ஹரியானாவின் சீமா தேசிய தடகள வட்டு எறிதலில் முதலிடம் பிடித்தார் .
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் 64வது சீசன் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், பெண்களுக்கான வட்டு எறிதல் பைனலில், ஹரியானாவின் சீமா, 55.26 மீ., எறிந்து தங்கத்தை வென்றார். ரயில்வேயின் நிதி (53.71 மீ.,), ஹரியானாவின் சன்யா யாதவ் (52.05 மீ.,) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
ரயில்வே அணியின் கவுதம், சர்வீசஸ் அணியின் ராம்பீர், மத்திய பிரதேசத்தின்தேவ் மீனா தலா 5.10 மீ., தாண்டி, ஆண்களுக்கான 'போல் வால்ட்' பைனலில் முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர்.
ரயில்வே அணியின் பைரபி ராய் (13.10 மீ.,) தங்கம் வென்றார். மகாராஷ்டிராவின் பூர்வா சவந்த் (13.05 மீ.,), மத்திய பிரதேசத்தின் நிமிஷா (12.96 மீ.,) பெண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' பைனலில்வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
ஹிமாச்சல பிரதேசத்தின் சீமா, இலக்கை 16 நிமி டம், 01.27 வினாடியில் கடந்து பெண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தின் பைனலில் தங்கத்தை கைப்பற்றினார்.
அனைத்து இந்திய போலீஸ் அணியின் பிரின்ஸ் குமார் 14 நிமிடம், 06.57 வினாடியில் ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தின் பைனலில் கடந்துமுதலிடம் பிடித்தார். சர்வீசஸ் அணியின் தன்வார் (14:14.88), ரயில்வேயின்அபிஷேக்(14:19.16) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
0
Leave a Reply