25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


விளையாட்டு (SPORTS)

Jan 27, 2025

தேசிய மினி ரோல் பால் போட்டியில் கோவை மாணவர்கள் அணி வெண்கலம்  கைப்பற்றியது.

அசாமின் கவுகாத்தியில், 11 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான தேசிய 'மினி ரோல் பால்' சாம்பியன்ஷிப் 14வது சீசன் நடந்தது. சிறுவர்களுக்கான லீக் சுற்றில் முதலிடம் பிடித்த தமிழக அணி, அரையிறுதியில் 2-7 என அசாமிடம் தோல்வியடைந்து வெண்கலம் வென்றது.சிறுமிகளுக்கான லீக் சுற்றில் முதலிடம் பிடித்த தமிழக அணி, அரையிறுதியில் 3-5 என ராஜஸ்தானிடம் தோல்வியடைந்து வெண்கலம் கைப்பற்றியது .

Jan 27, 2025

உத்தரகாண்ட்டில் தேசிய விளையாட்டு திருவிழா இன்று துவக்கம்.

இந்தியாவின் 38வதுதேசியவிளையாட்டுஉத்தரகாண்ட்டில்இன்றுமுறைப்படிதுவங்குகிறது.டேராடூன், ஹரித்வார், நைனிடால், ஹல்டுவானி, ருத்ரபூர், ஷிவ்பூரி,நியூ டெஹ்ரி என 7 இடங்களில், 18 நாள் நடக்கும். 38 அணி களில் இருந்து 10,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பர்.ஒலிம்பிக்கில்இடம்பெறும்தடகளம், நீச்சல், துப்பாக்கிசுடுதல், மல்யுத்தம், பாட்மின்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளுதூக்குதல் கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.தவிர பாரம்பரிய கபடி, கோ கோ இடம் பெற்றுள்ளன. களரி, யோகாசனம் உட்பட 4 விளையாட்டுகள் கண்காட்சி போட்டியாக (பதக்கம் இல்லை) நடக்க உள்ளன.

Jan 27, 2025

ஐ.சி.சி.,விருது தேர்வுக்கு  பும்ரா, மந்தனா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும். கடந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்தின் ஜோ ரூட், ஹாரி புரூக், இலங்கையின் கமிந்து மெண்டிஸ் பரிந்துரைக்கப்பட்டனர்.இதில்சிறந்தடெஸ்ட்வீரராகபும்ரா 31,தேர்வானார். 

Jan 26, 2025

ஒடிசா ஹாக்கி அணி  கோப்பை வென்றது.

ராஞ்சியில் நேற்று நடந்த பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் பைனலில் சூர்மா ஹாக்கி கிளப் (பஞ்சாப், ஹரி யானா), ஒடிசா வாரியர்ஸ் அணிகள் மோதின. ஒடிசா அணியின் ருதுஜா(20வது நிமிடம்), ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். இதற்கு சூர்மா அணிக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் பென்னி ஸ்குவிப்(28) ஒரு கோல் அடித்து பதிலடி தந்தார்.ஒடிசா அணிக்கு ருதுஜா(56) மீண்டும் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். ஒடிசா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றது. 

Jan 26, 2025

சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்றார் ஜோதி .

  பிரான்சில், உள்ளரங்கு சர்வதேச தடகள போட்டி நடந்தது. பெண்களுக்கான 60 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி 25, பங்கேற்றார். தகுதிச் சுற்றில் 8.07 வினாடியில் இலக்கை அடைந்து 3வது இடம் பிடித்த ஜோதி, தேசிய சாதனையுடன் பைனலுக்கு முன்னேறினார்.   அடுத்து நடந்த பைனலில் அசத்திய ஜோதி, பந்தய துாரத்தை 8.04 வினாடியில் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தவிர இவர், இலக்கை குறைந்த நேரத்தில் கடந்து தனது சொந்த தேசிய சாதனையை மீண்டும் முறியடித்தார்.ஆண்களுக்கான 60 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் தேஜாஸ் ஷிர்ஸ் (7.68 வினாடி) வெண்கலம் வென்றார். 

Jan 26, 2025

விளையாட்டு போட்டிகள்.27th jan

 கிரிக்கெட் ரஞ்சி கோப்பை, தமிழகம் வெற்றி இந்திய கிரிக்கெட் போர்டு (PCCI,) சார்பில் ரஞ்சி கோப்பை தொடர் நடத்தப்படு கிறது. சேலத்தில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டி யில் தமிழகம், சண்டிகர் அணிகள் மோதின. ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக அணி 209 ரன் வித்தியாசத்தில் சண்டிகர் அணியை வீழ்த்தியது. ஆறு போட்டியில், 3 வெற்றி, 3 'டிரா' என 25 புள்ளிகளுடன் தமிழக அணி 'டி' பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியது. பெண்கள் 'டி-20' உலக கோப்பை அரை இறுதியில் இந்தியா. மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் நடக்கிறது. நேற்று, கோலாலம்பூரில் நடந்த 'குரூப்-1' பிரிவு, 'சூப்பர்-6' போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. குரூப்-1' பிரிவில் முதலிடம் பெற்ற இந்தியா(9 புள்ளி) அரையிறுதிக்குள் நுழைந்தது. குத்துச்சண்டைலாஸ் வேகாசில் நடந்த தொழில்முறை குத்துச் சண்டையில் இந்தியாவின் நிஷாந்த் தேவ், 'நாக் - அவுட்' முறையில் அமெரிக்காவின் ஆல்டன் விக்கின்சை வீழ்த்தினார்.  

Jan 26, 2025

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில்  ரூ.30 கோடி பரிசு, கோப்பை வென்ற மேடிசன் கீஸ்.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென் னிஸ் தொடர் மெல்போர் னில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பைனலில் உலகின் 'நம்பர்-1 வீராங்கனையான பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் மேடிசன் கீசை 29, ('நம்பர் - 14') எதிர்கொண்டார்.2 மணி நேரம், 4 நிமிடம் நடந்த போராட்டத்தின் முடிவில் மேடிசன் கீஸ், 6-3, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இது, ஆஸ்திரேலிய ஓபன். கிராண்ட்ஸ்லாம் அரங்கில் மேடிசன் கீஸ் வென்ற முதல் பட்டம். கோப்பை வென்ற மேடிசன் கீசிற்கு, ரூ. 30 கோடி. இரண்டாவது இடம் பிடித்த சபலென் காவுக்கு ரூ.16.4 கோடி வழங்கப்பட்டன. 

Jan 24, 2025

JAN 25 TH விளையாட்டு போட்டிகள்

 கிரிக்கெட் உலக கோப்பைக்குப் பின் இந்திய அணி கடைசியாக, சென்னையில் கடந்த 2023 அக். 8ல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை (50 ஓவர்) போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்றது. 474 நாளுக்குப் பின் இந்திய அணி, மீண்டும் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்குகிறது. இரு அணிகளும் 25 'டி-20' போட்டிகளில் மோதின. இதில் இந்தியா 14, இங்கிலாந்து 11ல் வென்றன. சேப்பாக்கத்தில் முதல் முறையாக மோத உள்ளன .செஸ்  இந்தியா சார்பில் மலேசியாவில் ஜோஹர் சர்வதேச செஸ் தொடரில் இனியன் (தமிழகம்), ராகுல் உட்பட மொத்தம் 84 பேர் பங்கேற்ற னர். 9 சுற்று போட்டி நடந்தன. சமீபத்தில் சென்னையில் நடந்த சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடரில் கோப்பை வென்ற  இனியன், மீண்டும் சிறப்பாக செயல்பட்டார்.முதல் 2 சுற்றில் வெற்றி பெற்ற இவர், 3வது சுற்றில் 'டிரா' செய்தார். அடுத்த 5 சுற்றில் வெற்றி பெற்றார். கடைசி, 9வது சுற்றில் இனியன், வியட்நாமின் நிகுவேன் வானை வீழ்த்தினார்.8.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்த 22 வயது இனியன் கோப்பை வென்றார்.   ஹாக்கி ஹாக்கி இந்தியா லீக் பைனலில் சூர்மா, ஒடிசா அணிகள் மோதுகின்றன.ராஞ்சி (ஜார்க்கண்ட்), ரூர்கேலாவில் (ஒடிசா) பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் முதல் சீசன் நடக்கிறது. மொத்தம் 4 அணிகள் லீக் சுற்றில் மோதின. ஒடிசா, முதல் அணியாக பைனலுக்குள் நுழைந்தது. ஆறு போட்டியில், 4 வெற்றி உட்பட 13 புள்ளி களுடன் முதலிடம் பிடித்த சூர்மா அணி பைனலுக்கு முன்னேறியது.நாளை, ராஞ்சியில் நடக்கவுள்ள பைனலில் சூர்மா, ஒடிசா அணிகள் விளையாடுகின்றன. 

Jan 23, 2025

மாஸ்டர்ஸ் 'சூப்பர் 500° பாட்மின்டன் சாத்விக் - சிராக் தோல்வி.

 மாஸ்டர்ஸ் 'சூப்பர் 500° பாட்மின்டன் சாத்விக் - சிராக் தோல்வி.இந்தோனேஷியாவில், மாஸ்டர்ஸ் 'சூப்பர் 500° பாட்மின்டன் தொடர் நடக்கிறது.இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, காய்லாந்தின் கிட்டினுபோங் கெட்ரென், டெச்சபோல் ஜோடியை சந்தித்தது.சாத் விக், சிராக் ஜோடி 20-22, 21-23 என்ற நேர் செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின் கென்டா நிஷிமோடோ மோதினர். இதில் லக்சயா சென் 16- 21, 21-12, 21-23 என போராடி வீழ்ந்தார். டென்னிஸ்ல் சஹாஜா காலிறுதிக்குள் நுழைந்தார்.பெங்களூருவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சஹாஜா, ரஷ்யாவின் டிமோபீபாவை எதிர்கொண்டார்.முதல் செட்டை 6-1 என வசப்படுத்திய சஹாஜா, அடுத்த செட்டை 3-6 என இழந்தார். மூன்றாவது செட்டினை 6-1 என கைப்பற்றினார். 2 மணி நேரம், 2 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சஹாஜா, 6-1, 3-6, 6-1 என வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.

Jan 23, 2025

உலக அளவில் 'நம்பர்-4' வீரர் ஆனார் குகேஷ். இந்தியாவின் 'நம்பர்-1' வீரரானார் .

நெதர்லாந்தில் சர்வதேச செஸ் மாஸ்டர்ஸ் பிரிவின் ஐந்தாவது சுற்றில் இந்தியாவின் குகேஷ், ஜெர்மனியின் வின்சென்ட்டை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 72வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இத்தொடரில் இவர் பெற்ற இரண்டாவது வெற்றி இது.ஐந்து சுற்று முடிந்த நிலையில்,நேற்று சர்வ தேச செஸ் கூட்டமைப் பின் ('பிடே') 'லைவ்' ரேட்டிங் பட்டியல் வெளியானது. உலக சாம்பியன் குகேஷ், 2784 புள்ளியுடன் இந்தியாவின் 'நம்பர்-1' வீரரானார். உலக அளவில் 'நம்பர்-4' வீரர் ஆனார். நெதர்லாந்து தொடரில் 2 வெற்றி (3 'டிரா') பெற்றதால் 7 புள்ளி கூடுதலாக பெற, இந்த முன்னேற்றம் கிடைத்தது.

AD's



More News