இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில், புதுச்சேரியில் 'ஒன் டே' டிராபி எலைட் தொடர் 23 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான , நடந்த போட்டியில் தமிழகம், ஹரியானா அணிகள் மோதின. முதலில் கலமிறங்கிய ஹரியானா அணி 50 ஓவரில் 226/9 ரன் மட்டும் எடுத்தது. தமிழக அணி 45.2 ஓவரில் 227/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது.விதர்பா, ஜார்க்கண்ட்டை முதல் இரு போட்டியில் வென்ற தமிழகஅணி, இத் தொடரில் ஹரியானாவை வென்றது.
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் ,சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், வெளியானது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, பேட்டர் தரவரிசையில் 790 புள்ளிகளுடன் தொடர்ந்து 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார். இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (652) 8வது இடத்தில் உள்ளார். ஜெமிமா (635) 12வது இடத்தில் உள்ளார்.
பெல்ஜியம், நெதர்லாந்தில் வரும் ஆக. 14-30ல் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான உலக கோப்பை தொடர், நடக்க உள்ளது.இந்தியாவின் ஐதராபாத்தில் இதற்கான தகுதிச் சுற்றில் 'டாப்-3' மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இடம் பெறும் அணிகள் 'உலக' தொடருக்கு தகுதி பெறலாம். இந்திய ஸ்காட்லாந்து, உருகுவே, வேல்ஸ் அணிகளுடன் ,இந்திய அணி 'பி' பிரிவில், இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி 4-0 என உருகுவேயை வென்றது. இந்திய அணி, இன்று மூன்றாவதுகடைசி போட்டியில், வேல்சை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் 'டிரா' செய்தால், புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 'டாப்-2' இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறலாம்.
10வது 'T-20' உலக கோப்பை ஆமதாபாத்தில் நடந்த பைனலில் நியூசிலாந்தை, இந்திய அணி வென்றது. சொந்த மண்ணில் 'டி-20' உலக கோப்பைகைப்பற்றிய முதல் அணி, தொடர்ந்து 2 கோப்பை (2024, 2026), மூன்று சாதனைகள் படைத்தது. டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ .131 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.உலக கோப்பை (50 ஓவர்) வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ. 51 கோடி தான் பரிசு வழங்கப்பட்டது. ஆண்கள் அணியுடன் ஒப்பிடுகையில் ரூ.80 கோடி குறைவு. பி.சி.சி.ஐ., பார பட்சம் காட்டுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 21வது சீசன் ஆஸ்திரேலியாவில், இன்றுநடக்கவுள்ள லீக் போட்டியில் இந்தியா, சீன தைபே அணிகள் மோதுகின்றன. முதலிரண்டு போட் டியில் வியட்நாம், ஜப்பானிடம் தோல்வியடைந்த இந்தியா, வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முன்னாள் இந்திய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன்,இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக, நியமிக் கப்பட்டார். பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடருக்கான தகுதிச் சுற்று போட்டியில் ஐதராபாத்தில்,இந்தியா, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்திய அணிக்கு நவ்னீத் கவுர், சுனேலிதா தலா ஒரு கோல் அடித்தனர். இப்போட்டி 2-2 என, 'டிரா' ஆனது. இந்திய வீராங்கனை சிந்து , சுவிட்சர்லாந்தில் இன்று துவங்கும் சுவிஸ் ஓபன் பாட் மின்டன் தொடரில் இருந்து விலகினார். ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில்டில்லியில் பஞ்சாப், வட கிழக்கு யுனைடெட் அணிகள் மோதி,1-1 என 'டிரா' ஆனது.
ஆண்களுக்கான ஏ.டி.பி., பரிபாஸ் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில், இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் ,இந்தியாவின் யூகி பாம்ப்ரி,சுவீடனின் ஆன்ட்ரி கோரன்சன் ஜோடி, பிரான்சின் பேப் ரைஸ் மார்டின், நெதர்லாந்தின் டேவிட் பெல் ஜோடியை சந்தித்தது. இந்தியா , சுவீடன் ஜோடி, முதல் செட்டை 6-1 எனக் கைப்பற்றி,, 2வது செட்டை 6-3 என வென்றது. பாம்ப்ரி, கோரன்சன் ஜோடி 6-1, 6-3 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறியது.
நியூசவுத் வேல்ஸ் ஸ்டேட் ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில்ஆண்களுக்கான 200 மீ 'பேக்ஸ்டிரோக்' பிரிவில் இந்தியாவின் ரிஷாப் தாஸ், தேசிய சாதனையுடன் வெண்கலம் வென்றிருந்தார். நேற்று, 100 மீ., 'பேக்ஸ்டி ரோக்' பிரிவு போட்டி நடந்தது. ரிஷாப் தாஸ் மீண்டும். 55.51 வினாடி நேரத்தில் கடந்து மூன்றாவது இடம் பிடிக்க, வெண்கலப் பதக்கம் வென்றார்.
டபிள்யு.டி.ஏ., பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில், 3வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா 6-4, 6-1 என ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனை வென்றார்..அமெரிக்காவின் கோகோ காப் (2-6,0-2) பாதியில் விலக, பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா ஈலா வெற்றி பெற்றார்..
இந்தியா, நியூசிலாந்து அணிகள்ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்த பைனலில் மோதின. நியூசிலாந்து அணியில் மெக்கோன்கிக்கு பதிலாக ஜேக்கப் டபி இடம் பெற்றார். 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர்,பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணி 20 ஓவரில் 255/5 ரன் குவித்தது. நியூசிலாந்து அணி 19 ஓவரில் 159 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. 'நடப்பு சாம்பியனாக' கள மிறங்கிய இந்திய அணி, இமாலய வெற்றியுடன் மீண்டும் கோப்பை வென்றது.
ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் கர்நாடகாவின் கலபுராகி நகரில் ,ஒற்றையர் பிரிவு பைனலில் இந்திய வீராங்கனைகள் வைஷ்ணவி ('நம்பர்-468'), அன்கிதா ரெய்னா ('நம்பர் -681) ,முதல்செட்டில் இருவரும், 6-6 என ஆனது. இதையடுத்து நடந்த 'டை பிரேக்கரில்' வைஷ்ணவி ஆதிக்கம் செலுத்தினார். முதல்செட்டை 7-6 என கைப்பற்றினார்.இரண்டாவது செட்டிலும் 4-4 என நீடித்தது. வைஷ்ணவி அடுத்த இரு 'கேம்களை' கைப்பற்றி, 6-4 என செட்டை வென்றார். ஆட்ட முடிவில்வைஷ்ணவி 7-6,6-4 என்றநேர்செட்டில் வெற்றிபெற்றுசாம்பியன்ஆனார்.வைஷ்ணவிக்கு ரூ. 4.5 லட்சம், அன்கிதாவுக்கு ரூ. 2.42 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.