ராஷ்மிகா-கபில் ஜோடிஉலக துப்பாக்கி சுடுதலில் 'தங்கம், வென்றனர்
ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' / 'பிஸ் டல' / 'ஷாட்கன்') தொடர் டில்லியில், 10 மீ., ''ஏர் பிஸ்டல்' கலப்பு அணிகளுக்கான தகுதிச் சுற்றில் இந்தியாவின் ராஷ்மிகா சாகல் - கபில் (582.15 புள்ளி), வன்ஷிகா சவுத்ரி - ஜோனாதன் கவின் ஆண்டனி (578.20) ஜோடிகள்முதலிரண்டு இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர்.
பைனலில் ராஷ்மிகா -கபில் ஜோடி 16-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம், வன்ஷிகா - ஜோனா தன் ஜோடி வெள்ளி வென்றனர்.
இந்தியாவின் பெண்களுக்கான 'ஸ்கீட்' பிரிவு தகுதிச் சுற்றில் மான்சி ரகுவன்ஷி (117 புள்ளி), தில்லான் ரைசா (112.6), அக்ரிமா கன்வார் (111) முறையே 1, 3, 5வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். அடுத்து நடந்த பைனலில் தில் லான் ரைசா, 51 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.மான்சி (41) வெண்கலம் கைப்பற்றினார்.
இந்தியா இதுவரை 3 தங்கம்,5 வெள்ளி, 3 வெண்கலம் என, 11 பதக்கம் கைப்பற்றிமுதலிடத்தில் நீடிக்கிறது.
0
Leave a Reply