இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் இந்தியாவில், நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் ,போட்டியின் துவக்கத்தில் 3-2 என முந்தியது தமிழ் தலைவாஸ். இதன் பின்வரிசையாக அவுட்டாக, 9 வது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணி 'ஆல் அவுட்டானது'. 10-13 என பின்தங்கியது.தமிழ்தலைவாஸ் அணிக்கு அர்ஜுன் தேஜ்வல் அடுத்தடுத்து புள்ளியுடன் திரும்ப, பாட்னா அணியை இரு முறை ஆல் அவுட்டாக்கி பதிலடி தந்தது. முதல் பாதியில் 30-19 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியிலும் அர்ஜுன் சிறப்பாக செயல்பட்டார். முடிவில் தமிழ்தலைவாஸ் அணி 56-37 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 28 முறை 'ரெய்டு' சென்ற அர்ஜுன் போனஸ் புள்ளி 5 உட்பட, மொத் தம் 26 புள்ளி பெற்றுஅணியின் வெற்றிக்கு கை கொடுத்தார்.
முன்னாள் உலக சாம்பியன்கள் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 53. ரஷ்யா வின்கேரி காஸ்பரோவ் 62, மோதும் 'கிளச்' செஸ் தொடர் அமெரிக்காவில் நவீன மயமாக்கப்பட்ட செயின்ட் லூசியா செஸ் கிளப்பில் மூன்று நாள் நடக்கும். இத்தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.1.28 கோடி.காஸ்பரோவ் ஆறு முறை (1985, 1986, 1987, 1990, 1993, 1995) உலக சாம்பியனாக ஆதிக்கம் செலுத்தினர்செஸ் அரங்கில் ஆனந்த் ஐந்து முறை (2000, 2007, 2008, 2010, 2012), உலக சாம்பியனாக ஆதிக்கம் செலுத்தினர்1995 இல் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் மோதினர். நியூயார்க்கின் பழைய உலக வர்த்தக மையத்தின் 107வது மாடியில் இருவரும் மோதிய இப்போட்டியில் காஸ்பரோவ் சாம்பியன் ஆனார். மொத்தம் 12 போட்டி முடிவில் முதலிடம் பெறும் வீரருக்கு ரூ.62 லட்சம் பரிசு கிடைக்கும். இரண்டாவது இடம் பெற் றால் ரூ. 44 லட்சம் தரப்படும். ஒருவேளை இருவரும் சம புள்ளி பெற்றால், தலா ரூ. 53 லட்சம் என சமமாக வழங்கப்படும்.
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், வெளியானது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, 791 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.அடுத்த இரு இங்கிலாந்தின் நாட் சிவர் பிரன்ட் (731), ஆஸ்திரேலியாவின் பெத் மூனே (713) உள்ளனர். இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர், (612), 16 வது இடத்தில் உள்ளார். இலங்கைக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் அரைசதம் அடித்த தீப்தி சர்மா (610) ஒரு இடம் (17) முந்தினார்.கடந்த இரு போட்டியில் சிறப்பாக செயல் பட்ட ஹர்லீன் (48, 46 ரன்) 7 இடம் முன்னேறி 38 வது இடம் பிடித்தார்
கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் அசாமின் கவுகாத்தியில், மொத்தம் 36 அணிகள், 8 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி, 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி, 'எச்' பிரிவில் ஐக்கிய அரபு எமிரேட் (யு.ஏ.இ ), இலங்கை, நேபாளம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.முதல் போட்டியில் நேபாளத்தை வென்ற இந்தியா, நேற்று இரண்டாவது போட்டியில் இலங்கையை சந்தித்தது. இதில் இந்திய அணி 2-0 (45-27, 45-21) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் உன்னாதி ஹூடா, ரக்ஷித்தா ஸ்ரீ உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு (பி.எப்.ஐ.,) கோப்பை முதல் சீசன் சென்னையில், நேற்று பெண்களுக்கான ,65-70 கிலோ பிரிவு பைனலில் சர்வீசஸ் அணியின் அருந்ததி சவுத்ரி 5-0 என, அனைத்து இந்திய போலீஸ் (ஏ.ஐ.பி.) அணியின் ஸ்னேஹாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.அசாம் வீராங்கனை அங்குஷிதா 3-2 என, ராஜஸ்தானின் பார்த்வி கிரேவலை, 60-65 கிலோ பிரிவு பைனலில், வென்று தங்கத்தை கைப்பற்றினார்.இந்திய விளையாட்டு ஆணையம் அணியின் 57-60 கிலோ பிரிவு பைனலில் ,பர்வீன் ஹூடா 3-2 என, ஹரியானாவின் பிரியாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
மாற்றுத்திறனாளி களுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன்நைஜீரியாவின் அபியா நகரில், முதல் சீசன் ,ஆண்கள் ஒற்றையர் பிரிவு ('எஸ். எல்.3') பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத் 21-7, 9-21, 21-9 என சகவீரர் மந்து குமாரை வென்றுதங்கத்தை கைப்பற்றினார்.இந்தியாவின் பிரமோத் பகத், சுகந்த்கடம் ஜோடி ,ஆண்கள் இரட்டையர் பிரிவு ('எஸ். எல்.3-4') பைனலில் 21-13, 21-18 என நைஜீரியாவின் ஒபின்னாபிரிசியஸ், சிகோஜி ஜெரிமியா ஜோடியைவென்று தங்கத்தை கைப்பற்றியது. கலப்பு இரட்டையர் - பிரிவு ('எஸ்.எல்.3' பைனலில் 'எஸ்.யு.5') இந்தியாவின் பிரமோத் பகத், ஆரத்தி பாட்டீல் - 4 21-13, 21-17 பெருவின் கெர்சன் லாஸ் டானால், டயானா ரோஜஸ் கோலக் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.இதன் மூலம் பிரமோத் பகத் 37, 'ஹாட்ரிக்' தங்கத்தை தட்டிச் சென்றார். இந்திய வீரர் ரஞ்சித் சிங், மூன்று வெண்கலம் வென்றார். 6 தங்கம், 5 வெள்ளி, 16 வெண்கலம் என, 27 பதக்கம் இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்தன.
சென்னையில் நடந்த லீக் போட்டியில்நேற்று ஜெய்ப்பூர், டில்லி அணிகள் மோதின. டில்லி அணியினர், ஜெய்ப்பூர்வீரர்களை ஆல்-அவுட்' செய்தனர். ஆட்ட நேரமுடிவில் டில்லி அணி 29-26 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.இதுவரை விளையாடிய 11 போட்டியில், 10 வெற்றி, ஒரு தோல்வி என 20 புள்ளிகளுடன் டில்லி அணி முதலிடத்தில் நீடிக்கிறது. ஆறாவது தோல்வியை பெற்ற ஜெய்ப்பூர் அணி (12 புள்ளி) 7வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
ஓபன் ஸ்குவாஷ் கிளாசிக் தொடர்நியூயார்க்கில், முதல் சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ரானி, அபய் சிங் மோதினர். வீர் சோட்ரானி 3-1 (6-11, 11-6, 11-5, 11-5) என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். 'நடப்பு தேசிய சாம்பியன்' இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் மற்றொருமுதல் சுற்று போட்டியில் 3-0 (11-2, 11-8, 14-12) என வெற்றி பெற்று, 'ரவுண்டு-16' சுற்றுக்குள் நுழைந்தார்.இந்திய வீரர் ரமித் டான்டனுக்கு, முதல் சுற்றில் 'பை' சிறப்பு அனுமதிவழங்கப்பட்டதால், நேரடியாக இரண்டாவது சுற்றில் விளையாடுவார்.
அல் ஜன் மாஸ்டர்ஸ் பாட் மின்டன் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), பெண்கள் ஒற்றையர்பிரிவு பைனலில் இந்தியாவின் தஸ்னிம் மிர் 20, ஷ்ரியான்ஷி வாலி ஷெட்டி 18, மோதினர். முதல் செட்டை தஸ்னிம் மிர் 21-15 எனக் கைப்பற்றினார். பின் ஷ்ரியான்ஷி, 2வது செட்டை 22-20 என போராடி தன்வசப்படுத்தினார். தொடர்ந்துஇவர், வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 21-7 என மிகச் சுலபமாக வென்றார்.ஷ்ரியான்ஷி மொத்தம் 49 நிமிடம் நீடித்த போட்டியில் 15-21, 22-20, 21-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக 'சூப்பர் 100' பட்டத்தை கைப்பற்றினார்.
நேற்று நடந்த பெண்கள் உலக கோப்பைஇலங்கை தலைநகர் கொழும்புவில் (50 ஓவர்) லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. பாத்திமா சனா பாகிஸ்தான் கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி 50 ஓவரில் 247 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.பாகிஸ்தான் அணி 159 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது.