சாலை விரிவாக்க ஆக்கிரமிப்பு அகற்றுவதில், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு .
ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் சங்கரன்கோவில் மெயின் ரோடு நெருக்கடியால் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறும் வாகனங்களும் தென்காசி ரோட்டில் இருந்து செல்லும் வாகனங்களும் ஒதுங்க வழி இன்றியும், தாமிரபரணி குடிநீர் பாதாள சாக்கடை இணைப்புக் குழாய் தோண்டி பதித்ததினால் பாதிப்பு காரணமாக நெரிசல் ஏற்பட்டு பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
பெரியாதிகுளம் ஓடையில் அகலப்படுத்தும் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோட்டை 7 மீ., இருந்து 10 மீ. பணிக்காக ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டது.ஓடையில் அனுமதி இன்றி போடப் பட்ட 45 பாலங்கள் அகற்ற நோட்டீஸ் வழங்கியும், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆக்கிரமிப்புகள் குறித்து அளவிடு செய்யாமல் பணிகள் நடைபெறுகிறது. இதனால் கண்மாய்க்கு வரும் நீர் வழி பரப்பு பாதிக்கப்படுவதுடன் முறைகேடு நடைபெறுவதாக சந்தேகம் எழுகிறது. வெளிப் படைதன்மை இல்லாததால் விவசாயிகள் பாதிக்கிறோம்.பெரியாதிகுளம் ஓடை பணிகளில் ராஜபாளையம்சங்கரன்கோவில் மெயின் ரோடு விரிவாக்கத்தில், பாரபட்சமாக நடந்து வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
0
Leave a Reply