25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >> ராஜபாளையம் நகராட்சியில் இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி  வரும் நகராட்சியின் அனைத்து துறையினர். >> ராஜபாளையத்தில்  மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே . >> சொக்கர் கோயிலில்  மாசி மக பிரம்மோற்ஸவ தேர்த் திருவிழா >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா >> இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம் >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் . . >> ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை, மேக மலை புலிகள் காப்பகத்தில்எண்ணிக்கை அதிகரித்துள்ள சாம்பல் நிற அணில்கள் >> ராஜபாளையம் முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோட்டில் செக்போஸ்ட் திறப்பு.  >>


உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆரைக்கீரை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆரைக்கீரை

ஆரைக்கீரைகுளிர்ச்சியை உண்டு பண்ணக்கூடியது.மழை மற்றும் குளிர் காலத்தில் தான் இந்த கீரை எங்கும் கிடைக்கும், கோடை காலத்தில் கிடைப்பது அரிது.

நீர் நிலைத்து நிற்கும்  இடத்தில் செழித்து வளரும், கீரையின் ஒரே நரம்பின் உச்சியில், நான்கு இலைகளுடன் காணப்படும்.

பச்சை நிறத்துடன் மெல்லியதாகவும், வட்டமாக இருக்கும், சமைத்தால் புளிப்பு ருசியுள்ளதாக இருக்கும், இதற்கு புளியாரை என்று கூறுவார்கள்.

ஆரைக்கீரை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து30 கிராம் தூளை அரை லிட்டர் நீரில் போட்டு பாதியாக காய்ச்சி, பாலும், பனங்கற்கண்டும் கலந்து காலை, மாலை பருகி வரப் பகுமூத்திரம், அதிதாகம், சிறுநீரில் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.

ஆரைக்கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி  அதிகரிக்கும்.

மன அழுத்தப் பிரச்சினைகள் இருப்போர் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வர பிரச்சினை சரியாகும். மன அழுத்தம்,வலிப்பு நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் ஆராக்கீரை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த கீரையை பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிடலாம், சாம்பார் அல்லது சின்ன வெங்காயம் சேர்த்து பொறியலாகவும் செய்யலாம்'.சிலருக்கு அடிக்கடி அதிக அளவில் சிறுநீர் இறங்கும், இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கட்டுப்பட்டு, சரியான அளவில் வெளியேறும்.

சிலருக்கு ரத்தத்தில் பித்தம் அதிகமாகி அமிலத்தன்மை ஏற்பட்டு பித்த கோளாறுகளை உண்டுபண்ணும், தொடர்ந்து இந்த கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் ரத்த பிரமேகம் நோய் முற்றிலும் குணமாகும்.

பித்த கிறுகிறுப்பு, பித்த வாந்தி, தலைவலி போன்ற பித்த சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் இக்கீரைக்கு உண்டு.

இக்கீரையை உணவில் உட்கொண்டு வர, ரத்த போக்கும், வெள்ளைபாடு நிவர்த்தியாகும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News