இணையத்தை கலக்கும் குண்டு பென்குயின்
குழந்தைகள் கொழுகொழு வென இருந்தால் யாருக்குத் தான் பிடிக்காது? கன்னத்தைக் கிள்ளுவதும், கொஞ்சுவதும் என அன்புத் தொல்லை செய்வார்கள். இது மனிதக் குழந்தைகளுக்கு மட்டும் நடப்பதல்ல, விலங்குகளுக்கும் நடக்கும். இப்படித்தான் ஒரு குண்டு பென்குயின் உலகெங்கும் ரசிகர்களைப் பெற்றுள்ளது.
தென் துருவத்தை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே வாழ்பவை பென்குயின்கள். பறக்க முடியாத இந்தப் பறவைகள் இரு கைகளை அசைத்துப்பனியில்நடந்துசெல்வதேஅழகாகத்தான்இருக்கும்.ஆஸ்திரேலியாவின்மெல்போர்ன்நகரில்உள்ளகடல்வாழ்உயிரினங்கள் சரணாலயத்தில் ஜனவரி 30, 2024 அன்று அவகோடா காய் அளவே உள்ள முட்டையிலிருந்து பிறந்தது பென்குயின். பெஸ்டோ எனும் ஒன்பதே மாதங் களில் மடமடவென வளர்ந்து 22.5 கிலோ எடையை அடைந்து விட்டது.
தினமும் 25 மீன்கள் உண்கிறது. பொதுவாக இதன் இனத்தை சேர்ந்த பென்குயின்கள் 18 கிலோ வரையே வளரும். அதன் அதீத எடை காரணமாக மிகவும் பரும னான தோற்றதைப் பெற்றுள்ளது. தவிர பொதுவாகக் குழந்தைப் பருவத்தில் பென்குயின்களுக்கு உடல் முழுக்க முடிகள் நிறைந் திருக்கும். இது மிகச் சிறியவயதிலேயே உயரமாகவும்,பருமனாகவும் வளர்ந்து விட்டதால் பார்ப்பதற்கு "டெடி பியர் " பொம்மை போல் அழகாக உள்ளது.எனவே இதைபார்ப்பதற்கு பல ரசிகர்கள் சரணாலயத்திற்கு வருகின்றனர். இன்ஸ்டா, யு டியூப், மீம்ஸ் என அனைத்திலும் வீடியோ பதிந்து எழுதி வருகின்றனர். இதனால் இதற்கு உலகெங்கிலும் ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.
0
Leave a Reply