ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடர்பர்மிங்காமில் இன்று பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து பங்கேற்க இருந்தார். சனிக்கிழமை முதல் துபாயில் சிக்கியுள்ள சிந்து, விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் பர்மிங்காம் செல்வதில் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறார். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, தற்போது துபாயில் உள்ள சிந்து விமான போக்குவரத்து மூடப்பட்டதால் , இத்தொடரில் விளையாட வாய்ப்பில்லை.ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி ஆண்கள்ஒற்றையரில் களமிறங்குகின்றனர். இதில் லக்சயா, முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-1' சீனாவின் ஷி யூ கியை சந்திக்கிறார். ஆயுஷ் ஷெட்டி, இந்தோனேஷியாவின் ஆல்வி பர்ஹானை எதிர் கொள்கிறார்.
'மவுன்டைன் வெஸ்ட்' சர்வதேச உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில், பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் கிருஷ்ணா ஜெயசங்கர் மேனன் பங்கேற்றார். முதல் வாய்ப்பில் 16.30 மீ., எறிந்த கிருஷ்ணா, அடுத்த இரு வாய்ப்பு களை வீணடித்தார். மூன்றாவது, 4வது வாய்ப் புகளில் முறையே 16.27, 16.64 மீ., எறிந்த இவர், கடைசி வாய்ப்பில் அதிக பட்சமாக 17.09 5., எறிந்தார். ஒட்டுமொத்த மாக 2வது இடம் பிடித்த கிருஷ்ணா, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். சொந்த தேசிய சாதனையை முறியடித்த கிருஷ்ணா தமிழகத்தை சேர்ந்தவர். அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் கடந்த மாதம் நடந்த போட்டி யில் 16.83 மீ., எறிந்து,வெண்கலப் பதக்கத்துடன் தேசிய சாதனை படைத்திருந்தார்.தங்கப்பதக்கத்தை அமெரிக்க வீராங்கனை மகாய்லா லாங் (17.69 மீ.,) வென்றார். எரின் பிரவுன் (15.34 மீ.,) மற்றொரு அமெரிக்க வீராங்கனை வெண்கலம் கைப்பற்றினார்.
மார்ச் 2-இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன்நேற்று, ஒடிசாவின் புவனேஸ்வரில் நடந்த லீக் போட்டியில் சென்னை ஒடிசா, அணிகள் மோதின..கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இரு அணிகளுக்கும் தலாஒரு புள்ளி வழங்கப்பட்டது.சென்னைஅணி இதுவரை விளையாடிய 3 போட்டியில்,ஒரு 'டிரா', 2 தோல்வி என ஒரு புள்ளியுடன் 11வது இடத்தில் உள்ளது. ஒடிசா அணி இரண்டாவது 'டிரா'வை பதிவு செய்து 2 புள்ளிகளுடன் 9வது இடத்தில் நீடிக்கிறது.
பிராகு செஸ் தொடர் மாஸ்டர்ஸ் பிரிவில், செக்குடியரசில், இந்தியாவின் குகேஷ், அரவிந்த் சிதம்பரம் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர்.இந்தியாவின் குகேஷ்,செக்குடியரசின் டேவிட் நவரா நான்காவது சுற்றில் மோதினர். 72வது நகர்த் தலில் 'டிரா' ஆனது.இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் ஜெர் மனியின் வின்சன்ட் கீமர் மற்றொரு போட்டியில் மோதிஅரவிந்த் 29வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். ஸ்பெயினின் டேவிட் ஆன்டன் ,உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் அப்துசாட் டோரோவ் , மோதிய போட்டி 41 வது நகர்த்தலில் டிரா ஆனது.நெதர்லாந்தின் ஜோர் டன் வான் பாரெஸ்ட் (3.0 முதலிடத்தில் புள்ளி)நான்கு சுற்றுகளின் முடிவில் உள்ளார். அடுத்த 2 இடங்களை தலா 2.5 புள்ளிகளுடன்நாடிர்பெக்அப்துசாட்டோரோவ், டேவிட்நவரா, பகிர்ந்துகொண்டுள்ளனர். குகேஷ், அரவிந்த்உள்ளிட்ட 4 பேர், தலா 1.5 புள்ளிகளுடன் 7வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்திய பெண்கள் அணி ,மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ,185 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணி 3-0 என, தொடரை முழுமையாக கைப்பற்றியது., ஹோபர்ட் நகரில் 3வது போட்டி நேற்று, நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 'பீல் டிங்' தேர்வு செய்தார்.ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 409ரன் எடுத்தது. இந்திய அணி 45.1ஓவரில் 224 ரன்னுக்கு ' ஆல் - அவுட் டாகி தோல்வியடைந்தது.
இந்தியா, இலங்கை யில் 10வது 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. 'சூப் பர்-8 போட்டியில் (பிரிவு-1) நேற்று கொல் கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதின. 'டாஸ்' வென்ற இந் திய கேப்டன் சூர்யகுமார், 'பவுலிங்' தேர்வு செய்தார்.வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் வலுவான அடித்தளம் அமைத்தனர். முதல் விக் கெட்டுக்கு 53 பந்தில் 68 ரன் சேர்த்தனர்.வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 195/4 ரன் எடுத்தது.இந்திய அணி 19.2 ஓவரில் 199/8 ரன் எடுத்து வெற்றிபெற்றது.ஆட்டநாயகன் விருதை சாம்சன் வென்றார்.'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' போட்டியில் வென்றது.'டி -20' உலக கோப்பை தொடருக்கான 'சூப்பர்-8' (பிரிவு - 1) போட்டியில், தென் ஆப் ரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று மோதின. அரையிறுதிக்கு முன்னேறியதென் ஆப்ரிக்கா அணி ,ஜிம்பாப்வேஅரையிறுதி வாய்ப்பை இழந்ததால், இப்போட்டிக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஜிம் பாப்வே அணிக்கு ரியான் பர்ல் (5), டோனி முன் யோங்கா (2) சொற்ப ரன் னில் அவுட்டாகினர். ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட் டுக்கு 153 ரன் எடுத்தது.தென் ஆப்ரிக்க அணி 17.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 154 ரன் எடுத்து வெற்றி பெற்றது..ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா, ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
'டி-20' உலக கோப்பை தொடருக்கான, இலங்கையின் கொழும்புவில் நேற்று 'சூப்பர் -8' போட்டியில் (பிரிவு 2) ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை சந்தித்தது.'டாஸ்' வென்ற நியூசிலாந்து, பேட்டிங் தேர்வு செய்தது, நியூசி லாந்து அணி 20 ஓவரில் 159/7 ரன் மட்டும் எடுத்தது. இங்கிலாந்து அணி 19.3 ஓவரில் 161/6 ரன் எடுத்து வென்றது.
10வது 'T-20' உலக கோப்பை தொடர் இந்தியா, இலங்கை யில். 'பிரிவு -1'ல் முதலிடம் பெற்ற தென் ஆப்ரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறியது. நாளை கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் 'சூப்பர்-8 போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். தோற்கும் அணி வெளியேறும்.
அமெரிக்கா, மெக்சிகோ,கனடாவில் 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. மெக்சிகோவில் மட்டும் 13 போட்டிகள் நடக்க உள்ளன.மெக்சிகோவில், போதை கும்பல் தலைவன் கடந்த வாரம் கொல்லப்பட்ட, பின் நடந்த கலவரத்தில் 70க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.மெக்சிகோஅதிபர்கிளாடியாஷெய்ன்பம்கூறுகையில்,"உலககோப்பைகால்பந்துதொடரை, திட்டமிட்டபடிவெற்றிகரமாக நடத்துவோம் என்றார்.
சர்வதேச செஸ் தொடர் செக் குடியரசின் பிராகு நகரில் மாஸ்டர்ஸ் பிரிவில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், இத்தொடரின் நடப்பு சாம்பியன் அரவிந்த் சிதம்பரம் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். அரவிந்த் சிதம்பரம் இரண்டாவது சுற்றில் ,அமெரிக்காவின் ஹன்ஸ் நைமானை எதிர்கொண்டார். அரவிந்த் சிதம்பரம், 28 நகர்த்தலில் பின்தங்கி,பின் சிறப்பாக செயல்பட்ட அரவிந்த், 53 நகர்த்தலில் வெற்றி பெற்றார்.