25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு (SPORTS)

Apr 07, 2025

சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து

கால்பந்து 11வது சீசன் இந்தியன் சூப்பர் லீக்(ஐ.எஸ்.எல்.,). நேற்று, கோல்கட்டாவில் நடந்த இரண்டாவது அரையிறுதிக்கான இரண்டாவது சுற்றுப் போட்டியில் மோகன் பகான், ஜாம்ஷெட்பூர் அணிகள் மீண்டும் மோதின.முதல் சுற்றில் 21என வென்ற ஜாம்ஷெட்பூர், இப்போட்டியை 'டிரா'செய்தால்,பைனலுக்கு சென்று விடலாம், என்றநிலையில் களமிறங்கியது. மோகன் பகான் அணி குறைந்தது 2 கோல்வித்தியாசத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.  இரண்டு சுற்று அரையிறுதி முடிவில், கோல் அடிப்படையில் 3-2 (1-2, 2-0) எனமுந்திய மோகன் பகான் அணி, பைனலுக்கு முன்னேறியது. இதில் பெங்களூருவை (ஏப். 12) சந்திக்க உள்ளது. 

Apr 06, 2025

5th APRIL and  6th APRIL ,IPL MATCH

  5th APRIL  CHENNAI - DELHI 5-ம் தேதி சென்னையில், டெல்லி, சென்னை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த டெல்லி 183/6 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 158/5, ரன்கள் தோல்வியடைந்தது 25 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக KL RAHUL தேர்ந்தெடுக்கப்பட்டார். பஞ்சாப், ராஜஸ்தான்.5-ம் தேதி சண்டிகரில், பஞ்சாப், ராஜஸ்தான் அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 205/4 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணி 155/9,ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக JOFRA ARCHER தேர்ந்தெடுக்கப்பட்டார்.6th APRIL IPL MATCH HYDERABAD - GUJARAT 6-ம் தேதி ஹைதராபாத்தில், குஜராத், ஹதராபாத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் ஹை தராபாத் அணி 152/8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 153/3, ரன்கள் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக MOHAMMED SIRAJ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Apr 06, 2025

விளையாட்டு போட்டிகள் APRIL 6TH

குத்துசண்டை  உலக குத்துச்சண்டை கோப்பைபிரேசிலில், முதல் சீசன் 70 கிலோஎடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் ஹிதேஷ் குலியா, இங்கிலாந்தின் ஓடெல் கமாரா மோத இருந்தனர். கடைசி நேரத்தில் காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் விலக,ஹிதேஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தங்கத்தை தட்டிச் சென்றார். உலக குத்துச்சண்டை கோப்பையில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்றவரலாறு படைத்தார் ஹிதேஷ். ஹரியானாவை சேர்ந்த ஹிதேஷ் குலியா 20, இந்திய கடற்படையில் மாலுமியாக உள்ளார். உள்ளூர் போட்டியில் சர்வீசஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், நடப்பு ஆண்டில் நடந்த சீனியர் தேசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப், 38வது தேசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றார். கூடைபந்து  கூடைப்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கூடைப்பந்து கூட்டமைப்பு (எப்.ஐ.பி.ஏ.,)வெளியிட்டது. ஆண்கள் பிரிவில் இந்திய அணி,127.3 புள்ளிகளுடன் 81வது இடத்தில் இருந்து 76வதுஇடத்தை கைப்பற்றியது. கடந்த மாதம் ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில்பஹ்ரைனை வென்ற இந்தியா,11வது முறையாக ஆசியகோப்பை பிரதான சுற்றுக்கு முன்னேறியது. கார்பந்தயம்   கார்பந்தயத்தில்ஜப்பானில் நடந்த 'பார்முலா-1''ரெட்புல் ரேஸிங் ஹோண்டா' அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்றார். 

Apr 04, 2025

4th  APRIL  - KOLKATTA - HYDERABAD IPL MATCH.

 APRIL-4-ம் தேதி  லக்னோவில், மும்பை, லக்னோ அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த  லக்னோ அணி 203/ 8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 191/5 ரன்கள் எடுத்து  தோல்வி அடைந்தது,   12 ரன்கள் வித்தியாசத்தில்  லக்னோ அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக DIGVESH SINGH தேர்ந்தெடுக்கப்பட்டார்.   சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோத உள்ளன. 

Apr 04, 2025

4TH APRIL விளையாட்டு போட்டிகள் .

  ஹாக்கி .இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) ஹாக்கி இந்தியா அமைப்பு (எச்.ஐ.,) சார்பில் ஐ.பி.எல்., பாணியில் ஹாக்கி தொடர் கடந்த 2013 துவக்கப் பட்டது. ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பின், இத் தொடரின் ஆறாவது சீசன், சமீபத்தில் நடந்தது. இதை டிவி, இணையத ளத்தில் பார்த்தவர்கள் விபரம்,  ஒட்டுமொத்தமாக 4.08 கோடி பேர் கண்டு ரசித்துள்ளனர் ஆண்களுக்கான பைனலை 30.7 லட்சம் பேர், பெண்கள் பைனலை 29.2 லட்சம் பேர் பார்த்தனர். ஹாக்கி விளை யாடும் 18 நாடுகளில், இத் தொடரை 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர். குத்து சண்டை  உலக குத்துச் சண்டை கோப்பை  தொடர் பிரேசிலில் . 19 நாடு களில் இருந்து 130 பேர் பங் கேற்றுள்ளனர். 70 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஹிதேஷ்  பிரான்சின் மக்கான் டிரவோர் மோதினர். இதில் ஹிதேஷ், 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் தேசிய சாம்பி யன் ஜடுமானி சிங் (50 கிலோ), முன்னாள் ஆசிய சாம்பியன், உஸ்பெகிஸ்தானின் அசில்பெக் ஜலிலோ விடம் 2-3 என தோல்வி யடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றார். 

Apr 03, 2025

விளையாட்டு போட்டிகள்

கூடைபந்து  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலாவது தெற்காசிய கிளப் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ள 5 அணிகள் ரவுண்ட் ராபின் லீக் முறையில் மோதுகின்றன. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் கொழும்பு கிளப் (இலங்கை) அணி 79-74 என்ற புள்ளி கணக்கில் டிரெக்ஸ் (மாலத்தீவு) அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பெற்றது.மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு 107-41என்ற புள்ளி கணக் கில் திம்பு மேஜிக்ஸ் (பூடான்) கிளப்பை தோற்கடித்தது. தமிழக அணியில் ஜஸ்டின் ஜோசப் 17 புள்ளியும், அர்விந்த் முத்து கிருஷ்ணன், ஆனந்தராஜ் ஈஸ்வரன் தலா 16 புள்ளியும் எடுத்தனர்.இன்று நடைபெறும் ஆட்டங்களில் டைம்ஸ் கிளப் (நேபா ளம்)-டிரெக்ஸ் (மாலத்தீவு) அணியும் (மாலை 4 மணி), கொழும்பு கிளப்-தமிழ்நாடு (மாலை 6.30 மணி) அணியும் மோதுகின்றன.  குத்து சண்டை  பிரேசிலில் உலக குத்துச்சண்டை கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டியில் 19 நாடுகளை சேர்ந்த 130 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 55கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் மனிஷ் ரத்தோர் 3-2 என்ற கணக்கில் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவின் யூசுப் சோதியாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். அரை இறுதியில் ரத்தோர், கஜகஸ்தானின் நூர் சுல்தான் அல்டின்பெக்கை சந்திக்கிறார்.இதேபோல் 65கிலோ எடைப்பிரிவில் ,இந்திய வீரர் அபினாஷ் ஜம்வால் 5-0 என்ற கணக்கில் ஜெர்மனியின் டெனிஸ் பிரிலையும், 70 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஹிதேஷ் 5-0 என்ற கணக்கில் இத்தாலியின் கேப்ரியல் குய்டி ரோன்டானியையும் தோற்கடித்து அரை இறுதிக்குள் நுழைந்தனர் ஹாக்கி போட்டி  உத்தபிரதேசத்தில் உள்ள ஜான்சி நகரில்,  15-வது ஆக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி இன்று முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது.புதிய முறையில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் 30 அணிகள் 'ஏ', 'பி', 'சி' ஆகிய மூன்று டிவிசன்களாகபிரிக்கப்பட்டுள்ளன. 'பி', 'சி' டிவிசன் போட்டி இன்று தொடங்குகிறது. 'ஏ' டிவிசன் போட்டி வருகிற 8-ந் தேதி ஆரம்பமாகிறது. 'ஏ' டிவிசனில் நடப்பு சாம்பியன் ஒடிசா, அரியானா, பஞ்சாப், மராட்டியம், தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி உள்பட டாப்-12 அணிகள் இடம் பிடித்துள்ளன. அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். ஒவ்வொரு பிரிவிலும் லீக் சுற்று முடிவில் ,முதல் 2 இடங் களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். இந்த டிவிசனில் கடைசி 2 இடங்களை பெறும் அணிகள் அடுத்த ஆண்டு 'பி' டிவிசனுக்கு தரம் இறக்கப்படும்."'பி' டிவிசனில் பங்கேற்கும் தெலுங்கானா, கோவா,ஆந்திரா உள்ளிட்ட 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'ஏ' டிவிசனுக்கு ஏற்றம் பெறும். கடைசி 2 இடம் பெறும் அணிகள் 'சி' டிவிசனுக்கு தரம் இறங்கும். 'சி' டிவிசனில் அங்கம் வகிக்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பி' டிவிசனுக்கு முன்னேற்றம் காணும். 

Apr 03, 2025

3rd  APRIL - KOLKATTA – HYDERABAD IPL CRIKET MATCH

 APRIL 3-ம் தேதி  கொல்கத்தாவில்,ஹைதராபாத், கொல்கத்தா அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த  கொல்கத்தா அணி 200/ 6 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ஹைதராபாத் அணி 120/10 ரன்கள் எடுத்து  தோல்வி அடைந்தது,   80 ரன்கள்  வித்தியாசத்தில்  கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக VAIBHAV  ARORA  தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

Apr 02, 2025

2nd  APRIL  - BANGALORE - GUJARAT. IPL CRIKET MATCH

2-ம் தேதி  பெங்களூரில்,  குஜராத், பெங்களூர், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த  பெங்களூர் அணி 169/8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 170/2 ரன்கள் எடுத்து  8  விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக MOHAMMED SIRAJ  தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

Apr 02, 2025

விளையாட்டு போட்டிகள் . APRIL 3RD

ஈட்டி எறிதல்.இந்தியன் ஓபன் ஈட்டி எறிதலில் அன்னு ராணிதங்கம் வென்றார்.பஞ்சாப்பில் இந்தியன் ஓபன்தடகள போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறிதல் உ.பி., அணியின் அன்னு ராணி32, 6 வது, கடைசி வாய்ப்பில் 56.43 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.குத்துச்சண்டை:  பிரேசிலில் உலக குத் துச்சண்டை கோப்பை தொடர். 6 நாள் நடக்கும் இத்தொடரில் 19 நாடுகளில் இருந்து 130 பேர் பங்கேற்றுள்ளனர். 2028, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள புதிய எடைப் பிரிவுகளில் இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கும் முதல் தொடர் இது.50 கிலோபிரிவு ,காலிறுதியில்,20 வயதான, இந்தியாவின் தேசிய சாம்பியன் ஜடுமானி சிங், உலககோப்பை குத்துச்சண்டையில் பிரிட்டனின் எல்லிஸ் டிரோபிரிட்ஜை சந்தித்தார். இதில் ஜடுமானி 3-2 என்ற வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். வில்வித்தை அமெரிக்காவில் உலக கோப்பை வில்வித்தை(ஸ்டேஜ் 1)தொடர் ஏப். 813ல் நடக்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் உலக சாம்பியன் ஆதித்தி, அன்ஷிகா குமாரி, மதுரா, சிக்கிதா, உதய் கம்போஜ், திராஜ்பொம்மரதேவா என 6 வீரர், வீராங்கனைகள், பயிற்சியா ளர்கள் என 12 பேர் அமெரிக்கா செல்ல உள்ளனர்.ஆனால் இதற்கான விசா இன்னும் கிடைக்கவில்லை. இந்திய வில்வித்தை சங்கதலைவர் கூறுகையில், "கடந்த 40 நாளுக்கு முன் விசா கேட்டு விண்ணப்பித்தோம். உரிய நேரத்தில் கிடைத்துவிடும் என்றனர். பின் 'சிஸ்டம்' பிரச்னையாக கடந்த 15 முதல் 20 நாளாக இதே பிரச்னை தொடர்கிறது. இதுகுறித்து இந்திய அரசு, இந்திய விளையாட்டு ஆணையத்தில் முறையிட்டும், சிக்கல் தீரவில்லை," என்றார்.இந்திய வீரர் திராஜ் கூறு கையில், " விசா கிடைக்காத தால், தொடரில் பங்கேற்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது

Apr 01, 2025

1st APRIL  - LUCKNOW - PUNJAB. IPL CRIKET MATCH

 APRIL ,1-ம் தேதி  லக்னோவில், பஞ்சாப், லக்னோ, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த  லக்னோ அணி 171/7  ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணி 177/2 ரன்கள் எடுத்து  8  விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக PRABHSIMRAN SINGH (69 RUN / 34 BALL) தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

1 2 ... 135 136 137 138 139 140 141 ... 158 159

AD's



More News