25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 10, 2026

தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி பட்டறையினை TEJAS (Transforming Entrepreneurial Journeys and Accelerating Startups)மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய அரசின் Startup India (DPIIT), தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி பட்டறையினை TEJAS (Transforming Entrepreneurial Journeys and Accelerating Startups) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (09.07.2026) தொடங்கி வைத்தார்.இந்த பயிற்சி பட்டறையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு ஸ்டார்ட்அப் திட்டங்கள், நிதி உதவிகள், இன்குபேஷன் வசதிகள், முதலீட்டு இணைப்புகள், அறிவுசார் சொத்துரிமை, சந்தை அணுகல் மற்றும் ஸ்டார்ட் அப் பதிவு தொடர்பான விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் இன்குபேஷன் மையங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தொழில்முனைவோருக்கு சிறந்த சேவைகளை வழங்கும் நோக்கில், வட்டார இன்குபேஷன் கிளஸ்டரினை (Regional Incubation Cluster) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் பெண்களின் திறன்களை மேம்படுத்தி, புதுமை, தொழில்முனைவு மற்றும் சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் விருதுநகர் பெண்மை (Virudhunagar PenmAI 2026) என்னும் தொழில்நுட்பம் சார்ந்த பதாகை வெளியிடப்பட்டது.ஸ்டார்ட்அப் இந்தியா என்பது, இந்தியாவில் புதுமையான தொழில்முனைவோரை உருவாக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், புதுமைகளை ஊக்குவிக்கவும், தொடங்கப்பட்ட முயற்சியாகும்.விருதுநகர் மாவட்டம் தமிழ்நாட்டில் முன்னேற விழையும் மாவட்டங்களில் ஒன்றாகும். எனவே, மாவட்ட நிர்வாகம், கல்வி நிறுவனங்கள், தொழில்முனைவோர், மருத்துவ நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மாணவர்கள்கள் ஆகியோர் ஒன்றிணைந்து உள்ளூர் சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்குவதற்கான சிறந்த வாய்ப்பாக இது அமைகிறது. விருதுநகர் மாவட்டத்தில் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு சூழலை உருவாக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.மாவட்டத்தின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ஆண்டுதோறும் தொழில்முனைவு மற்றும் புத்தாக்க சிந்தனையை மாணவர்களிடையே உருவாக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தொழில்முனைவு வழிகாட்டுதல் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தொடர் முயற்சிகளின் பலனாக, கடந்த ஆண்டில் 3 ஆக இருந்த இன்குபேஷன் மையங்கள் தற்போது 8 பதிவு செய்யப்பட்ட இன்குபேஷன் மையங்களாக உயர்ந்துள்ளன. மேலும், 4 இன்குபேஷன் மையங்களுக்கு StartupTN மூலம் மொத்தம் ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு, தொழில்முனைவோருக்கு தரமான வழிகாட்டல் மற்றும் ஆதரவு வழங்கும் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டத்தில் தற்போது 149 DPIIT அங்கீகாரம் பெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், உணவுப் பதப்படுத்தல், பசுமை தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்து வருகின்றன.மாவட்டத்தில் ஏற்கனவே ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டார்ட்அப் தமிழ்நாடு (StartupTN) மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களுடன் இணைந்து கடந்த ஆண்டு, தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களை அழைத்து "விருதுநகர் முதலீட்டாளர்கள் கூட்டம் 2025(Virudhunagar Investor Meet 2025)" நடத்தப்பட்டது. இதன் மூலம் முன்னணி தொழில்முனைவோர்கள் மூலம் புதிய தொழில்முனைவோர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே புதுமை சிந்தனைகளை ஊக்குவித்து, சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது.விருதுநகர் மாவட்டத்தின் மிகப்பெரிய பலமாக பட்டாசு தொழில் விளங்குகிறது. குறிப்பாக சிவகாசி பட்டாசு தொழில் ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடி வருவாயை ஈட்டுவதோடு, சுமார் 1.5 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறது. இதில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர். இது மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், இரசாயன கலவைப் பணிகளின் போது ஏற்படும் விபத்துகள் தொடர்ந்து கவலைக்குரியதாக உள்ளன.எனவே, கல்லூரிகள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து இரசாயன கலவை மற்றும் ஆபத்தான தொழிற்சாலை பணிகளை தானியக்கப்படுத்தும் அல்லது தரநிலைப்படுத்தும் தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்க வேண்டும்.  விருதுநகர் மாவட்டத்தின் இரண்டாவது முக்கிய சவால் நீர் வள மேலாண்மை ஆகும். குறைந்த மழைப்பொழிவு காரணமாக மாவட்டம் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. மேலும், சீமைக் கருவேல மரங்கள் பரவலாக வளர்ந்து நிலத்தடி நீர் வளங்களையும், விவசாயத்தையும் பாதிக்கின்றன. சீமைக் கருவேலத்தை அகற்றுவதற்கோ அல்லது பயனுள்ள பொருளாக மாற்றுவதற்கோ தொழில்நுட்பத் தீர்வுகள் உருவாக்கப்பட்டால், அது விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி, பிரதமரின் “விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும்” இலக்கை அடையவும் உதவும்.மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு திட்டமான திசை திட்டத்தின் கீழ் பள்ளியில் மாணவர்களின் இடைநிற்றலை குறைப்பதன் மூலம் குழந்தைத் திருமணம், பதின்பருவ கர்ப்பம், இரத்தச்சோகை, குழந்தை இறப்பு விகிதம் (IMR), தாய் இறப்பு விகிதம் (MMR) போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அரசு பள்ளிகளில் பயிலும் திறமையான மாணவர்களை அடையாளம் கண்டு, நீட் (NEET), க்யூட் (CUET) மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை வழங்கி உயர்கல்விக்கு வழிகாட்டப்படுகிறன.விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 5 பழங்குடியினர் கிராமங்கள் உள்ளன.அவற்றில் இராஜபாளையத்தில் இரண்டு குடியிருப்புகளும், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் மூன்று குடியிருப்புகளும் அமைந்துள்ளன. சதுரகிரி மலைப்பகுதியில் மருத்துவ குணங்கள் நிறைந்த பல்வேறு வன விளைபொருட்கள் கிடைக்கின்றன. சதுரகிரி மலைப்பகுதி பழங்குடியின மக்கள் தயாரிக்கும் தேயிலைப் பொருட்களை பழங்குடியின மக்களின் பங்களிப்புடன் “உயிர் டிப் டீ” என்ற பெயரில் சந்தைப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.இந்த தயாரிப்புகளை டெல்லியில் நடைபெற்ற கண்காட்சியிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.          உங்களுடைய ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைத்தால், இத்தகைய திட்டங்கள் விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், உங்களுக்குத் தேவையான அனைத்து வகையான ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாட்டு தளத்தையும் (Platform) வழங்க தயாராக உள்ளன. உங்களிடம் உள்ள திறமைகள், புதுமையான யோசனைகள் மற்றும் வளங்களை பயன்படுத்தி, அவற்றை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முழு ஆதரவையும் வழங்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் StartupTN உதவி இணைத்தலைவர் திரு.பிரேம் குமார், துணைத்தலைவர் திரு.சிவக்குமார், அசோசியேட் (Associate) Startup India திரு.ரோஹன் சச்தேவா, ஆலோசகர்(Startup India) திரு.விஷால் கர்க், வட்டார ஒருங்கிணைப்பாளர் திரு.சக்திவேல், கல்வி நிறுவனங்கள், தொழில்துறை பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள், இன்குபேஷன் மையங்கள், அரசு அலுவலர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆர்வலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Jul 10, 2026

2021 முதல் 2024-ஆம் ஆண்டுக்கான தொழில் நல்லுறவு விருதிற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை தொழிலாளர் ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களிடையே தொழில் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் “தொழில் நல்லுறவை பேணிப்பாதுகாக்கும் பணியில்” சிறந்து விளங்கும் நிர்வாகத்தினர் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கும் வகையில் “தொழில் நல்லுறவு பரிசுத் திட்டம்”  என்ற திட்டத்தை 1975-ஆம் ஆண்டு துவங்கி நாளது தேதி வரை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் கீழ் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெறுபவர்களுக்கு கேடயம், பரிசுத் தொகை மற்றும் தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.  ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப் பெற்ற முத்தரப்புக்குழு பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும்.இத்தொழில் நல்லுறவு விருதுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய இறுதி நாள் 30.04.2026 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  தற்போது இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் காலம்   31.07.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.               இவ்விருதுக்குரிய விண்ணப்பங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்தில் (http://www.labour.tn.gov.in/gira) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது இவ்விண்ணப்பங்களை நேரடியாக திருநெல்வேலி பெருமாள்புரம் போஸ்ட் திருமால்நகர் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) அலுவலகத்தில்  பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பத்துடன் நுழைவுக் கட்டணமாக விண்ணப்பித்தவர் தொழிற்சங்கமானால் ரூ.100-ம் வேலையளிப்பவரானால் ரூ.250-ம்  “செயலாளர் (தொழிலாளர் தனி இணை ஆணையர் தொழிலாளர் ஆணையர் அலுவலகம்) தொழில் நல்லுறவு பரிசுக்குழு அண்ணாநகர் சென்னை-40” (The Secretary, (Special Joint Commissioner of Labour, Office of the Commissioner of Labour) Good Industrial Relations Award Committee, Anna nagar, Chennai-40) என்ற பெயருக்கு கணக்குத் தலைப்பு (“0230-00 00 Labour and Employment 800 other Receipts- 227 Non Taxation fees – 99 others –AG Receipt of Labour Department (DP code No. 0230 00 800 AG 22799)”)ன் கீழ் பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலக் கிளையில் தொகை செலுத்திய அசல் செலுத்துச்சீட்டு (Challan) வைத்து அனுப்ப வேண்டும். அல்லது  விண்ணப்பத்துடன் நுழைவுக் கட்டணமக தொழிற்சங்கத்திற்கு ரூ.100-ம் வேலையளிப்பவருக்கு ரூ.250-ம் “நிர்வாக அலுவலர் (குறைந்தபட்ச ஊதியம்) தொழிலாளர் ஆணையர் அலுவலகம் சென்னை” என்ற பெயரில் செலுத்திய வரைவோலையை (Demand Draft) வைத்து அனுப்ப வேண்டும்         மேலும் விவரங்களுக்கு 044-24320887 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொள்ளளாம்  என மாவட்ட ஆட்சித்தலைவர், மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  தெரிவித்துள்ளார். 

Jul 10, 2026

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் .

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 45 வயது மிகாமலும் , இதர வகுப்பினர் 40 வயது மிகாமலும் இருத்தல் வேண்டும்.  தங்களது பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கினை துவக்கியிருத்தல் வேண்டும்.கல்வித் தகுதியினை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- மிகாமல் இருத்தல் வேண்டும். பத்தாம் வகுப்பு தோல்வியுற்றோர் : ரூ.200/- பத்தாம் வகுப்பு தேர்ச்சி          : ரூ.300/-      மாதம் ஒன்றுக்கு பன்னிரெண்டாம் வகுப்புஃபட்டயப்படிப்பு : ரூ.400/- பட்டப்படிப்பு : ரூ.600/-உதவித் தொகை விண்ணப்பத்தினை நேரில் இவ்வலுவலகத்தில் பெற்றோ அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வருவாய் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற்று வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் அலுவலக வேலைநாளில் விண்ணப்பத்தினை விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.மேற்கண்ட உதவித் தொகை காலாண்டு தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் உதவித்தொகை:கல்வித் தகுதியினை பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது. மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். SSLC  மற்றும் அதற்கு கீழ் பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.600/-     HSC  தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750/-பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும்ரூ.1000/- வருமான உச்ச வரம்பு கிடையாது. வயது உச்சவரம்பின்றி 10 ஆண்டுகள் வரை மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெறலாம்.வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பத்தினை அலுவலக வேலைநாளில் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும்மேற்கண்ட உதவித் தொகை மாதம் தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மேலும், உதவித் தொகை பெற்றால் வேலைவாய்ப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. தினசரி பள்ளி, கல்லூரி சென்று பயில்பவராக இருத்தல் கூடாது. சுய தொழில் செய்பவராகவோ இருத்தல் கூடாது. அரசிடமிருந்து வேறு எந்த வகையிலாவது உதவித்தொகை பெறுபவராகவோ, ஊதியம் பெறும் பணியிலோ இருத்தல் கூடாது.  இதற்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது. என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,  அவர்கள் தெரிவித்துள்ளார்.சுய உறுதிமொழி ஆவணம்ஏற்கனவே இவ்வலுவலகத்தில் உதவித் தொகை விண்ணப்ப படிவம் பெற்று சென்றுள்ள பதிவுதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இத்திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசு திட்டம் என்பதால், ஏற்கனவே முழுமையாக உதவித் தொகை பெற்றுள்ள பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் தொடர்ச்சியாக உதவித் தொகை பெற சுய உறுதிமொழி ஆவணம் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஏற்கனவே சுய உறுதிமொழி ஆவணம் அளித்திருப்பின் அலுவலகம் வர தேவையில்லை.

Jul 09, 2026

மாவட்ட அளவிளான  வன்கொடுமை  தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் .

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு  விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவானது 29.03.2023 அன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி குழுவானது மூன்று வருடத்திற்குள்  கலைக்கப்பட வேண்டும்.எனவே நடைமுறையில் உள்ள பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் நல்வாழ்வு குறித்த மாவட்ட அளவிலான வன்கொடுமை தொடர்பாக தற்போது  உள்ள விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவானது கலைக்கப்படுகிறது.             புதிய குழு அமைத்து, அக்குழுவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைவராகவும், மாவட்ட ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்- செயல் உறுப்பினராகவும் செயல்படுவார்கள்.  இக்குழுவில்   அதிகாரப்பூர்வமான உறுப்பினர்களாக  காவல்கண்காணிப்பாளர் மற்றும் அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகள் (Gazatted Officers) செயல்படுவார்கள்.            நாடாளுமன்றம் அல்லது  மாநில சட்டமன்ற  உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டவர்  (பட்டியலினத்தைச்  சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்) அல்லது  மாநில அரசால்  பரிந்துரை    செய்யப்படும்,  விருதுநகர் மாவட்டத்தினைச்    சேர்ந்த  இரண்டு நபர்கள் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற    உறுப்பினர்களாக  ஆதிதிராவிடர்    மற்றும்    பழங்குடியினர்  வகுப்பைச் சேர்ந்த   சமுக ஆர்வலர்கள்   மற்றும்   கல்வியாளர்கள்    விண்ணப்பிக்கலாம்.               எனவே , விருப்பமுள்ள  தகுதி வாய்ந்த   நபர்கள்   விருதுநகர்  மாவட்ட பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்  நல்வாழ்வு  குறித்த  மாவட்ட  அளவிலான   வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினராக  சேர்வதற்கு வருகின்ற 15.07.2026 –க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S . அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 09, 2026

2026-2027 ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

சாதிப் பாகுபாடற்ற  சமூக நல்லிணக்கத்தையும்,  சமூக ஒற்றுமையினையும்  கடைபிடிக்கும்  ஊராட்சிகளை  ஊக்குவித்து  கௌரவிக்கும்  வகையில்,  தகுதி  படைத்த 10 ஊராட்சிகளுக்கு  சமூக நல்லிணக்க  ஊராட்சி விருதுடன் தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனடிப்படையில்,  2026-27-ஆம் ஆண்டிற்கான  சமூக நல்லிணக்க  ஊராட்சி விருது பெற விரும்பும் ஊராட்சிகள் விண்ணப்பப் படிவத்துடன், அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்கலாம்.  இவ்விருதுக்கான விண்ணப்ப படிவத்தை tn.gov.in என்ற இணைய தளத்தில்   உள்ள https://cms.tn.go.in/cms migrated/document/forms/Social Award App26 27.pdf Link   அல்லது   இணைப்பில்  காணும்  QR code -யை ஸ்கேன் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம் .  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் உரிய ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அரசு தபால் அஞ்சல் மூலமாகவோ   31.07.2026 மாலை 06.00 மணி வரை பெறப்படும். தாமதமாக  பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S  அவர்கள் தெரிவித்துள்ளார். 

Jul 09, 2026

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 177 பயனாளிகளுக்கு ரூ.59.46 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காரிசேரி கிராமத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் முன்னிலையில், மக்கள் தொடர்பு திட்ட முகாம்  (08.07.2026) நடைபெற்றது.இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 1 பயனாளிக்கு ரூ.1 இலட்சம் மதிப்பிலான விபத்து நிவாரண உதவித்தொகையையும், 155 பயனாளிகளுக்கு ரூ.56.79 இலட்சம் மதிப்பில் இணைய வழி பட்டாக்களையும்,  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.26,000/- மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் தேய்ப்பு பெட்டிகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.13,000/- மதிப்பில் தையல் இயந்திரங்களையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் 4 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு ரூ.8000/- மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்களையும், வேளாண்மைத்துறையின் சார்பில், 6 பயனாளிகளுக்கு ரூ.48,374/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத் துறையின் சார்பில், 3 பயனாளிகளுக்கு ரூ.71,300/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், முதலமைச்சரின்  விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டைகளையும் என மொத்தம் 177 பயனாளிகளுக்கு ரூ.59.46 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும் அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டும், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மூலம் பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டும் வருகிறது.தமிழக அரசின் சிங்கபெண் அதிரடிப்படை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுத்து, துரிதமாகச் செயல்பட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் காவல் உதவியை, 1091 என்ற உதவி எண் மூலம் நேரடியாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடர்பு கொள்ளலாம்.விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டிற்கான வேலை நாட்கள் 100-லிருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் வேலை நாட்களும் ஊதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சரியான பணியினைத் தேர்வு செய்து கிராமப்புறக் குடும்பங்களுக்கு பணி வழங்கப்படும்.எல் நினோ மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கையாக தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கவும், விவசாய உற்பத்தியில் கவனம் செலுத்தவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிட சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.எனவே, பொதுமக்கள் இதுபோன்று பல்வேறு துறைகள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து கொண்டு, பயன்பெற வேண்டுமெனவும், மற்றவர்களுக்கும் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர்) திரு.ரவி மீனா இ.வ.ப., சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,இ.ஆ.ப., தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கு.மோகனா, சிவகாசி வட்டாட்சியர், அரசு அலுவலர்கள், உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jul 08, 2026

"நீங்களும் கலெக்டர் ஆகலாம்" என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும், மற்றும் தன்னார்வ இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளுடன் "நீங்களும் கலெக்டர் ஆகலாம்" என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் இன்று(07.07.2026) குழந்தைகளுக்கு ஊக்க உரையுடன் கலந்துரையாடினார்.விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர்நீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம் 2015, இன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் இல்லங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கீழ் 8 குழந்தைகள் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது.இக்குழந்தைகள் இல்லங்களில் தற்போது 171 (ஆண் - 79, பெண்- 92) குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளில் ஆதார், பிறப்புச்சான்று, சாதிச்சான்று மற்றும் வங்கிக்கணக்குகள் இல்லாத குழந்தைகளுக்கு அதற்கான சான்றுகளை பெற்றுத்தருவது தொடர்பாக சிறப்பு முகாம் 07.07.2026 இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.மேலும், இம்முகாமில் கலந்து கொண்ட இல்லங்களிலுள்ள குழந்தைகள் மற்றும் இல்ல நிர்வாகிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குழந்தைகளை தனது அலுவலக அறையில் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, "நீங்களும் கலெக்டர் ஆகலாம்" என்று ஊக்கமூட்டும் வகையில் அறிவுரை வழங்கி, உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து, அதனை அடைய விடாமுயற்சியுடன் கல்வி கற்று முன்னேற வேண்டும் என தெரிவித்தார். மாவட்ட ஆட்சித்தலைவரின் ஊக்கமளிக்கும் வார்த்தைகள் குழந்தைகளிடையே தன்னம்பிக்கையையும், உயர்ந்த இலட்சியங்களை நோக்கி பயணிக்கும் உற்சாகத்தையும் ஏற்படுத்தின.இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி, அரசு அலுவலர்கள், குழந்தைகள், பாதுகாவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Jul 08, 2026

வத்திராயிருப்பு பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பேரூராட்சி பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் (07.07.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது, வத்திராயிருப்பில் நெடுஞ்சாலைத்துறை(கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சார்பில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிய புறவழிச்சாலை அமைக்கும் பணியினையும், சமூக நீதி விடுதியில்  மாணவர்களின் தங்குமிடம், கழிவறை வசதிகள், விடுதி வளாகத்தின் தூய்மை, வழங்கப்படும் உணவின் தரம், தங்குமிடம் மற்றும் பிற அடிப்படை வசதிகள் குறித்தும், வத்திராயிருப்பு பேரூராட்சி, 12 ஆவது பகுதியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளையும், பண்டாரக்குடி தெரு, 1 வது பகுதியில் பொதுமக்களுக்கு  விநியோகிக்கப்படும் தண்ணீரில் குளோரின் அளவு குறித்தும், இந்து தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளையும், மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு உட்கொண்டும் ஆய்வு செய்தார்.பின்னர், வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்திலும், இ-சேவை மையத்திலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் தொடர்பாக நடைபெற்ற கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பினையும் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.பேரூராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மையின் கீழ் ஈரமான திடக்கழிவு, உலர்ந்த திடக்கழிவு, சுகாதார திடக்கழிவு, சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய திடக்கழிவு என நான்கு வகையாக தரம் பிரித்து பெற வேண்டும் எனவும், இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் சுகாதாரமானதாகவும், சுவையாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அனைத்து பகுதிகளுக்கும் குடிநீரை தட்டுப்பாடின்றி வழங்கிட வேண்டும் எனவும், அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீர்வு வழங்க வேண்டும் எனவும்,இ-சேவை மையங்களில் விண்ணப்பங்கள் உரிய காலக் கெடுவுக்குள் பரிசீலித்து, சான்றிதழ்கள் தாமதமின்றி வழங்கிட வேண்டும் எனவும், மேலும், இப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் மற்றும் சேவைகள் பொதுமக்களுக்கு முறையாக சென்றடைவதை தொடர்புடைய அரசு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் துறை அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது வட்டாட்சியர், பேரூராட்சி செயல் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Jul 08, 2026

மானியத்துடன் கூடிய தொழில் கடனுதவி பெற தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம் .

தமிழக அரசு மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வேலைதேடும் இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்காக 25 % மானியத்தில் தொழில் கடனுதவி வழங்கி வருகிறது.இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற 18 முதல் 45 வயது வரையுள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், சிறப்பு பிரிவினரான ஆதி திராவிடர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநர் ஆகியோர்கள்  55 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.கல்வித் தகுதி குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். (மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது). குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000 -க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.இத்திட்டத்தின் கீழ் வியாபாரத் தொழில்களுக்கு மட்டும் அதிகப்பட்ச தொகையாக ரூ.15.00 இலட்சம் வரை கடனுதவியாகப் பெறலாம். இக்கடனுக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் மானியமாக பெற்று பயன்பெறலாம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டு வருவதால் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து அரசு மான்யத்தை பெற்று பயன்பெறலாம்.மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தொழில் மையத்தினை நேரிலோ அல்லது (04562-252739) என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S , அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 07, 2026

“இளம் பேரிடர் நண்பன்” – பயிற்சி பெற்ற 355 தன்னார்வலர்களுக்கு வழங்கப்படவுள்ள பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (06.07.2026) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற “இளம் பேரிடர் நண்பன்”- (Yuva Aapda Mitra Volunteers Training) பயிற்சி பெற்ற 355 தன்னார்வலர்களுக்கு வழங்குவதற்காக வரப்பெற்ற பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் பார்வையிட்டார். இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது அரசின் மீட்புப் படையினர் வருவதற்கு முன்பாக, உயிர்ச்சேதத்தைக் குறைக்கவும், துரிதமாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில்,  “இளம் பேரிடர் நண்பன்” என்ற தலைப்பில் என்.சி.சி (NCC), என்.எஸ்.எஸ் (NSS), மை பாரத் (My Bharath) தன்னார்வலர்களுக்கு ஒரு வார காலம் உறைவிட பயிற்சி விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரியில் மற்றும் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் 01.07.2026 முதல் 07.07.2026 வரை நடைபெற்று வருகிறது.விருதுநகரில் 200 தன்னார்வலர்கள் மற்றும் சிவகாசியில் 155 தன்னார்வலர்கள் என மொத்தம் 355 தன்னார்வலர்களுக்கு வழங்குவதற்காக தலா ரூ.8,500/-வீதம் மொத்தம் ரூ.30.17 இலட்சம் மதிப்பில் 16-வகையான பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படவுள்ளது.இந்த பாதுகாப்பு உபகரணங்களில் தனிநபர் மிதக்கும் சாதனம் (பாலியூரிதேன் நுரையால் செய்யப்பட்ட உயிர் காப்பு அங்கி) (Personal Floatation Device (Life Jacket made of Polyurethane foam), 2 டார்ச் அல்லது அவசரகால விளக்கு (சூரிய சக்தியில் இயங்குவது) (Torch or emergency light (solar enabled), பாதுகாப்புக் கையுறைகள் (Safety Gloves (Leather), Pocket Knife, முதலுதவிப் பெட்டி (காயக்கட்டுத் துணிகள், பஞ்சு, கிருமிநாசினி களிம்புகள், கத்தரிக்கோல், இடுக்கி, கையுறைகள், சிபிஆர் முகமூடிகள், பிளவுக்கட்டுகள், இரத்தப்போக்கை நிறுத்தும் கட்டுகள்) First Aid kit (Bandages, cotton, antiseptic creams, scissors, tweezers, gloves, CPR masks, splints, tourniquets)), எரிவாயு பற்றவைப்பான் (Gas Lighter),  விசில் (Whistle),  தண்ணீர் புட்டி (Water Bottle), முதுகுப்பை மற்றும் கொசுவலை (Rucksack and Mosquito net Red colour uniform Dress with NDMA logo backside and SDMA logo front she and tracksuit (2 set)) (பின்புறத்தில் NDMA சின்னமும், முன்புறத்தில் SDMA சின்னமும் கொண்ட சிவப்பு நிற சீருடை மற்றும் டிராக்சூட் (2 செட்)),  நீர் புகாத உடை / மழை அங்கி (Water Resistant Clothing / Rain coat), கம் பூட்ஸ் (Gum Boots), பாதுகாப்புக் கண்ணாடிகள் (Safety Goggles),  பாதுகாப்புத் தலைக்கவசம் (நீர் புகாதது) ராஃப்டிங்) (Safety Helmet (Water Rafting)), தூசி எதிர்ப்பு முகக்கவசம் (Dust Resistant Mask), பிரதிபலிப்பு ஜாக்கெட்(Reflective Jacket) உள்ளிட்ட 16 தொகுப்புகள் உள்ளன. இதன் மூலம் இயற்கை இடர்பாடு காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைக்கு உபகரணங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மைத்துறை) திரு.சோனையன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 141 142

AD's



More News