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் இந்து நாடார் செந்திக்குமார நாடார் கல்லூரியில் (27.09.2024) இந்திய இரயில்வே தேர்வு வாரியம்(RRB) மூலம் அறிவிக்கப்பட்டுள்ள Non-Technical Popular Categories(NTPC) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவுள்ள ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார்.இரயில்வே துறை அமைச்சகத்தின் கீழ் இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் வெளியிட்டுள்ள 8113 பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போட்டித்தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பயன்பெறும் வகையில் இந்த ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் எஸ்.எஸ்.சி, யு.பி.எஸ்.சி, இரயில்வே, வங்கி உள்ளிட்டவைகள் மூலம் ஆண்டுக்கு சுமார் 2 இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டிற்கு சுமார் 15 ஆயிரம் காலிப்பணிடங்கள் நிரப்பப்படுகின்றன. அதில் பெரும்பாலும் போட்டித் தேர்வுகளில் அளவுத்திறன், திறனறிவு, ஆங்கிலம் மற்றும் பொதுஅறிவு ஆகிய நான்கின் அடிப்படையில் தான் 40 லிருந்து 60 சதவீகிதம் பாடத்திட்டங்கள் உள்ளன.போட்டித் தேர்வுகள் தயார் செய்யக்கூடிய மாணவர்களுக்கு பயிற்சி மிக முக்கியமானது. இந்த பயிற்சியின் மூலம் நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இப்பயிற்சிகள் மூலம் கவனக் குறைவு, தவறுகளை தவிர்த்தல் போன்றவைகள் பற்றி பயிற்சி அளிக்கும் போது அவர்கள் நல்ல முறையாக தேர்வு எழுத முடியும் என்பதற்காக தான் இந்த பயிற்சி.பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும், கல்லூரி முடித்து போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கும் நான் முதல்வன் என்ற முக்கியமான திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சிகளை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசினுடைய வேலைவாய்ப்பு பயிற்சித்துறை, நான் முதல்வன் இணையதளம், அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ஆகியவற்றின் இணையதளம் மற்றும் யூ-டியூப் மூலம் நடத்தப்படும் ஆங்கிலம், திறனறிவு உள்ளிட்ட வகுப்புகளில் பயிற்சி செய்யும் போது நீங்கள் நிறைய கற்றுக் கொள்ளலாம்.அதில் நீங்கள் அதிகமான வினாக்களுக்கு பதில் அளிக்கக் கூடிய அளவிற்கு இந்த பயிற்சிகள் உங்களுக்கு உதவி செய்யும். ஆகையால் இதன் மூலமாக மூலமாக தெரிந்து கொள்ள வேண்டியது முறையாக நீங்கள் பயிற்சி பெற்று, அந்த பயிற்சியில் வழங்கக்கூடிய நுணுக்கங்கள் அடிப்படையில் கடினமாக உழைத்தால் நிச்சயமாக போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியும்.மேலும் கிராமப்புற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி, பயிற்சி ஆகியவை எளிதாகவும், இலவசமாகவும் கிடைக்கும் வகையில் இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதனை பயன்படுத்தி சரியான பாதையில் உரிய வழிகாட்டுதல் வழங்குவதற்காக தான் இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் திருமதி ஞானபிரபா, திருமதி.பிரியதர்ஷினி (தொழில்நெறி வழிகாட்டி), அரசு அலுவலர்கள், போட்டித் தேர்வு ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (27.09.2024)பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர்வதற்கு பொருளாதார வசதி இல்லாத மாணவர்களை கண்டறிந்து, அதில் 13 மாணவர்களுக்கு ரூ.60,261 மதிப்பில் உயர்கல்விக்கான கல்விக்கட்டணங்களை விருதுநகர் கல்வி அறக்கட்டளையிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் இராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் மற்றும் காரியாபட்டி ஆகிய 4 வட்டாரங்களைச் சார்ந்த 184 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. விருதுநகர் மற்றும் காரியாபட்டி வட்டாரங்களை ஒன்றிணைத்து விருதரசி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் முதன்மைச் செயல் அலுவலர்-1 மற்றும் கொள்முதல் விற்பனை மேலாளர்-1 பணியிடம் நிரப்பபடாமல் உள்ளது. முதன்மைச் செயல் அலுவலர் அவர்களின் தகுதிகளாக B.ScAgri, / D.Agri / MBA முடித்திருக்க வேண்டும். வயது 25 முதல் 40 வரை ஊதியம் ரூ.15000/- மற்றும் கொள்முதல் விற்பனை மேலாளர் அவர்களின் தகுதிகளாக ஏதேனும் ஒரு பட்டயபடிப்பு முடித்திருக்க வேண்டும். வயது 25 முதல் 45 வரை ஊதியம் ரூ.10000/- மேற்குறிப்பிட்ட பணிகளில் அனுபவமுள்ள நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.மேற்படி விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களுடைய சுய விபரபடிவம் (Resume) மின்னஞ்சல் மூலமாக, தபாலிலோஅல்லது நேரிலோ vnr.tnrtp@yahoo.com வருகிற 05.10.2024-ம் தேதி மாலை 5 மணிக்குள்; அனுப்ப வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்கிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் (26.09.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார்.அரசாணை.(Ms).எண்.55, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை (K2) நாள்.02.07.2024ன்படி தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட அபராதமானது ரூ.50லிருந்து ரூ.2000ஃ-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அலுவலர்களால் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள்; மீது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆய்வின்போது, தமிழில் பெயர் பலகை வைக்காத 28 நிறுவனங்கள் மீது தலா ரூ.2,000/- வீதம் மொத்தம் ரூ.56,000/- அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்ட விதிகள், விதி 15 மற்றும் உணவு நிறுவனங்கள் சட்ட விதி 42B, தொழிற்சாலைகள் சட்ட விதிகள் 113 -ன் படி, ஒரு கடைகள் நிறுவனம் அல்லது உணவு நிறுவனம் அல்லது தொழிற்சாலையில் அதன் பெயர் பலகை தமிழில் எழுதப்பட்டிருக்க வேண்டும் பெயர் பலகையில் பிற மொழிகளும் உபயோகிக்கப்பட்டு இருந்தால், பெயர் பலகையில் பிரதானமாகவும், முதலிடத்திலும், தமிழ் மொழியில் இருக்க வேண்டும். இரண்டாம் இடத்தில் ஆங்கிலத்திலும், இதர மொழிகளில மூன்றாவது இடத்திலும் எழுதப்பட்டிருக்க வேண்டும். பெயர் பலகையில் பிற மொழிகளுக்கு ஒதுக்கி இருக்கும் இடத்தை விட தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகமான இடத்தில் / பரப்பளவில் தமிழில் எழுதப்பட வேண்டும். பெயர் பலகையில் எழுதப்படும் தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்த எழுத்துக்களில் இருக்க வேண்டும்.எனவே சட்டப்படியும் தமிழ் உணர்வுடனும் அனைவரும் தமது நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை அமைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த ஆய்வின்போது, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் திருமதி மைவிழி செல்வி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் திரு. பிச்சைக்கனி, வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 25.09.2024 அன்று அருப்புக்கோட்டையில் வசிக்கும் கணவரால் கைவிடப்பட்ட சீதாலட்சுமிஎன்பவர் வறுமையின் காரணமாக தனது இரண்டு மகள்களுக்காக பள்ளி மற்றும் கல்லூரிபடிப்பிற்காக விண்ணப்பித்த நிலையில், அவரின் மகள்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதற்கு விருதுநகர் கல்வி அறக்கட்டளை மூலம் ரூ.50,000/- க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன்,I A S ,அவர்கள் வழங்கினார்.