25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆகஸ்ட் 6 ஹிரோஷிமா தினம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆகஸ்ட் 6 ஹிரோஷிமா தினம்

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா தலைமையிலான நேச நாட்டுப்படையிடம் சரணடைய மறுத்தது, ஜப்பான். அதை பணிய வைக்க அணுகுண்டு ஆயுதத்தை பயன்படுத்த முடிவு செய்தது அமெரிக்கா.

உலகில், முதன் முதலில் அணுகுண்டு வீசி அதனால் ஏற்படும் அழிவை சோதனை செய்ய விரும்பியது. இதன் வாயிலாக உலகப்போர் உடனே முடிவுக்கு வரும். அதே நேரம் உலக நாடுகளில் அமெரிக்காவின் மதிப்பு உயரும். இவ்வாறு கணக்கு போட்டனர் அமெரிக்க தலைவர்கள்.கிழக்காசிய நாடான ஜப்பானில் உள்ளது ஹிரோஷிமா. உலக வரலாற்றில் மிகத் துயரமான நிகழ்வை சந்தித்தமுதல்நகரம்.இரண்டாம் உலகப் போரின் போது ஆகஸ்ட் 6, 1945ல் இந்த நகர் மீது அணுகுண்டு வீசப்பட்டது. மனித வீபரீதத்தால் அந்த நகரம் உருகுலைந்து போனது.

அங்கு வசித்த,80 ஆயிரம் பேர் உடனடியாக பலியாயினர். இது நகரத்தின் மொத்த மக்கள் தொகையில், 40சதவீதம். நகரில் மூன்றில் இரண்டு பகுதி சிதைந்து அழிந்தது, சின்னாபின்னமானது. பலருக்கு தோல் உரிந்து போனது வாய் இருக்க வேண்டிய இடத்தில் ஓட்டை மட்டுமே தென்பட்டது. கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டோரால் அதன்பின் பேச முடியவில்லை. வெட்டுக்கிளி போல சத்தம் மட்டுமே எழுப்ப முடிந்தது. காயத்துடன் தப்பியோர் கடும் அவதிப்பட்டு இறந்தனர்.

இந்த கொடுரத்தை மக்களுக்கு நினைவு படுத்தும் விதமாக, 'ஹீரோஷிமா தினம்' ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இரங்கல் நிகழ்வுகள், அமைதிப்பேரணிகள், அணு ஆயுத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.அணுகுண்டுக்கு எதிராக ஐப்பான் தலைநகர் டோக்கியோவில், 1964ல் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. அங்கு அமைதியின் சுடர் என்ற பெயரில் அணையா விளக்கு ஏற்றப்பட்டுள்ளது. அணு ஆயுதப் போருக்கு எதிராக மக்களை பாதுகாக்கும் சின்னமாக விளங்குகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News