25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


இணையத்தை கலக்கும் குண்டு பென்குயின்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இணையத்தை கலக்கும் குண்டு பென்குயின்

குழந்தைகள் கொழுகொழு வென இருந்தால் யாருக்குத் தான் பிடிக்காது? கன்னத்தைக் கிள்ளுவதும், கொஞ்சுவதும் என அன்புத் தொல்லை செய்வார்கள். இது மனிதக் குழந்தைகளுக்கு மட்டும் நடப்பதல்ல, விலங்குகளுக்கும் நடக்கும். இப்படித்தான் ஒரு குண்டு பென்குயின் உலகெங்கும் ரசிகர்களைப் பெற்றுள்ளது.

தென் துருவத்தை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே வாழ்பவை பென்குயின்கள். பறக்க முடியாத இந்தப் பறவைகள் இரு கைகளை அசைத்துப்பனியில்நடந்துசெல்வதேஅழகாகத்தான்இருக்கும்.ஆஸ்திரேலியாவின்மெல்போர்ன்நகரில்உள்ளகடல்வாழ்உயிரினங்கள் சரணாலயத்தில் ஜனவரி  30, 2024 அன்று அவகோடா காய் அளவே உள்ள முட்டையிலிருந்து பிறந்தது பென்குயின். பெஸ்டோ எனும் ஒன்பதே மாதங் களில் மடமடவென வளர்ந்து 22.5 கிலோ எடையை அடைந்து விட்டது.

தினமும் 25 மீன்கள் உண்கிறது. பொதுவாக இதன் இனத்தை சேர்ந்த பென்குயின்கள் 18 கிலோ வரையே வளரும். அதன் அதீத எடை காரணமாக மிகவும் பரும னான தோற்றதைப் பெற்றுள்ளது. தவிர பொதுவாகக் குழந்தைப் பருவத்தில் பென்குயின்களுக்கு உடல் முழுக்க முடிகள் நிறைந் திருக்கும். இது மிகச் சிறியவயதிலேயே உயரமாகவும்,பருமனாகவும் வளர்ந்து விட்டதால் பார்ப்பதற்கு "டெடி பியர் " பொம்மை போல் அழகாக உள்ளது.எனவே இதைபார்ப்பதற்கு  பல ரசிகர்கள் சரணாலயத்திற்கு  வருகின்றனர். இன்ஸ்டா, யு டியூப், மீம்ஸ் என  அனைத்திலும் வீடியோ பதிந்து  எழுதி வருகின்றனர். இதனால்  இதற்கு உலகெங்கிலும் ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News