25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 10, 2025

வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் 15.07.2025 அன்று நடைபெற உள்ளது .

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் 15.07.2025 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  வருவாய் கோட்டாட்சியர், சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர்  அவர்களின்  தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.மேற்படி, கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I  A S.,  அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Jul 09, 2025

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (08.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அதன்படி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், அத்திக்கோயில் மற்றும் ராம் நகர் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சந்தித்து கலந்துரையாடி, அரசின் அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கிறதா என்பது குறித்தும்,  அவர்களின் தேவைகள் மற்றும் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.பின்னர், வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகள், கோப்புகள், பெறப்பட்டுள்ள மனுக்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீர்வு வழங்க தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.தொடர்ந்து,வத்திராயிருப்பு நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்தும், கொள்முதல் இலக்கு, தற்போது வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ள அளவு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Jul 09, 2025

வெவ்வேறு விபத்துக்களில் பாம்பு கடித்து உயிரிழந்த 2 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (08.07.2025) பாம்பு கடித்து  உயிரிழந்த 2 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு  முதலமைச்சர் பொதுநிவாரணநிதியிலிருந்துமொத்தம்ரூ.2இலட்சம்மதிப்பிலானகாசோலைகளைமாவட்டஆட்சித்தலைவர்மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,  அவர்கள் வழங்கினார்.அதன்படி, விருதுநகர் வட்டம், கே.உசிலம்பட்டி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த (லேட்) திரு.நாகராஜன் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்ததால், வாரிசுதாரரான அவரது மனைவி திருமதி  ஜீவா  என்பவருக்கு  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ1 இலட்சத்திற்கான காசோலையினையும்,திருவில்லிபுத்தூர் வட்டம், கூனங்குளம் புதுத்தெருவைச்  சேர்ந்த (லேட்)திரு.பேச்சியப்பன்  என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்ததால், அவரது வாரிசுதாரரான மனைவி திருமதி பேச்சியம்மாள் என்பவருக்கு,  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ1 இலட்சத்திற்கான காசோலையினையும்,என மொத்தம் உயிரிழந்த 2 நபர்களின் வாரிதாரர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 இலட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

Jul 09, 2025

அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  (08.07.2025) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பாலவநத்தம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், காலை உணவு தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து,  திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், இலுப்பையூர் துணை சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்து, சிகிச்சை பெற வந்த தாய்மார்கள் மற்றும் பொதுமக்களிடம் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் அணுகுமுறைகள், சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், தமிழ்பாடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பொருட்களின் இருப்பு, தரம் குறித்து ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகள் முறையாக மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

Jul 09, 2025

திருச்சுழி வட்டம், இலுப்பையூர் கிராமத்தில்அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் மருத்துவ சேவைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், இலுப்பையூர் கிராமத்தில், ரூ.1.20 கோடி மதிப்பில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்  (08.07.2025) குத்துவிளக்கேற்றி மருத்துவ சேவைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.பின்னர், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ், பயன்பெறும் பயனாளிகளுக்கான மருந்து பெட்டகங்களையும், தாய்மார்களுக்கு தாய் சேய் நலப் பெட்டகங்களையும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் மூலம் மருத்துவ சேவைகள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் செயலாற்றி வருகிறது. கடந்த நான்காண்டு ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் மற்றும் சேவைகள் மிகப்பெரிய  அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.இந்திய  அளவில் சுகாதாரத்தில் தமிழ்நாடு தான் முன்னிலையில் இருக்கிறது. நம்மை காக்கும் 48, இன்னுயிர் காப்போம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் அனைத்தையும் தமிழக அரசு தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக செயல்படுத்தி  வருகிறது.மேலும், இலுப்பையூர் மற்றும் அதனைச் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மருத்துவ சேவைகளுக்காக சுமார் 30 கி.மீ தூரமுள்ள திருச்சுழி, நரிக்குடி, கமுதி ஆகிய அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளதால், இப்பகுதியில் மருத்துவ சேவை வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்ற முக்கியத்துவத்தை பலமுறை வலியுறுத்தி, தற்போது இலுப்பையூரில் ரூ.1.20 கோடி மதிப்பில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதனை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 03.07.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது.இந்த புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தில் பிரசவ அறை, பிரசவ வார்டு, மருத்துவ அலுவலர் அறை, ஊசி போடும் அறை, மருந்து கட்டும் அறை, அவசர சிகிச்சை வார்டு, ஆய்வகம், மருந்தகம், தொற்ற நோய் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 3250 சதுர அடி பரப்பளவில் சுகாதார நிலையம் உள்ளது. இது ஒரு தொடக்கம் தான். இது போன்ற மக்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கான பணிகளையும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தும். எனவே, மருத்துவ சேவைகளை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, சுகாதாரம் நன்றாக இருந்தால் தான் மக்கள் நன்றாக இருப்பார்கள், மக்கள் நன்றாக இருந்தால் தான் நாடு முன்னேறும் என்ற நோக்கில் சுகாதாரத்திற்கு மிகுந்த முனைப்போடு செயலாற்றி வருகிறது.இலுப்பையூர் மற்றும் அதனை சுற்றி வசிக்கும் கிராம மக்கள் மருத்துவ சேவை பெறுவதற்கு  நீண்ட தூரம்  செல்ல வேண்டியுள்ளது. அதனை சரிசெய்து அருகிலேயே அவர்களுக்கான மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில்  அமைச்சர் பெருமக்கள் அவர்களின் ஒத்துழைப்போடு இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் சார்பில், மாவட்ட நிர்வாகம் மூலம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, வட்டாட்சியர், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவப் பணியாளர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 09, 2025

சமூகநலத்துறை திட்டங்கள் குறித்த மூன்று நாட்கள் கருத்தரங்கு நிகழ்ச்சி

விருதுநகர், ஜே.பி.ரெசிடென்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், நடத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திடும் வகையிலான சட்டங்கள் மற்றும் சமூகநலத்துறை திட்டங்கள் குறித்த மூன்று நாட்கள் கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S.,  அவர்கள் (08.07.2025) துவக்கி வைத்தார்.

Jul 09, 2025

மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியில் சேர்வது தொடர்பான நான்காம் கட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் வரும் 11.07.2025(வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் நடத்தப்பட உள்ளது.இந்நிகழ்வில், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் கல்லூரியில் சேர இயலாத மாணவர்கள் பங்கு பெறலாம். 2025-26 கல்வியாண்டு மட்டுமல்லாது அதற்கு முந்தைய கல்வியாண்டுகளிலும் பயின்று கல்லூரியில் சேராத மாணவர்களும் இக்குறைத்தீர் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.இதன் மூலம் மாணவர்களுக்கு உடனடியாக கல்லூரியில் சேர்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.எனவே உயர்கல்வியில் சேர்வதற்கான சந்தேகங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்து, பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 09, 2025

பருத்திக்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை தரம்பிரித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நேரடி விற்பனை செய்யலாம் .

.விருதுநகர் மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டில், 14,028 ஹெக்டேர் பரப்பிளவில் பருத்தி ராபி மற்றும் கோடை பருவத்தில் பயிர் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 11.78 மெ.டன் பஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது. BT பருத்தி, SURAJ , SURABI , SVPR-2, SVPR-4  மற்றும் RCH போன்ற ரகங்கள் அதிகளவில் விருதுநகர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ளன.ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ளுர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மூலம் மின்னணு தேசிய வேளாண் சந்தை வாயிலாக (e-NAM),  மறைமுக ஏலமுறையில் பருத்தியின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்து விற்பனை நடைபெறுகிறது.          பருத்திக்கு நியாயமான விலைபெறுவதற்கு, நன்கு காய்ந்த பஞ்சுகளை அறுவடை செய்து, உலர்த்தி, தரம்பிரித்து அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு கொண்டு வந்து (e-NAM),  திட்டத்தில் பங்கு பெற்று நல்ல போட்டி விலைக்கு விற்பனை செய்து  பயன்பெறுமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையினர் பருத்தியின் தரத்தை நிர்ணயிக்கும் காரணிகளான ஈரப்பதம், இழை நீளம், இழையின் நுண்மைத்தன்மை, முதிர்ச்சி மற்றும் நீண்ட இழை தரக்கூடிய பருத்தி இரகங்கள் குறித்து முகாம் நடத்தி விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் தேசிய பருத்தி வாரியத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து பருத்தி கொள்முதல் செய்வதற்கு நியாயமான சராசரி தரக்காரணிகளான (FAQ) ஈரப்பதம் 8 சதவிதத்திற்கு மிகாமலும் பருத்தி இழையானது 29.0 மில்லிக்கு கூடுதலாகவும்  பழுப்பு மற்றும் சருகு இல்லாத பருத்தியை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வரும் பட்சத்தில் Cotton Corporation of India நிறுவனம் மூலம் கொள்முதல் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  மேலும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் அலுவலர்கள் விவசாயிகளின் வயல்களுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து, விவசாயிகளை வணிகர்களுடன் ஒருங்கிணைத்து, பருத்திக்கு இலாபகரமான விலை கிடைக்கச் செய்திட அறிவுறுத்தினார்.விருதுநகர்  மாவட்ட பருத்தி விவசாய பெருமக்கள் பயன்பெற விருதுநகர் விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 93600-87561 என்ற அலைபேசி எண்ணிலும், இராஜபாளையம் விறப்னைக்கூடகண்காணிப்பாளரை 82484-05989 என்ற அலைபேசி எண்ணிலும், சாத்தூர் விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 90033-56172 என்ற அலைபேசி எண்ணிலும், அருப்புக்கோட்டை விற்பனைக்கூட மேற்பார்வையாளரை 79045-37699 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டும் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மற்றும் செயலாளர், விருதுநகர் விற்பனைக்குழு அலுவலகத்தையும்  தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 08, 2025

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (07.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சுப்பிரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், பள்ளியில் மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, வெம்பக்கோட்டை அணையினை நேரில் சென்று பார்வையிட்டு, அணையின் கொள்ளளவு, தற்போதைய நீர் இருப்பு, பயன்பெறும் பாசன நிலங்கள், கால்வாய்கள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். பின்னர், வெம்பக்கோட்டை அணைப்பகுதியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் செயல்பட்டு வரும் அரசு மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணையினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகள், அங்கு வளர்க்கப்படும் மீன்களின் வகைகள், பயன்பெறும் பயனாளிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.பின்னர், வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளையும், அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Jul 08, 2025

வெம்பக்கோட்டை வட்டம், கண்டியாபுரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில், கட்டப்பட்டுள்ள 232 புதிய குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கி, புதிய வீடுகளை பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், (07.07.2025)  விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கண்டியாபுரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில், ரூ.12.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 232 புதிய குடியிருப்பு வீடுகளை சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து  வைத்தார். அதனைத் தொடர்ந்து, புதிய குடியிருப்பு வீடுகளுக்கான சாவிகளை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,  அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கி, புதிய வீடுகளை பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வரும்  இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பான கவுரவமான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்துத் தருவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கைத் தமிழர்களது முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் கட்டித் தரப்படும். முகாம்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். ஆண்டுதோறும் இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.பொறியியல்/வேளாண்/முதுநிலை பட்டப்படிப்பு மாணவ, மாணவியருக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் வழங்குதல், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதி, மாதாந்திர பணக்கொடை உயர்வு, இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லாமல் அரிசி, விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் போன்ற சுமார் 300 கோடிக்கு மேல் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பல்வேறு கட்டங்களாக புதிய வீடுகள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக  ரூ.12.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 232 புதிய குடியிருப்பு வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசித்துவரும் இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டி கொடுத்தமைக்காக,  இலங்கைத்தமிழர்கள்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.எஸ்.கே.கனகராஜ், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் திருமதி கலைவாணி, தனி வட்டாட்சியர்(அயலகத் தமிழர் நலன்) திருமதி கார்த்திகேயினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 87 88 89 90 91 92 93 ... 138 139

AD's



More News