25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு (SPORTS)

Apr 01, 2025

இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனாகட்டாரியா ஹாக்கி அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார்.

 2009ல் சர்வதேச 'சீனியர்' அரங்கில் கால்பதித்த இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனாகட்டாரியா 32.. இவர், கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை ஆனார்.மொத்தம் 320 போட்டிகளில் 158 கோல் அடித்துள்ளார். கடந்த 2021ல்டோக்கியோ ஒலிம்பிக்கில் நான்காவது இடம் பிடித்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.இந்திய ஹாக்கியின் துாணாக திகழ்ந்த வந்தனா, சர்வதேச ஹாக்கியில் இருந்து கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன். கசப்பும், இனிப்பும் நிறைந்தது இம்முடிவு. போட் டிகளில் சிறப்பாக செயல்பட முடியவில்லை, திறமை குறைந்து விட்டது என்பதற்காக, ஹாக்கியை விட்டு விலகவில்லை.சிறப்பாக செயல்படும் நிலையில், சர்வதேச ஹாக்கி அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார். 

Apr 01, 2025

18வதுசப் - ஜூனியர் சாப்ட் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் தமிழக அணிஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

தேசிய அளவில்,18வது சப் ஜூனியர் சாப்ட் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி, பஞ்சாப், லுாதியானாவில் நடந்தது. ஆண்கள் பிரிவில் தமிழகம் வெண்கலம், பெண்கள் பிரிவில் வெள்ளி வென்றது. தனிநபர் ஒற்றையர் ஆண்கள் பிரிவில் சேலத்தை சேர்ந்த ரிஷி, வேலுார் சாய் அஷ்வின் வெண்கலம் வென்றனர். பெண்கள் பிரிவில் சேலத்தை சேர்ந்த தணிகா தங்கம், வேலுார் ஸ்ரீமதி வெண்கலம் வென்றனர். தனி நபர் இரட்டையர் ஆண்கள் பிரிவில், வேலுார் பிருத்விராஜ், கரூர் மதன்பாலாஜி வெள்ளி, சேலம் ரிஷி,அக்ஷித் வெண்கலம்; பெண்கள் பிரிவில் வேலுார் ஸ்ரீமதி, சேலம் ரிஷிகா தங்கம்வென்றனர். சேலம் ஸ்ருதிலயா, கரூர் சஷ் டிகா, வெள்ளிப்பதக்கம் வென்றனர்.கலப்பு இரட்டையரில் வேலுார் ஸ்ரீமதி, சாய் அஷ்வின், வெள்ளி வென்றனர்.சப் ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டியில், தமிழக அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. 

Mar 31, 2025

IPL CRIKET MATCH,31st MARCH - MUMBAI - KOLKATTA

31-ம் தேதி  மும்பையில், கொல்கத்தா,மும்பை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த  கொல்கத்தா,  அணி 116/10 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 121/2 ரன்கள் எடுத்து  8  விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ASHWANI KUMAR தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

Mar 31, 2025

கால்பந்து , மல்யுத்தம் விளையாட்டு போட்டிகள் .

கால்பந்து  கிறிஸ்டியானோ ரொனால்டோ 40.போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன். கிளப் அரங்கில் தற்போது சவுதி அரேபியாவின் அல்நாசர் அணிக்காக விளையாடுகிறார். இவரது அணி, கிளப் அணிகளுக்கான 'பிபா' உலககோப்பை,  தொடரில் (அமெரிக்கா, 2025, ஜூன் 14-ஜூலை 13) பங்கேற்க தகுதி பெறவில்லை. கிளப் உலக தொடரில் பங்கேற்கும் 32 அணிகள்,ஒப்பந்தத்தில் இல்லாத வீரர்களை தங்கள் அணியில் இணைத்துக் கொள்ளலாம், என அறிவிக்க, 'பிபா' தயாராகி வருகிறது.  மல்யுத்தம்  சீனியர் ஆசியமல்யுத்த சாம்பியன்ஷிப் ஜோர்டானில், இந்தியா சார்பில் 30 பேர் பங்கேற்றனர். ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 61 கிலோ பிரிவு பைனலில் இந்தியவின் உதித்குமார் ஜப்பானின் டாகரா சூடா மோதினர். இதில் உதித் குமார் 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். இத்தொடரில் இந்தியா, 1 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் எனமொத்தம் 10 பதக்கம் கைப்பற்றியது. 

Mar 30, 2025

IPL  கிரிக்கெட் விளையாட்டு போட்டியில்  வெற்றி பெற்றவர்கள் .29th MARCH - GUJARAT - MUMBAI

29 th MARCH - GUJARAT - MUMBAI29,ம்தேதி அகமதாபத்தில், குஜராத், மும்பைஅணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 196/8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 160/6, ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது 36 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக PRASIDH KRISHNA  தேர்ந்தெடுக்கப்பட்டார்..30 TH MATCH  DELHI - HYDERABAD 30ம்தேதி விசாகபட்டினத்தில், ஹைதராபாத் ,, டெல்லி அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத்  அணி 163/10 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 166/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ISHAN MITCHELL STARC தேர்ந்தெடுக்கப்பட்டார்.30 TH  MATCH  CHENNAI - RAJASTHAN30ம்தேதி  கவுகாத்தியில்,  சென்னை,ராஜஸ்தான் அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 182/9 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 176/6, ரன்கள் எடுத்து  6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  ஆட்ட நாயகனாக NITISH RANA தேர்ந்தெடுக்கப்பட்டார். 

Mar 30, 2025

தடகளம்

அமெரிக்காவில் நடந்த 10,000 மீ., ஓட்டத்தில்  தடகள போட்டிக்கான ,இந்திய வீரர் குல்வீர் சிங் 26, பந்தய துாரத்தை 27 நிமிடம், 00.22 வினாடியில் கடந்த இவர், 6வது இடம் பிடித்தார். தனது சொந்த தேசிய சாதனையை 2வது முறையாக முறியடித்தார். பெண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் சீமா (32 நிமிடம், 14.66 வினாடி) 19வது இடம் பிடித்தார். இந்திய வீராங்கனை அன்கிதா, 1,500 மீ., ஓட்டத்தில் (4 நிமிடம், 13.97 வினாடி) 3வது இடத்தை  பிடித்தார்.

Mar 30, 2025

கிரிக்கெட்  பிரிமியர் லீக் போட்டி .

பிரிமியர் லீக் போட்டியில் விசாகப்பட்டனத்தில் நேற்று டில்லி, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார் . ஐதராபாத் அணி 18.4 ஓவரில் 163 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.  டில்லி அணி 16 ஓவரில் 166/3 ரன் எடுத்து, தொடர்ந்து  இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. 

Mar 28, 2025

28th MARCH - CHENNAI - BANGALORE . IPL CRIKET MATCH

28-ம் தேதி சென்னையில், பெங்களூர், சென்னை அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி ,196 / 7 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 146/8, ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக RAJATH  PADIDHAR (51 RUN  / 32 BALL) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Mar 28, 2025

விளையாட்டு போட்டிகள் 29TH MARCH.

கூடைபந்து  சிங்கப்பூரில், ஆசிய கோப்பை கூடைப்பந்து(3×3) தொடர், ஆண்களுக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, சீனதைபே அணிகள் மோதின. இந்திய அணி 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி,12 ஆண்டுகளுக்கு பின் காலிறுதிக்கு முன்னேறியது. டேபிள் டென்னிஸ் .டேபிள் டென்னிஸ்சென்னையில், டபிள்யு. டி.டி.,'ஸ்டார் கன்டென்டர்' தொடர் ஆண்கள் ஒற்றையர் 2வது சுற்றில், இந்தியாவின் அஜந்தா சரத் கமல், ஆஸ்திரேலியாவின் நிக்கோலஸ் லம் மோதினர். சரத் கமல் 3-0 (11-8, 11-8, 11-9) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். ஸ்குவாஷ் சர்வதேச 'இந்தியன் ஓபன் ஸ்குவாஷ்' இந்தியாவில் ஏழு ஆண்டுக்குப் பின், மும்பையில் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பைனலில் இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் 17 வயது சக வீராங்கனை அனாஹத் சிங், ஹாங்காங்கின் ஹெலன்டங்கை சந்தித்தார். அனா ஹத், 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார். மல்யுத்தம்  ஜோர்டானில்  ஆசிய 'சீனியர்' மல்யுத்த சாம்பியன்ஷிப்,. இந்தியா சார்பில் 30 பேர் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நேற்று நடந்தன.62 கிலோ பிரிவு அரை யிறுதியில் இந்தியாவின் மணிஷா,5-1 என கிர்கிஸ்தானின் கல்மெராவை வீழ்த்தினார்.அடுத்து நடந்த பைனலில் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற, வட கொரியாவின் முன் ஹியாங் யாங்கை எதிர் கொண்டார்.போட்டி முடிய ஒரு நிமிடம் இருந்த போது மணிஷா 2-7 என பின் தங்கி இருந்தார். பின் மீண்டு வந்த மணிஷா 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் பெற்றார். . தடகளம்  'இந்தியன் கிராண்ட்ப்ரி 1' தடகளம் இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில் பெங்களூருவில் ,பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் (பி) தமிழகத்தின் ஏஞ்சல் சில்வியா (11.67 வினாடி), ஸ்ரீவித்யா (12.00) தங்கம், வெள்ளி வென்றனர். 200 மீ., ஓட்டத்தில் ஜொலித்த ஏஞ்சல் சில்வியா (23.94 வினாடி) இரண்டாவது தங்கம் வென்றார்.ஆண்களுக்கான போல் வால்ட் போட்டியில் தமிழகத்தின் கவின்ராஜா (5.00 மீ.,), கவுதம் (5.00), தங்கம், வெள்ளி  பெற்றார். . .நீளம் தாண்டுதலில் தமிழக வீரர்கள் விஷ்ணு (7.73 மீ.,), சரண் (7.65), ஷ்ரோன் (7.64), முதல் மூன்று இடம் பிடித்தனர்.   தமிழகத்தின் தமிழகத்தின் கோபிகா (உயரம் தாண்டுதல், 1.80 மீ.,), அபிநயா ஸ்ரீ (நீளம்தாண்டுதல்,6.13 மீ.,) ஹேமமாலினி (ஈட்டி எறி தல், 46.05 மீ.,) வெள்ளி வென்றனர். தமிழகம்  நட்சத்திரங்கள் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் கைப்பற்றினர். ஹாக்கி போட்டி  ஜூனியர் அணிகளுக்கான உலக கோப்பை,,சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் 14வது தொடர் சென்னை, மதுரையில் நடக்க உள்ளது. வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடக்கும் இத்தொடரில் முதன் முறையாக 24 அணிகள் பங்கேற்கின்றன.  முதன் முறையாக புதிய நகரத்துக்கு போட்டியை கொண்டு செல்வது மகிழ்ச்சியாக உள்ளது," என்றார்.

Mar 27, 2025

விளையாட்டு போட்டிகள்.MARCH 28TH

கால்பந்து கால்பந்து போட்டியில்  இந்திய பெண்கள் லீக் (ஐ.டபிள்யு. எல்.,) சேது எப்.சி., அணி 3-1 என, ஒடிசா அணியை வீழ்த்தியது.அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில் பெண்கள் லீக் 8வது சீசனில்  ,மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று சென்னை யில் நடந்த லீக் போட்டியில் ஒடிசா, சேது எப்.சி., அணிகள் மோதின. சேது எப்.சி., அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.   குத்து சண்டை, பெண்களுக்கான  தேசிய சீனியர் குத்துச்சண்டை  8வது சீசன் சாம்பியன்ஷிப் உ.பி.,யின் நொய்டாவில். மொத்தம் 188 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 'மினிமம் வெயிட்' (45-48 கிலோ) பிரிவின் நடப்பு சாம்பியன் அகில இந்திய போலீஸ் அணியின் மீனாட்சி தனது மூன்றாவது போட்டியில், டில்லியின் சஞ்சனாவை வென்று, பைனலுக்கு முன்னேறினார். இதில் சிக்கிமின் யாஷிகாவை சந்திக்க உள்ளார்.  பிளை  வெயிட்' (48-51 கிலோ) பிரிவில் ரயில்வே அணியின் அனாமிகா, தமிழகத்தின் கலைவாணியை சந்தித்தார். கடும் போராட்டத்துக்குப் பின் அனாமிகா 4:3 என வென்று, பைனலுக்குள் நுழைந்தார். இதில் ஹரியானாவின் தமன்னாவை சந்திக்கிறார். மல்யுத்தம்   ஜோர்டானில் ஆசிய 'சீனியர்' மல்யுத்த சாம்பியன்ஷிப்,. இந்தியா சார்பில் கிரிகோ ரோமன் (10), 'பிரீஸ் டைல்' பிரிவில் 20 (10 ஆண்+10 பெண்) என மொத்தம் 30 பேர் பங் கேற்கின்றனர். பெண் களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன. நேற்று76 கிலோ பிரிவு அரை யிறுதியில் இந்தியாவின் ரீத்திகா, 10-0 என ஜப்பானின் யமா மோட்டோவை வென்று, பைனலுக்கு முன்னேறினார். மாற்றுத் திறனாளிகளுக்கான  கேலோ இந்தியா  விளையாட்டு போட்டி."கேலோ இந்தியா பாரா' விளையாட்டு  டில்லியில், மாற்றுத் திறனாளிகளுக்கான 2வது சீசனில் 1300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள்,6 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.கடைசி நாளில் நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியில் குஜராத் நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தினர். நான்கு தங்கம், 5 வெள்ளி, 12 வெண்கலம் என, 21 பதக்கங்களை கைப்பற்றினர். ஹரியானாவுக்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கம் கிடைத்தது.முடிவில், 34 தங்கம், 39 வெள்ளி, 31 வெண்கலம் உட்பட 104 பதக்கங்களை அள்ளிய ஹரியானா, மீண்டும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.தமிழகம் 28 தங்கம், 19 வெள்ளி, 27 வெண்கலம் உட்பட 74 பதக்கங் களுடன் 2வது இடத்தை தட்டிச் சென்றது. உ.பி., க்கு (23 தங்கம், 21 வெள்ளி, 20 வெண்கலம்) 3வது இடம் கிடைத்தது.

1 2 ... 136 137 138 139 140 141 142 ... 158 159

AD's



More News