மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான '14-20' உலக கோப்பை 2வது சீசன் நடக்கிறது. நேற்று, கோலாலம்பூரில் நடந்த அரையிறுதியில், ‘நடப்பு சாம்பியன்' இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இந்திய அணி 15 ஓவ ரில் ஒரு விக்கெட்டுக்கு 117 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நாளை, கோலாலம்பூரில் நடக்கவுள்ள பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன.
துப்பாக்கி சுடுதல் ஆண்களுக்கான துப் பாக்கி சுடுதல் தனிநபர் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு பைனலில் மகாராஷ்டிரா வின் பார்த் மானே, 252.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு மகா ராஷ்டிரா வீரர் ருத்ராங்க் ஷ் பாட்டீல் வெள்ளி, சர் வீசஸ் அணியின் கிரண் ஜாதவ் வெண்கலம் வென்றனர். பளு தூக்குதல் ஆண்களுக்கான 73 கிலோ ட பளுதுாக்குதலில் தமிழகத்தின் அஜித் நாராயணா தங்கம் வென்றார். ஹரியானாவின் தீபக், சர்வீசஸ் அணியின் லால்ஹுந்தாரா முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். பெண்களுக்கான பளுதுாக்குதல் 55 கிலோ எடைப்பிரிவில், மணிப்பூரின் பிந்தியாராணி தேவி பளுதுாக்கி இருந்தார். ஏற்கனவே 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் தேசிய சாதனை பிந்தியாராணியின் வசம் உள்ளது.பெங்கால் வீராங்கனை ஷரபானி தாஸ் (187 கிலோ), மணிப்பூரின் நிலாம் தேவி (182 கிலோ) முறையே வெள்ளி, வெண் கலம் கைப்பற்றினர்.நீச்சல் ஆண்களுக்கான நீச்சல் போட்டி 200 மீ., பேக் ஸ்டிரோக்' பிரிவில் தமிழகத்தின் நிதிக் (2 நிமிடம், 04.75 வினாடி) வெள்ளி வென்றார். மகாராஷ் டிராவி்ன் ரிஷாப் தாஸ் (2:03.34) தங்கம் கைப் பற்றினார். குஜராத் வீரர் தேவான்ஷ் (2:06.56) வெண்கலம் வென்றார். ஆண்களுக்கான 50 மீ., பிரீஸ்டைல்’ பிரிவில் தமிழகத்தின் ஜாஷுவா வெண்கலம் வென்றார். மகாராஷ்டிராவின் மிஹிர், கர்நாடகாவின் ஸ்ரீஹரி முறையே தங்கம், வெள்ளி வென்றனர். கிரிக்கெட் இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. மூன்று போட்டி முடிவில் இந்திய அணி 2-1 என தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. இரு அணிகள் மோதிய நான்காவது போட்டி நேற்று மஹாராஷ்டி ராவில் உள்ள புனே மைதானத்தில் நடந்தது..இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 166 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்தது. டென்னிஸ்டேவிஸ் கோப்பை டில்லியில் இன்று துவங்கும் 'வேர்ல்டு குரூப்-1 பிளே-ஆப்' சுற்றில் சசிகுமார், ராம்குமார் இடம் பெற்றுள்ள இந்திய அணி, டோகோ அணியை சந்திக்கிறது. பாட்மின்டன்இந்தியாவின் ஸ்ரீகாந்த்தாய்லாந்து மாஸ்டர்ஸ் காலிறுதியில் 17-21, 16-21 என ஜெங் ஜிங் வாங்கிடம் வீழ்ந்தார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி தோல்வி.
ஹாக்கி ரூர்கேலா (ஒடிசா), ராஞ்சியில் (ஜார்க்கண்ட்) ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. டபுள் ரவுண்டு-ராபின்' முறையில் நடந்த லீக் சுற்று நடந்தது. இதன் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த பெங்கால் (19 புள்ளி), சூர்மா (19), ஐதராபாத் (18), தமிழகம் (18) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. ரூர்கேலாவில் இன்று நடக்கும் முதல் அரை யிறுதியில் பெங்கால், தமிழக அணிகள் மோதுகின்றன. நீச்சல் ஆண்களுக்கான 200 மீ., 'பிரஸ்ட் ஸ்டிரோக்' நீச்சல் பைனல் நடந்தது. இதில் தமிழக வீரர் தனுஷ், தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.'டிரையாத்லான்' கலப்பு 'டிரையாத்லான்' போட்டியில் தமிழக அணி, வெண்கலம் வென்றது.கூடைப்பந்துபெண்களுக்கான கூடைப்பந்து 'பி' பிரிவு போட்டியில் தமிழக அணி 86-52 என டில்லியை வென்றது. கால்பந்து இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. நேற்று, சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, கேரளா அணிகள் மோதின. முடிவில் சென்னை அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி யடைந்தது. சென்னை அணி 19 போட்டியில், 4 வெற்றி, 6 'டிரா', 9 தோல்வியுடன் (18 புள்ளி) 10வது இடத்தில் உள்ளது. பெண்களுக்கான கால்பந்து 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழக அணி 6-0 என்ற கோல் கணக்கில் சிக்கிமை வீழ்த்தியதுசெஸ் மாஸ்டர்ஸ் பிரிவு 10வது சுற்றில், 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியா வின் குகேஷ், நெதர்லாந்தின் வார்மெர்டாமை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளை யாடிய குகேஷ், 34வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். பத்து சுற்று முடிவில் 5 வெற்றி பெற்ற இந்தியாவின் குகேஷ், 7.5 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்இந்தியாவின் பிரக்ஞானந்தா, ரஷ்யாவின் விளாடிமிரை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா, 45 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.பிரக்ஞானந்தா (6.5) அடுத்த ( 3 )இடத்தில் நீடிக்கிறார்.
இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு உத் தரகாண்ட்டில் நடக்கிறது. 37 அணிகளில் இருந்து 10,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். துப்பாக்கி சுடுதல் போட்டியில் 29 அணிகளில் இருந்து 364 பேர் களமிறங்கியுள்ளனர்.இதில் பெண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் பிரிவு தகுதிச்சுற்றில் ஹரியானாவின் ரமிதா (634.9), மஹாராஷ்டிராவின் ஆர்யா போர்ஷே (634.5), தமிழகத்தின் நர்மதா (634.4) முதல் மூன்று இடம் பெற்றிருந்தனர்.நேற்று பைனல் நடந்தது. இம்முறை சிறப்பாக செயல்பட்ட 23 வயது நர்மதா 254.4 புள்ளி எடுத்து முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இது புதிய தேசிய சாதனை ஆனது.
ஆண்களுக்கான 100 மீ., பட்டர்பிளை போட்டி நடந்தது. தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற பெனெடிக்சன் ரோகித், 53.89 வினாடி நேரத்தில் வந்து தங்கப் பதக்கம் கைப்பற்றினார். ஆண்களுக்கான 4X100 மீ., ரிலே போட்டியில் தமிழக அணி (3 நிமிடம், 29.92 வினாடி) வெள்ளி வென்றது. பெண்களுக் கான 4x100 மீ., ரிலே போட்டியில் தமிழகம், வெண்கலம் கைப்பற்றியது. .
கூடைப்பந்து பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது முதல் போட்டியில் 125-67 என சத் தீஷ்கரை வென்றது. தமிழக ஆண்கள் அணி 76-69 என சர்வீசஸ் அணியை வீழ்த்தியது. துப்பாக்கி சுடுதல், துப்பாக்கிசுடுதல் 10 மீ., ஏர் ரைபிள் பிரிவு தகுதிச் சுற்றில் ஹரியானாவின் ரமிதா, 634.9 புள்ளி எடுத்து முதலிடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார். தமிழகத்தின் நர்மதா, மூன்றாவது இடத்தில் உள்ளார். ஆண்கள் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் பஞ்சாப் பின் விஜய்வீர் சித்து 587 புள்ளியுடன் முதலிடம் பிடித்தார். கிரிக்கெட் சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்த வீரர்களுக்கான தர வரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரி சையில் இந்தியாவின் திலக் வர்மா, 832 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து 'நம்பர் -2' இடத்துக்கு முன்னேறினார். பவுலர்களுக்கான தரவரிசையில் தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி, 679 புள்ளிகளுடன் 25வது இடத்தில் இருந்து 'நம்பர்-5' இடத்துக்கு முன்னேறினார். ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (255) முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார். ஹாக்கி ரூர்கேலா (ஒடிசா), ராஞ்சியில் (ஜார்க்கண்ட்) ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் தமிழகம், உ.பி .. அணிகள் மோதின. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த பெங்கால் (19 புள்ளி), சூர்மா (19), ஐதராபாத் (18), தமி ழகம் (18) அணிகள் அரையிறுதிக்கு (ஜன.31) முன்னேறின. செஸ் நெதர்லாந்தில், சர்வ தேச செஸ் தொடரின் 87வது சீசனில் வெள்ளை நிற காய்களுடன் விளை யாடிய குகேஷ், 43வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இத்தொடரில் குகேஷ் பெற்ற 4வதுவெற்றி இது.மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரக்ஞா னந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரியிடம் தோல்வியடைந்தார். இந்தியா வின் அர்ஜுன், சீனாவின் வெய் இ மோதிய போட்டி 'டிரா' ஆனது.ஒன்பது சுற்று முடிவில் இந்தியாவின் குகேஷ், 6.5 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார்.
பெண்களுக்கான 'டி-20'உலக கோப்பை, 19 வயதுக்குட்பட்ட தொடரில் முதல் சதம் அடித்த வீராங்கனை என சாதனை படைத்தார் இந்தியாவின் திரிஷா (110 ரன்), இந்திய அணி 20 ஓவரில் 1விக்கெட்டுக்கு 208 ரன் குவித்ததுகோலாலம்பூரில் ஜன. 31ல் நடக்கும் முதல் அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து மோதுகின்றன. மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்தியாவின் 38வதுதேசியவிளையாட்டுஉத்தரகாண்ட்டில்நேற்றுதுவங்கியது.டேராடூன், ஹரித்வார், நைனிடால், ஹல்டுவானி, ருத்ரபூர், ஷிவ்பூரி, நியூ டெஹ்ரி உள்ளிட்ட 11 இடங்களில், 18 நாள் நடக்கும். 37 அணிகளில் இருந்து 10,000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.நீச்சல், துப்பாக்கிசுடு தல், மல்யுத்தம், பாட் மின்டன், ஹாக்கி, குத்துச் சண்டை, பளுதுாக்குதல் கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ் உட்பட 32 விளையாட்டுகளில் போட்டிகள் நடக்கின்றன.நேற்று இதற்கான துவக்கவிழா,அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பிரதமர் மோடி மைதானத்தை வலம் வந்தார். மேடையில் இவருக்கு பாரம்பரிய தொப்பி, சால்வை உள்ளிட்ட நினைவு பொருள் வழங்கப்பட்டன. டேராடூனில் உள்ள ராஜிவ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தேசிய விளையாட்டு துவக்கவிழா நடந்தது. குளிரையும் பொருட்படுத்தாமல், மொத் தம் 25,000 பேர் திரண்டு கண்டுகளித்தனர். தேசிய விளையாட்டினை ரூ. 350 கோடி செலவில் நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு புதிய கட்டுமான பணிகள் செய்யப்பட்டதால், ரூ.1000 கோடி வரை செலவாகியுள்ளது. உத்தரகாண்ட் தேசிய விளையாட்டில் மொத்தம் 450 தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளன. இதேபோல தலா 450 வெள்ளி, வெண்கலப் பதக்கமும் வழங்கப்படும்.
தெற்காசிய பெண்களுக்கான (20 வயதுக்குட்பட்ட) கால்பந்து சாம்பியன்ஷிப் வரும் ஜூலை 1-11-ல் வங்கதேசத்தில் நடக்க உள்ளது.2026ல் பெண்களுக்கான ஏ.எப்.சி., ஆசிய கோப்பை தகுதிச்சுற்றுக்கு ,தயாராகும் வகையில் இந்திய பெண்கள் அணி பல்வேறு தொடர்களில் பங்கேற்கிறது. இதன் ஒரு பகுதியாக, துருக்கி சென்று மூன்று போட்டிகளில் நட்பு போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்திய அணி பெங்களூரு பயிற்சி முகாமில் இருந்து ,அடுத்த மாதம் துருக்கி (அன் டல்யா) செல்கிறது. இங்கு பிப். 19ல் ஜோர்டானை சந்திக்கும். அடுத்து பிப். 22ல் ஹாங்காங், பிப். 25ல் ரஷ்யாவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
இந்தியா விளையாடிய 5 'டி-20' போட்டியில் 4 வென்றது 1, தோல்வி). இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. கோல்கட்டா (7 விக்.,), சென்னையில் (2 விக்.,) நடந்த போட்டியில் வென்ற இந்திய அணி, 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது போட்டி இன்று குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் நடக்கிறது.