25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


திருமணத்தை எளிமையாக பதிவிட்டு ரூ.10,000 கோடி நன்கொடை வழங்கிய கவுதம் அதானி   ..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருமணத்தை எளிமையாக பதிவிட்டு ரூ.10,000 கோடி நன்கொடை வழங்கிய கவுதம் அதானி ..

 கவுதம் அதானி இளைய மகனும் ,அதானி ஏர்போர்ட்ஸ் இயக்குநருமான ஜீத் அதானி, வைர வியாபாரி ஜெய்மின் ஷா  மகள் திவாவுக்கும் ,அகமதாபாத்தில் கடந்த 7-ம் தேதி திருமணம் நடந்தது.

இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதள வெளியிட்ட பக்கத்தில் கவுதம் அதானி, 'ஜீத் - திவா திருமணம் பாரம்பரிய முறைப் படி, ஜெயின் மற்றும் குஜராத்தி சமூகங்களின் கலாசாரத்தின்படி திருமண சடங்குகள் ,ஆமதாபாதில் நடந்து முடிந்தது.

இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு என்பதால் அனைவரையும் அழைக்க முடியவில்லை.'இதனால்,மன்னிப்பு கோருகிறேன். அனைவரின் உங்கள் அன்பும், ஆசீர்வாதமும் மணமக்களுக்கு வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், நன்கொடையாக வழங்கப்படும் இந்த பணம், சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் விலையில் மலிவு உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லுாரிகள் அமைக்க செலவிடப்படும்.

'இது தவிர, மலிவு விலையில் உயர்மட்ட கே 12 பள்ளிகள் மற்றும் வேலைவாய்ப்புடன் மேம்பட்ட உலகளாவிய திறன் அகாடமிகளின் வலையமைப்பை அணுகுவதில் கவனம் செலுத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 .திருமணத்தை முன்னிட்டு, பல்வேறு சமூகநலப் பணிகளுக்காக ரூ.10 ஆயிரம் கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார்மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் கட்டுவதற்காக ஆண்டுதோறும் திருமணமான 500 மாற்றுத் திறனாளி பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி ஆகியவை அடங்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News