சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
சேத்துார் அடுத்த தேவதானம், கோவிலுார் சுற்றுப் பகுதியில் சாஸ்தா கோயில் நீர் தேக்கத்தை ஆதாரமாக வைத்து 10க்கும் மேற் பட்ட கண்மாய் ஒட்டி ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் விவசாயம் நடந்து வருகிறது.அறுவடை பணிகள் தொடங்கியதால் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என விவசாயிகள் சார்பில், அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கோவிலுார், தேவதானம் பகுதியில் மண்டல அதிகாரி சென்னை உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் முன்னிலையில், நேற்று நேரடி நெல் கொள்முதல் தொடங்கியது.
0
Leave a Reply