தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், ரூ.2.75 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தினை (04.07.2025) காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட வேளாண்மை - உழவர் நலத்துறையின் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் 2025-26 திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பயிறு வகை தொகுப்பு, பழச்செடி தொகுப்பு, காய்கறி விதை தொகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து வழங்கும் விளைப்பொருட்களின் உற்பத்தியினை அதிகரித்து ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட, உழவர்களின் வருமானத்தை அதிகரித்திட தமிழ்நாடு அரசு மூலம் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்னும் புதிய திட்டம் 2025-26-ம் நிதியாண்டில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் 2025-26 திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 25 தொகுப்புகள் வீதம் மொத்தம் 275 தொகுப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் மரத்துவரை, காராமணி மற்றும் அவரை வகை விதைத் தொகுப்புகளும் மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் வீட்டுத்தோட்டங்களில் வளர்க்க தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற ஆறு வகையான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பும், பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய மூன்று வகையான பழச்செடிகள் அடங்கிய தொகுப்பும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது.மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன் பெற உழவர் செயலியில் பதிவேற்றம் செய்யும், tnhorticulture.tn.gov.in வலைதளத்தில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமையில் வழங்கப்படும். கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இந்நிகழ்ச்சியில், வேளாண்மை பொறியியல் துறையின் கீழ் வேளாண்மை இயந்திரமாக்குதல் உப இயக்கம்-2025-2026 திட்டத்தின் கீழ் பவர் டில்லர் 50 சதவீதம் மானியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர்(பொ) திருமதி நாச்சியார் அம்மாள், செயற்பொறியாளர் திருமதி இந்திரா, உதவி இயக்குநர்கள், அரசு அலுவலர்கள், விவசாயிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (04.07.2025) முன்னேற விழையும் மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் முன்னிலையில், மத்திய குழுவின் ஆய்வு அலுவலர் கூடுதல் செயலாளர் மற்றும் முதன்மை ஆலோசகர் (கணக்குகள்) திரு.வெங்கடேஷ் அவர்கள் மற்றும் குழுவினருடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.முன்னதாக, மத்திய குழுவின் ஆய்வு அலுவலர் கூடுதல் செயலாளர் மற்றும் முதன்மை ஆலோசகர் (கணக்குகள்) திரு.வெங்கடேஷ் அவர்கள் மற்றும் குழுவினர் 03.07.2025 மற்றும் 04.07.2025 ஆகிய 2 நாட்கள் வத்திராயிருப்பு வட்டத்தில் நியாய விலை கடைகள், நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் விருதுநகர் மத்திய உணவுப் பொருள் சேமிப்பு கிடங்கினை ஆய்வு மேற்கொண்டார்கள்.இந்த ஆய்வுக்குப்பின் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களைச் சந்தித்து தாங்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்து தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.இந்நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.செந்தில்குமார், துணை ஆட்சியர் /மண்டல மேலாளர்(தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்) திரு.பால்பாண்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திரு.பாலசுப்பிரமணியம், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.உதயசங்கர் உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூபாய்.1 கோடி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனடிப்படையில், 2025-ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோர் விண்ணப்பப் படிவத்துடன், அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்கலாம். இவ்விருதுக்கான விண்ணப்பபடிவத்தைhttps://tinyurl.com/Panchayataward (அல்லது)https://cms.tn.gov.in/cms_migrated/document/forms/Samooga_Nallinakka_Ooraatchi_Award_Application.pdf என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் உரிய ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன், விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அரசு தபால் அஞ்சல் மூலமாகவோ 15.07.2025 மாலை 06.00 மணி வரை பெறப்படும் எனவும், அதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான மாணவர் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையத்தில் கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (COPA) நிலஅளவையர் (SURVEYOR) மின்சார பணியாளர் (ELECTRICIAN) இயந்திர வேலையாள் (MACHINIST) ஆகிய நான்கு தொழிற்பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளது. பயிற்சி முடித்தவுடன் தனியார் மற்றும் அரசு துறைகளில் அப்ரண்டீஸ் மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.விருப்பமுள்ள மாணவ மாணவிகள் தங்களது கல்வி மற்றும் சாதி அசல் சான்றிதழ்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். பயிற்சியின்போது மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750/- கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா சீருடை (தையற்கூலியுடன்) விலையில்லா மிதிவண்டி, விலையில்லா வரைபடக்கருவிகள், விலையில்லா மூடுகாலணிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில், தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டத்தின்கீழ் மற்றும் மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படும்.எனவே, திருச்சுழி சுற்று வட்டாரங்களில் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 70100-40810, 94864-62585, 76038-28709, 95669-29663 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் (03.07.2025) சென்னை அடையாறு சாஸ்திரி நகர், நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.2.90 கோடி மதிப்பிலான நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பு வளாகத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையத்தின் சேவைகளை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.பின்னர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பு வளாகம் மற்றும் சிவகாசி அம்மன்கோவில்பட்டி ஆகிய இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா ரூ.25 இலட்சம் மதிப்பிலும், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் செம்பட்டி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் இலுப்பையூர் ஆகிய இடங்களில் தேசிய நல வாழ்வு நிதி மூலமாக தலா ரூ.1.20 கோடி மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் என ஆக மொத்தம் 4 இடங்களில் ரூ.2.90 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.இந்நிகழ்வில், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.ஆர்.மாதவன், மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு.யசோதாமணி (விருதுநகர்), மரு.த.ஜெகவீரபாண்டியன் (எ) குணசேகரன் (சிவகாசி) உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான (Sparsh Outreach programme) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்களால் 01.07.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, இம்முகாமானது 01.07.2025 மற்றும் 02.07.2025 ஆகிய நாட்களில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் திருவில்லிபுத்தூர் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.இம்முகாமில், ஓய்வூதியம் தொடர்பான குறைகள், ஆதார் எண், அலைபேசி எண் மற்றும் பான் இணைப்பு, முகவரி மாற்றம், ஓய்வூதிய கொடுப்பாணை வழங்குதல், உயிர்ச்சான்று சமர்ப்பித்தல் தொடர்பான குறைகள் உடனடியாக நிவர்;த்தி செய்யப்பட்டது. உயிர்சான்று சமர்ப்பிக்க இயலாத முன்னாள் படைவீரர்களின் குறைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கேட்டறியப்பட்டு முன்னாள் படைவீரர்களுக்கு உயிர்ச்சான்று வழங்கப்பட்டது. மேலும், முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர்களது பெயர் மற்றும் பிறந்த தேதி மாற்றம் தொடர்பான குறைகள் நிவர்த்தி செய்யும் பொருட்டு பரிந்துரை செய்யப்பட்டது.மேலும், அன்று திருவில்லிபுத்தூரில் போர் நடவடிக்கையில் பணியாற்றிய 90 வயதுடைய முன்னாள் படைவீரர் இல்லத்திற்கு நேரில் சென்று ஓய்வூதியம் பெறும் விவரம் அறியப்பட்டு ஓய்வூதிய கொடுப்பாணையின் நகலினை உதவி கட்டுப்பாட்டாளர்(இந்திய பாதுகாப்பு கணக்கு பணி) திரு.விக்னேஷ் அவர்களால் வழங்கப்பட்டது.இம்முகாமில், உதவி கட்டுப்பாட்டாளர்(இந்திய பாதுகாப்பு கணக்கு பணி) திரு.விக்னேஷ், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர், SPARSH குழுவினர் மற்றும் நல அமைப்பாளர், பணியாளர்கள், 200 - ற்கும் மேற்ப்பட்ட முன்னாள் படைவீரர்கள்ஃ அவரை சார்ந்தோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மற்றும் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் (03.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட நூலக அலுவலகத்தினை பார்வையிட்டு, நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்களின் விபரம், நூல்களின் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, அங்கு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.அதனை தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையம், ஆதார் மையம் மற்றும் முதலமைச்சரின் காப்பீட்டு அலுவலகம் ஆகியவற்றின் பல்வேறு சேவைகளை பெற வருகை தந்த பொதுமக்களிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.மேலும், சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களை ஊக்கப்படுத்தி அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கி, அலுவலகத்தின் செயல்பாடுகள், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான வழிகாட்டி கையேடுகள், மாதிரி வினாத்தாள்கள் உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.பின்னர், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், ஆனையூர் ஊராட்சி, சாட்சியாபுரத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை (இரயில்வே திட்டப்பணிகள்) சார்பில், ரூ.61.74 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய இரயில்வே மேம்பாலம் பணிகளின் முன்னேற்றம் குறித்து, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில், வடப்பட்டி ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.34.23 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (03.07.2025) பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஒ.சுகபுத்ராI A S,.அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சமீபகாலங்களில் நடைபெறும் அன்னதானத்தில் உணவருந்தும் மக்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்படுதல் மற்றும் உணவு மூலம் பரவக்கூடிய தொற்றுநோய்பரவுதல் ஆகியவை பரவலாகக் காணப்படுவதாக ஊடகங்கள் வழியாக அறியப்படுகின்றது. உணவு ஒவ்வாமை தவிர்த்து, உணவு மூலம் பரவக்கூடிய தொற்று நோயானது பெரும்பாலும் உணவு சமைக்கப் பயன்படும் தண்ணீர் மற்றும் நுகர்வோர்களுக்கு வழங்கப்பயன்படும் தண்ணீர் ஆகியவற்றால் தான் ஏற்படுகின்றது.எனவே, அன்ன தானங்களின் மூலம் உணவு மூலம் பரவக்கூடிய தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதவழிப்பாட்டுத்தளங்கள், திருவிழாக்கள் போன்றவற்றில் நடத்தப்படும் அன்னதானத்திற்கு உணவு பாதுகாப்புத் துறையிடம் முன் அனுமதி வாங்க வேண்டும் என்றும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.கடந்த 07.06.2025 மற்றும் 09.06.2025 அன்று நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கல்விமடை என்ற கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தில் சாப்பிட்டவர்களில் சுமார் 150 பக்தர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இவ்விவகாரத்தை ஆய்வுசெய்து விசாரித்த உணவு பாதுகாப்புத் துறையினர், அன்னதானம் நடத்த உணவுபாதுகாப்புத் துறையின் முன்னனுமதி பெறவில்லை என்பதும், ஆழ்துளைகிணறு மூலம் பெறப்பட்ட சுத்திகரிக்கப்படாத மற்றும் குளோரின் கலக்காத தண்ணீரை சமையலுக்கும், நுகர்வோர்கள் அருந்துவதற்கும் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது.எனவே, பிரச்சினைக்குரிய ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்யப்பட்டதில், அந்தத் தண்ணீரில் வயிற்றுப போக்கினை ஏற்படுத்தும் கிருமி இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறு வதைதடுக்க கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அன்னதானம் ஏற்பாடு செய்பவர்கள் பின்பற்றிட வேண்டும் எனஅறிவிக்கப்படுகின்றது.1. அன்னதானங்களை ஏற்பாடு செய்பவர்கள், அன்னதானம் நடப்பதற்கு குறைந்தபட்சம் 10 தினங்களுக்கு முன்னரே https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவுபாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் பெறவேண்டும்.2. அதுபோல், அன்னதானத்தில் சமைப்பவர்கள்/ கேட்டரிங்க் ஏஜென்ஸி ஆகியோரும், மேற்கூறிய இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ்/ உரிமம் பெற்றிருக்க வேண்டும்.அவ்வாறு, உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ்/ உரிமம் பெற்ற கேட்டரிங்க் / சமையல் குழுவினருக்கு மட்டுமே அன்னதானத்தில் உணவு சமைக்க அன்னதானம் ஏற்பாடு செய்பவர்கள் பணி உத்திரவு வழங்க வேண்டும்.3. இந்தப் பதிவுச் சான்றிதழ் போக, புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் முதல் தளத்தின் அறை எண்: 116 ரூ 118-ல் உள்ள நியமனஅலுவலர் அலுவலகத்தில், பின்வரும் விபரங்களுடன் அனுமதி கோரிகடிதம் ஒன்றினை, அன்னதானம் ஏற்பாடு செய்பவர்கள்அன்னதானம் நடப்பதற்கு 7 தினங்களுக்குமுன்னர்சமர்ப்பிக்கவேண்டும்.அன்னதானம் ஏற்பாடுசெய்பவர்களின் தொடர் முகவரிமற்றும் அலைபேசி.அன்னதானம் நடைபெறும் இடத்தின் முழு முகவரி. அன்னதானத்தில் ஈடுபடவுள்ள சமைப்பவர் குழு / கேட்டரிங்க் குழுவின் விபரம். அன்னதானத்தில் உணவு சமைக்கவும், நுகர்வோர் அருந்தவும் பயன்படுத்தவுள்ள குடிநீரின் ஆதாரநிலை, பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீராக இருந்தால், விநியோகஸ்தர் / உற்பத்தியாளர் விபரம்.கிணறு அல்லது ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துசமைக்கவும், குடிக்கவும் பயன்படுத்துவதாக இருந்தால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சியின் அனுமதி மற்றும் தண்ணீர் பகுப்பாய்வறிக்கை ஊராட்சி/ நகராட்சி/ மாநகராட்சி போன்ற உள்ளாட்சியின் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரைப் பயன்படுத்துவதாக இருந்தால், அது குறித்தான அன்னதானம் ஏற்பாடு செய்பவரின் உறுதி மொழி மட்டும் போதுமானது.சமைப்பவர் குழு / கேட்டரிங்க் குழுவினர் தொற்று நோய்த் தாக்கமற்றவர்கள் என்பதிற்கான மருத்துவச்சான்று.உணவுசமைக்கத் தேவைப்படும் பொட்டல மிடப்பட்ட மூல உணவுப் பொருட்களை முழுமையான லேபிள் விபரங்கள் உள்ளதாக கொள்முதல் செய்யவும், அனைத்து மூல உணவுப் பொருட்களையும் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் / உரிமம் பெற்ற வணிகரிடத்தில் மட்டும் கொள்முதல் செய்யவும் சுய உறுதிமொழிச் சான்று.உணவு தயாரித்த 2 ½ மணி நேரத்திற்குள் பரிமாறிவிட வேண்டும். மீதமான உணவைப் பரிமாறாமல் அப்புறப்படுத்திடல் வேண்டும். பால், மீன், இறைச்சி ஆகியவற்றைப் பயன்படுத்துவதாக இருந்தால், அதனை முறையான வெப்பநிலையில் பராமரித்திடல் வேண்டும்.அனைத்துவகையான சமைத்த உணவிலிருந்தும் சராசரியாக 250 கிராம் உணவுமாதிரி எடுத்து, தூய்மையான பாட்டிலில் அடைத்து, குளிர்சாதனப் பெட்டியில் 48 மணிநேரத்திற்குப் பாதுகாத்திடல் வேண்டும்.மேற்கூறிய, நிபந்தனைகளைப் பின்பற்றாமல் அன்னதானம் நடைபெற்று, அதன் மூலம் உணவின் மூலம் பரவக்கூடிய தொற்று நோய்த்தாக்கம் ஏற்பட்டால், அதற்கு அன்னதானம் ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பாவார்கள் என்றும், அவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.எனவே, அனைத்து மத வழிபாட்டுத்தளங்கள் மற்றும் திருவிழாக் காலங்களில் அன்னதானம் ஏற்பாடு செய்பவர்கள், உணவு பாதுகாப்புபதிவுச் சான்றிதழ் பெற்றும், உணவு பாதுகாப்புத் துறையிடம் அன்னதானம் நடக்கும் நாளிற்கு 7 தினங்களுக்கு முன்னரேமுன் அனுமதி விண்ணப்பம் சமர்ப்பித்து, முன் அனுமதி பெற்றும், உணவுபாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றியும், பக்தர்களுக்குபாதுகாப்பானஉணவுவழங்கிடஒத்துழைப்புநல்கவேண்டும்மெனமாவட்டஆட்சித்தலைவர்மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்(02.07.2025) “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.அதனைதொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சிவகாசி மாநகராட்சியில் 32 முகாம்களும், 5 நகராட்சிகளில் 70 முகாம்களும், கிராம ஊராட்சி பகுதிகளில் 229 முகாம்களும் ஆக மொத்தம் 349 முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி, முகாம் வருகிற 15.07.2025 முதல் 07.11.2025 வரை நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் நகரப்பகுதிக்கு 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், கிராமப்பகுதியில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்விபரங்கள் குறித்தும் முகாம் ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தொடர்புடைய அலுவலர்ககளுடன் கலந்தாலோசித்து, தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) திரு.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.