25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Mar 26, 2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, இராஜபாளையம், விருதுநகர் மற்றும் திருவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில்,  (25.032026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026 முன்னிட்டு, மாவட்டத்தில் தேர்தல் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து நடத்தி  வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் சிவகாசி, வெம்பக்கோட்டை மற்றும் திருவில்லிபுத்தூர் பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள், இராஜபாளையத்தில் உள்ள  பஞ்சு ஆலைகள், விருதுநகரில் உள்ள பேப்பர் கேப்ஸ் தயாரிப்பு ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

Mar 25, 2026

விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2,396 வாக்குப்பதிவுக் கருவிகள்(BU), 2,396 கட்டுப்பாட்டுக் கருவிகள்(CU) மற்றும் 2,596 விவிபேட்(VVPAT) எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

 விருதுநகர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு கணினி  அறையில் (24.03.2026) மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட  ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொது பார்வையாளர்கள் திரு.உதயன் மிஷ்ரா,I A S., அவர்கள்(202-இராஜபாளையம் மற்றும் 203-திருவில்லிபுத்தூர்) மற்றும் திரு.அனுப்குமார் யாதவ்,I A S., அவர்கள்(206-விருதுநகர் மற்றும் 207-அருப்புக்கோட்டை) மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலம் முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யும் (First Randomization) பணிகள் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி குலுக்கல் (Randomization) முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 269 வாக்குச்சாவடி மையங்களுக்கு 322 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 322 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 349 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 308 வாக்குச்சாவடி மையங்களுக்கு 369  வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 369 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 400 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும்,204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள  291 வாக்குச்சாவடி மையங்களுக்கு  349 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 349 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும்  378 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் உள்ள  288 வாக்குச்சாவடி மையங்களுக்கு  345 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 345 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும்  374 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும்,          206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள  281 வாக்குச்சாவடி மையங்களுக்கு  337 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 337 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும்  365 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள  270 வாக்குச்சாவடி மையங்களுக்கு  324 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 324 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும்  351 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும், 208-திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் உள்ள  292 வாக்குச்சாவடி மையங்களுக்கு  350 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 350 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 379 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும், என மொத்தம் மாவட்டத்தில்  உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2,396 வாக்குப்பதிவுக் கருவிகள்(BU), 2,396 கட்டுப்பாட்டுக் கருவிகள்(CU)  மற்றும் 2,596 விவிபேட்(VVPAT) எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 24, 2026

சட்டமன்ற பொது  தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்வு செய்யப்படும் .

விருதுநகர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு கணினி  அறையில் (23.03.2026) மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட  ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தலைமையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொது பார்வையாளர்கள் திரு.உதயன் மிஷ்ரா,I A S ., அவர்கள்(202-இராஜபாளையம் மற்றும் 203-திருவில்லிபுத்தூர்) மற்றும் திரு.அனுப்குமார் யாதவ்,I A S., அவர்கள்(206-விருதுநகர் மற்றும் 207-அருப்புக்கோட்டை) ஆகியோர் முன்னிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலைய தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை-1, நிலை -2, நிலை -3 அலுவலர்கள் கணினி மூலம் சுழற்சி முறையில்(Randomization) சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்வு செய்யப்பட்டு பணி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது.தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் -23 ந்தேதி நடைபெறுவதையொட்டி, விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2001 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடக்கூடிய வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை-1, நிலை -2, நிலை -3 என மொத்தம் 9604 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதில் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 269 வாக்குச்சாவடி மையங்களில் 1292 அலுவலர்களும், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச்சாவடி மையங்களில் 1480 அலுவலர்களும், சாத்தூர்  சட்டமன்ற தொகுதியில் 291 வாக்குச்சாவடி மையங்களில் 1396 அலுவலர்களும், சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடி மையங்களில் 1392 அலுவலர்களும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 281 வாக்குச்சாவடி மையங்களில் 1348 அலுவலர்களும், அருப்புக்கோட்டை  சட்டமன்ற தொகுதியில் 270 வாக்குச்சாவடி மையங்களில் 1296 அலுவலர்களும், திருச்சுழி  சட்டமன்ற தொகுதியில் 292 வாக்குச்சாவடி மையங்களில் 1400 அலுவலர்களும் என மொத்தம் 7  சட்டமன்ற தொகுதிளில்  2001 வாக்குச்சாவடி மையங்களில் 9604 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட  ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 24, 2026

அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையானது அமைக்கப்பட்டுள்ளது.

2026- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம்,  207-அருப்புக்கோட்டை தொகுதிக்குட்பட்ட பகுதியில் சட்டமன்ற தேர்தல்  தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்களை பெற்று உடன் நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையானது அமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் மேற்படி தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண் 04566-222700-ஐ தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

Mar 24, 2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 இல் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (40% மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) ஆகிய பிரிவினருக்கு வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் வாக்களிக்கும் வசதியை வழங்கி உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ல் வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்க விரும்பும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான இடங்களில் உதவ தன்னார்வலர்கள், சாய்வுதளம், சக்கர நாற்காலிகள், காத்திருப்புப் பகுதி, கழிப்பறைகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இருப்பினும் இந்திய தேர்தல் ஆணையம், வருகின்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 இல் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (40% மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) ஆகிய பிரிவினருக்கு வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் வாக்களிக்கும் வசதியை வழங்கி உள்ளது.இந்த வசதிகளை பெறுவதற்காக படிவம் 12டி என்ற படிவத்தில் தங்களது விருப்பத்தை மேற்காணும் வாக்காளர்கள் தெரிவிக்க வேண்டும். மேற்படி படிவத்தை தங்கள் பகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடி நிலை அலுவலர்கள் மேற்படி வாக்காளர்களின் வீடுகளுக்கே 20.03.2026 முதல் 03.04.2026 வரை நேரில் வந்து வழங்குவார்கள். வாக்குப் பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க இயலாத 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி (40% மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) மேற்படி படிவத்தை பூர்த்தி செய்து 03.04.2026-க்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்க வேண்டும்.மேற்கண்டவாறு வீட்டிலேயே இருந்து வாக்களிக்க விருப்பம் தெரிவித்தவர்களின் வீட்டிற்கு இரண்டு வாக்குச்சாவடி அலுவலர்கள், ஒரு வீடியோகிராபர் நுண்பார்வையாளர்கள் மற்றும் ஒரு பாதுகாவலர் அடங்கிய வாக்குப்பதிவு குழுவானது சென்று, வாக்காளரை தபால் வாக்குச்சீட்டில் வாக்களிக்கச் செய்யும். மேற்படி வாக்குப்பதிவின் இரகசியம் காக்கப்படும்.மேற்படி வாக்குப்பதிவு குழு வருகை தரும் தேதி மற்றும் தோராயமான நேரம் குறித்து படிவம் 12டி விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அலைபேசி எண்ணில் குறுஞ்செய்தி தபால் அல்லது வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலமாக வாக்காளர்களுக்கு முன்னரே தெரிவிக்கப்படும்.முதல் வருகையின் போது கொடுக்கப்பட்ட முகவரியில் வாக்காளர் இல்லையெனில், வாக்குச் சேகரிக்கும் குழுவானது அவர்களின் இரண்டாவது வருகையின் தேதி மற்றும் நேரத்தை அறிவிப்பார்கள்.இரண்டாவது வருகையின் போதும் வாக்காளர் வீட்டில் இல்லையெனில், மேற்கொண்டு மறுவருகையோ அல்லது நடவடிக்கையோ எடுக்கப்பட மாட்டாது. தபால் ஓட்டு மூலம் வீட்டில் வாக்களிக்கும் வசதியை விருப்பத்தின்பேரில் தேர்வு செய்யும் வாக்காளர்கள், வாக்குப்பதிவு நாளில் நேரடியாக வாக்குச்சாவடியில், வாக்களிக்க இயலாது.மேலும், வாக்குப்பதிவு குழுவின் இரண்டாவது வருகையின் போதும் வீட்டில் இருக்க தவறிய வாக்காளர்களுக்குத் தபால் வாக்குச் சீட்டு (Postal Ballot) மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) ஆகிய இரண்டிலும் வாக்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதை அறியவும். மேலும் மேற்படி வசதியைப் பெறுவதில் தகவல் ஏதேனும் தேவைப்படின் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 2166 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என  மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 24, 2026

சட்டமன்றத் தேர்தல் 2026: தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்.

விருதுநகர் மாவட்டத்தில் வரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகள் எவ்விதக் குறைபாடுகளுமின்றி, நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொதுப் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த காவல் பார்வையாளர் ஆகியோரை நியமித்து ஆணையிட்டுள்ளது. பொதுப் பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்கள் விவரம்:ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பின்வருமாறு: இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர்: பொதுப் பார்வையாளராக திரு. உதயன் மிஷ்ரா, I A S.,(9489985870) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. சுக்செயின் சிங், இ.வ.ப. (9489985874) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் திருவில்லிபுத்தூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.சாத்தூர் மற்றும் சிவகாசி: இப்பகுதிகளுக்கு பொதுப் பார்வையாளராக திரு. அரவிந்த் குமார், I A S ., (9489985871) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. அனில்குமார், இ.வ.ப. (9489985875) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சாத்தூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை: பொதுப் பார்வையாளராக திரு. அனுப்குமார் யாதவ், I A S .,. (9489985872) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு.நாயன்ஜோதி நாத், இ.வ.ப. (9489985876) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.திருச்சுழி: இத்தொகுதிக்கு பொதுப் பார்வையாளராக திரு. சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, I A S ., (9489985873) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. வாக்மரே ஜெய், இ.வ.ப. (9489985877) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அருப்புக்கோட்டை பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.விருதுநகர் மாவட்டத்தில் வரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகள் எவ்விதக் குறைபாடுகளுமின்றி, நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொதுப் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த காவல் பார்வையாளர் ஆகியோரை நியமித்து ஆணையிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பின்வருமாறு:இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர்: பொதுப் பார்வையாளராக திரு. உதயன் மிஷ்ரா, இ.ஆ.ப. (9489985870) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. சுக்செயின் சிங், இ.வ.ப. (9489985874) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் திருவில்லிபுத்தூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.சாத்தூர் மற்றும் சிவகாசி: இப்பகுதிகளுக்கு பொதுப் பார்வையாளராக திரு. அரவிந்த் குமார், இ.ஆ.ப. (9489985871) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. அனில்குமார், இ.வ.ப. (9489985875) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சாத்தூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர். விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை: பொதுப் பார்வையாளராக திரு. அனுப்குமார் யாதவ், இ.ஆ.ப. (9489985872) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு.நாயன்ஜோதி நாத், இ.வ.ப. (9489985876) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.திருச்சுழி: இத்தொகுதிக்கு பொதுப் பார்வையாளராக திரு. சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, இ.ஆ.ப. (9489985873) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. வாக்மரே ஜெய், இ.வ.ப. (9489985877) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அருப்புக்கோட்டை பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.காவல் பார்வையாளர் மற்றும் புகார் அளிக்கும் முறை: மாவட்டம் முழுமைக்குமான ஒருங்கிணைந்த காவல் துறை பார்வையாளராக திரு. அகிலேஷ் குமார் சௌராசியா, இ.கா.ப. (94899 85878) நியமிக்கப்பட்டுள்ளார்.தேர்தல் பணிகள் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின், பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் மேலே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்கள் வழியாகவோ அல்லது காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரை பார்வையாளர்களின் முகாம் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ தெரிவிக்கலாம். தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்  அவர்கள் தெரிவித்துள்ளார்.  மாவட்டம் முழுமைக்குமான ஒருங்கிணைந்த காவல் துறை பார்வையாளராக திரு. அகிலேஷ் குமார் சௌராசியா, இ.கா.ப. (94899 85878) நியமிக்கப்பட்டுள்ளார்.தேர்தல் பணிகள் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின், பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் மேலே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்கள் வழியாகவோ அல்லது காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரை பார்வையாளர்களின் முகாம் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ தெரிவிக்கலாம். தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S . அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 23, 2026

சட்டமன்ற பொது தேர்தல், 2026 நடைபெறுவதையொட்டி பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த காவல் பார்வையாளர் வருகை.

எதிர்வரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பணிகள்எந்தவித சந்தேகங்களுக்கும் இடமின்றி நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் விதமாக, இந்திய தேர்தல் ஆணையம் விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்றதொகுதிகளுக்கும் தேர்தல் பொது பார்வையாளர்களாக இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களையும்,செலவின பார்வையாளர்களாக இந்திய வருவாய் பணி அலுவலர்களையும், ஒருங்கிணைந்த காவல்பார்வையாளராக இந்திய காவல் பணி அலுவலரையும் நியமனம் செய்து ஆணையிட்டுள்ளது.மேலும் விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கும் திரு. அகிலேஷ் குமார் சௌராசியா, இ.கா.ப. (தொடர்பு எண்:94899 85878) அவர்களை ஒருங்கிணைந்த காவல் துறை பார்வையாளராக நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.ஆதலால் பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள்,விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்ற தொகுதிகள் தொடர்பான தேர்தல் பணிகள் குறித்த புகார்கள் ஏதும் இருப்பின், தொடர்புடைய சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பார்வையாளர்களின்மேற்குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் வாயிலாகவும், முகாம் அலுவலகத்தில் காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரை நேரிலும் தெரிவிக்கலாம்.மேலும் தேர்தல் தொடர்பான தவறான நடவடிக்கைககள் மற்றும் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கும் நேர்வில், புகார் அளித்தவரின் பெயர் மற்றும் இதர விபரங்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 21, 2026

விருதுநகர் மாவட்டத்தில் சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026 முன்னேற்பாடுகள்.

விருதுநகர் மாவட்டத்தில் சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026 முன்னேற்பாடுகள்: தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S. அவர்கள் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் பொதுப் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த காவல் துறைப் பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.பங்கேற்ற தேர்தல் பார்வையாளர்கள்:இக்கூட்டத்தில் பின்வரும் பார்வையாளர்கள் கலந்துகொண்டு தொகுதி வாரியான கண்காணிப்புப் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்: தேர்தல் பொதுப் பார்வையாளர்கள்:  * திரு. உதயன் மிஷ்ரா, I A S. (இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர் தொகுதிகள்).   * திரு. அனுப்குமார் யாதவ், I A S,(விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை தொகுதிகள்).   * திரு. சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, I A S . (திருச்சுழி தொகுதி). தேர்தல் செலவினப் பார்வையாளர்கள்:   * திரு. சுக்செயின் சிங், இ.வ.ப. (இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர் தொகுதிகள்).   * திரு. அனில்குமார், இ.வ.ப. (சாத்தூர் மற்றும் சிவகாசி தொகுதிகள்).   * திரு. நாயன்ஜோதி நாத், இ.வ.ப. (விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை தொகுதிகள்).   * திரு. வாக்மரே ஜெய், இ.வ.ப. (திருச்சுழி தொகுதி). ஒருங்கிணைந்த காவல் துறைப் பார்வையாளர்:  மாவட்டத்தின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒருங்கிணைந்த காவல் பார்வையாளராக திரு. அகிலேஷ் குமார் சௌராசியா, இ.கா.ப. அவர்கள் ஆகியோர் பங்கேற்றார்கள்.ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்:இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றுதல், தேர்தல் பிரச்சாரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பின்வரும் அம்சங்கள் விவாதிக்கப்பட்டன:வாக்குப்பதிவு முன்னேற்பாடுகள்: வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) தயார் நிலை மற்றும் முதல்நிலை சரிபார்ப்புப் பணிகள் (FLC) குறித்து ஆய்வு செய்யப்பட்டது. செலவினக் கண்காணிப்பு: வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள், விளம்பரங்களுக்கான முன்-அனுமதி (MCMC) மற்றும் பறக்கும் படைகளின் செயல்பாடுகள் குறித்து செலவினப் பார்வையாளர்கள் விளக்கினர்.பாதுகாப்பு நடவடிக்கைகள்: பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஒழுங்கு பராமரிப்பு குறித்து காவல் துறைப் பார்வையாளர் ஆலோசனைகளை வழங்கினார்.சிறப்பு வசதிகள்: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு நடைமுறைகள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.மாவட்டத் தேர்தல் அலுவலரின் வேண்டுகோள்:நேர்மையான, அமைதியான மற்றும் சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெற அனைத்து அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். மேலும், தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அந்தந்த தொகுதிக்குரிய தேர்தல் பார்வையாளர்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ROs), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (AROs) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Mar 21, 2026

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, மூத்த வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ”என் வாக்கு, என் குரல்” ”என் வாக்கு, என் உரிமை” என்ற வாசகங்கள் அடங்கிய சால்வையினை அணிவித்து கௌரவப்படுத்தினார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள விருட்சம் மகளிர் முதியோர் இல்லத்தில் இன்று(20.03.2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, அதிகமுறை ஜனநாயக கடமையாற்றிய மூத்த வாக்காளர்களை கௌரவப்படுத்தும் விதமாக, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் ”என் வாக்கு, என் குரல்” ”என் வாக்கு, என் உரிமை” என்ற வாசகங்கள் அடங்கிய சால்வையினை அணிவித்து கௌரவப்படுத்தினார். சட்டமன்றத் தேர்தல் - 2026 நடைபெறவுள்ளதையொட்டி 18 வயது நிரம்பிய முதல் முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், அதிக முறை வாக்களித்த மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறும் வகையில், விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம், ரங்கோலி வரைதல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் அதிக முறை ஜனநாயக கடமையாற்றிய மூத்த குடிமக்களாகிய உங்களை கௌரவப்படுத்தும் விதமாகவும், தற்போது வாக்களிப்பதில் உள்ள நடைமுறைகள் குறித்தும், வாக்குச்சாவடி மையங்களில் மூத்த குடிமக்களுக்கு செய்யப்பட்ட வசதிகள் குறித்தும் விளக்குவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். மூத்த குடிமக்களாகிய நீங்கள் முதல் வாக்கினை பதிவு செய்த போது இருந்த ஆர்வத்தோடு தற்போதும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்குப்பதிவு மையங்களில் மூத்த குடிமக்களுக்கு இருக்கைகள், சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மேலும், மாவட்டத்தில் உள்ள 85 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனை, பயன்படுத்தி 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்திட மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 14,97,417 வாக்காளர்களில், 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 1,018 வாக்காளர்களும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,304 வாக்காளர்களும், 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,019 வாக்காளர்களும், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 809 வாக்காளர்களும், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 1,,089 வாக்காளர்களும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1432 வாக்காளர்களும், 208-திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 1,134 வாக்காளர்களும் என மொத்தம் 7,805 மூத்த வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.அதன்படி, அனைத்து மூத்த வாக்காளர்களும் தங்களது தேர்தல் பங்கேற்பினைத் தொடர்வதன் மூலம் இந்திய ஜனநாயகத்தில் இளம் தலைமுறையினரின் நேர்மறையான பங்களிப்பிற்கு முன்மாதிரியாக திகழும் இந்த மூத்த வாக்காளர்களை பெருமைப்படுத்தும் விதமாக விருதுநகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மூத்த வாக்காளர்களுக்கு, ”என் வாக்கு, என் குரல்” ”என் வாக்கு, என் உரிமை” என்ற வாசகங்கள் அடங்கிய சால்வையினை அணிவித்து கௌரவப்படுத்தினார்.தொடர்ந்து, 100 சதவீதம் வாக்கினை உறுதிபடுத்தும் விதமாக, இந்திய குடிமக்களாகிய நாங்கள், ஜனநாயகத்தில் நிலையான நம்பிக்கை கொண்டு, நமது நாட்டின் ஜனநாயக மரபுகளையும் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலைநிறுத்தவும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றி, மதம், இனம், சாதி, சமூகம் மொழி அல்லது எந்த தூண்டுதலாலும் பாதிக்கப்படாமல் வாக்களிக்கவும் இதன் மூலம் உறுதியளிக்கிறோம் என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மூத்த வாக்காளர்கள் ஏற்றுக்  கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி.திலகம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், மூத்த வாக்காளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 21, 2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் மற்றும் இதர குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 23.04.2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் 15.03.2026 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.எனவே, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் மற்றும் இதர குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறாது.தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுற்ற பின்னர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிக்கப்படும். பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெறுவதற்கென, மனுப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 122 123

AD's



More News