25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


ஆர்கானிக் - இயற்கை விவசாயம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆர்கானிக் - இயற்கை விவசாயம்

எந்த ஒரு ரசாயனமும் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் செய்யப்படுவதுதான் ஆர்கானிக் விவசாயம். இதில் இயற்கையான உரங்கள், இயற்கையான பூச்சிக்கொல்லிகள் போன்றவை மட்டுமே பயன்படுத்தப்படும். எந்த ஒரு ரசாயனமும் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் செய்யப்படுவதுதான் ஆர்கானிக் விவசாயம். இதில் இயற்கையான உரங்கள், இயற்கையான பூச்சிக்கொல்லிகள் போன்றவை மட்டுமே பயன்படுத்தப்படும்.ரசாயனங்கள் பயன்படுத்துவதால், உடல் ஆரோக்கியத்திற்காக உண்ணும் உணவே நம் உடல் நலனிற்கு கேடாக மாறிவிடுகிறது. இதைத் தவிர்த்து இயற்கையான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி இயற்கையான முறையில் செய்வதே ஆர்கானிக் விவசாயம்.

இன்று ஆர்கானிக் விவசாயத்தை ஊக்குவிப்பது முக்கியமாகிவிட்டது. ஏனெனில், இன்று வணிக நோக்குடன் உற்பத்தியை அதிகரிக்க, ரசாயனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படி விளைவிக்கப்படும் காய்கறிகள் அல்லது பழங்களை சாப்பிடும்போது உடல்நலன் பாதிக்கப்படுகிறது.இயற்கை விவசாய முறையில் மாட்டு சாணம், மண்புழு உரம் போன்ற இயற்கையான உரங்கள் பயன்படுத்தப்படும். இதனால் மண் வளம் பாதுகாக்கப்படுவதுடன் உற்பத்தியும் அதிகரிக்கும். இப்படி இயற்கையான முறையில் உரமிட்டு உற்பத்தியாகும் விளைபொருட்களை சாப்பிடும்போது,உடலுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படாது. அத்துடன் மண்ணிற்கும் நைட்ரஜன், பாஸ்ஃபரஸ், மெக்னீசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

உரமிடுவதற்கு எப்படி ரசாயனங்களைத் தவிர்த்து இயற்கை உரங்களைப் பயன்படுத்துகிறோமோ அதேபோல் வேப்பெண்ணெய், கோமியம், மஞ்சள், சாம்பல், பூண்டு, துளசி போன்ற இயற்கையான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தவேண்டும். ரசாயன பயன்பாட்டுடன்கூடிய விவசாயத்துடன் ஒப்பிடுகையில் ஆர்கானிக் விளைச்சல் விலையுயர்ந்தவையாகவே இருக்கும். இதற்குக் காரணம் ரசாயன உரங்களைக் காட்டிலும் இயற்கை உரங்கள் விலையுயர்ந்தவை. ஆர்கானிக் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மாட்டு சாணம், மண்புழு உரம் போன்றவற்றை அதிக விலை கொடுத்து வாங்கவேண்டியிருக்கிறது. இதன் காரணமாகவே ஆர்கானிக் விளைச்சல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News