'டி-20' உலக கோப்பை தொடருக்கானமுதல் அரையிறுதியில் கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர், 'பீல்டிங்' தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன் எடுத்தது. .நியூசிலாந்து அணி 12.5 ஓவரில் 173/1 ரன் எடுத்து வெற்றி பெற்றது.. ஆட்ட நாயகன் விருதை ஆலன் வென்றார்.
'ஹோலி' நாளில் தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி பைனலுக்கு முன்னேறும். 10வது கோப்பை T-20' உலக தொடர் இந்தியா, இலங்கையில் இன்று கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும், முதல் அரையிறுதியில் தென் ஆப்ரிக்க அணி, நியூசிலாந்தை எதிர் கொள்கிறது. இரு அணி கேப்டன்கள் மார்க்ரம், சான்ட்னர் நல்ல 'பார்மில்' இருப்பதால், ஆட்டம் சிறப்பாக இருக்கும்.
இந்திய அணி, இன்று வியட் நாமை பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து முதல் போட்டியில் ,எதிர்கொள்கிறது. இதில் சிறப்பாக செயல்பட்டால், உலக கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம். பெண்க ளுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வதுசீசன்,ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், மொத்தம் 12 அணிகள் மூன்று பிரிவுகளாக பங்கேற்கின்றன.மூன்று பிரிவில் முதல் இரு இடம் பெறும் 6, ஒவ்வொரு பிரிவில் 3வது இடம் பெற்ற சிறந்த 2 என மொத்தம் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இதில் 6 அணிகள் உலக கோப்பை தொடருக்கு (2027, பிரேசில்) தகுதி பெறலாம். 2003க்குப் பின் ஆசிய கோப்பை அரங்கில் இந்தியா, வியட்நாம் அணிகள் மோதுகின்றன.இரண்டு போட்டியிலும் முன்னதாக மோதிய வியட்நாம் 3-0,2-1 என வென்றுள்ளது.இன்று இந்தியா வென்றால், உலக கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.
ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடர்பர்மிங்காமில், நேற்று,. ஆண் கள்ஒற்றையர் முதல் சுற்றில் கடந்த ஆண்டு காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின்லக்சயாசென் ('நம்பர் -12'), உலகின் 'நம்பர்-1' வீரர்,நடப்பு சாம்பியன் சீனாவின் ஷி யூ கியை சந்தித்தார் முதல் செட்டை லக்சயா 23-21 என வென்றார். இந்தியாவின் துருவ் கபிலா,தனிஷா கிராஸ்டோ ஜோடி, மலே சியாவின் பங் ஹூ, சு இன் செங் ஜோடியை கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் சந்தித்தது.இந்திய ஜோடி 21-17, 21-19 என்ற கணக்கில் இதில் வெற்றி பெற்றது.
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்க னைகளுக்கான தரவரிசை பட்டியல் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், வெளியானது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின்துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 790 புள்ளிகள் பெற்று, ஒரு இடம் முன்னேறினார். மீண்டும் 'நம்பர்-1’ இடம் பிடித்தார். இந்த முன்னேற்றம் ஆஸ்திரேலிய தொடரில் 58, 31 ரன் எடுத்ததால் கிடைத்தது.
'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8 போட்டியில் (பிரிவு-1) கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில், நேற்று முன் தினம் இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது. (மார்ச் 5, மும்பை) சஞ்சுசாம்சன் சர்வதேச 'T-20' அரங்கில் 3 சதம் அடித்தவர் .உலக கோப்பை தொடரில் கைகொடுப்பார் என நம்பினோம் . ஜிம்பாப்வேக்கு எதிராக 15 பந்தில் 24 ரன் விளாசி , வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். 50 பந்தில் 97* ரன் (12×4, 4×6 )எடுத்து ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்துவெற்றி நாயகனாக ஜொலித்தார். மும்பை வான்கடே மைதானத்தில் அரையிறுதி இந்திய , இங்கிலாந்து அணிகள் போட்டிநடக்க உள்ளது.. இந்திய வீரர்கள் வெற்றி தேடித் தருவர் எனரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் காம்பிர் "உலகத்தரம் வாய்ந்த வீரர் சஞ்சு சாம்சன். தனது திறமையை வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான போட்டியில் நிரூபித்தார்,” என பாராட்டினார்.
பிராகு செஸ் தொடர் செக்குடியரசில், உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனை திவ்யா, சாலஞ்சர் பிரிவில் பங்கேற்கிறார். ஐந்தாவது சுற்றில் சக வீரர் சூர்ய சேகர்சந்தித்தார். கங்குலியை, திவ்யா 19வது நகர்த்தலில் முன்னிலை பெற்றார்.தொடர்ந்து இவர், 35வது நகர்த்தலில் வெற்றி பெற்று, 2.5 புள்ளியுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார் திவ்யா,.நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரெஸ்ட் (4.0 புள்ளி) ஐந்துசுற்று முடிவில், முதலிடத்தில் உள்ளார். நாடிர்பெக், செக் குடி யரசின் டேவிட் நவரா, அடுத்தஇரு இடங்களில் (தலா 3.5 புள்ளி) உள்ளனர்..
ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடர்பர்மிங்காமில் இன்று பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து பங்கேற்க இருந்தார். சனிக்கிழமை முதல் துபாயில் சிக்கியுள்ள சிந்து, விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் பர்மிங்காம் செல்வதில் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறார். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, தற்போது துபாயில் உள்ள சிந்து விமான போக்குவரத்து மூடப்பட்டதால் , இத்தொடரில் விளையாட வாய்ப்பில்லை.ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி ஆண்கள்ஒற்றையரில் களமிறங்குகின்றனர். இதில் லக்சயா, முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-1' சீனாவின் ஷி யூ கியை சந்திக்கிறார். ஆயுஷ் ஷெட்டி, இந்தோனேஷியாவின் ஆல்வி பர்ஹானை எதிர் கொள்கிறார்.
'மவுன்டைன் வெஸ்ட்' சர்வதேச உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில், பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் கிருஷ்ணா ஜெயசங்கர் மேனன் பங்கேற்றார். முதல் வாய்ப்பில் 16.30 மீ., எறிந்த கிருஷ்ணா, அடுத்த இரு வாய்ப்பு களை வீணடித்தார். மூன்றாவது, 4வது வாய்ப் புகளில் முறையே 16.27, 16.64 மீ., எறிந்த இவர், கடைசி வாய்ப்பில் அதிக பட்சமாக 17.09 5., எறிந்தார். ஒட்டுமொத்த மாக 2வது இடம் பிடித்த கிருஷ்ணா, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். சொந்த தேசிய சாதனையை முறியடித்த கிருஷ்ணா தமிழகத்தை சேர்ந்தவர். அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் கடந்த மாதம் நடந்த போட்டி யில் 16.83 மீ., எறிந்து,வெண்கலப் பதக்கத்துடன் தேசிய சாதனை படைத்திருந்தார்.தங்கப்பதக்கத்தை அமெரிக்க வீராங்கனை மகாய்லா லாங் (17.69 மீ.,) வென்றார். எரின் பிரவுன் (15.34 மீ.,) மற்றொரு அமெரிக்க வீராங்கனை வெண்கலம் கைப்பற்றினார்.
மார்ச் 2-இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன்நேற்று, ஒடிசாவின் புவனேஸ்வரில் நடந்த லீக் போட்டியில் சென்னை ஒடிசா, அணிகள் மோதின..கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இரு அணிகளுக்கும் தலாஒரு புள்ளி வழங்கப்பட்டது.சென்னைஅணி இதுவரை விளையாடிய 3 போட்டியில்,ஒரு 'டிரா', 2 தோல்வி என ஒரு புள்ளியுடன் 11வது இடத்தில் உள்ளது. ஒடிசா அணி இரண்டாவது 'டிரா'வை பதிவு செய்து 2 புள்ளிகளுடன் 9வது இடத்தில் நீடிக்கிறது.