பெரிய உவர் ஏரி
ஓடிசாவின் கட்டாக் அருகே உள்ள சில்கா ஏரி, உப்பு நீரும், நல்ல நீரும் கலந்துள்ள இந்த ஏரி, இந்தியாவின் பெரிய உவர்நீர் ஏரி என அழைக்கப்படுகிறது. இதன் நீர்பிடிப்பு பரப்பளவு3560 சதுர கி.மீ. இதன் நீளம்64 கி.மீ. அதிகபட்ச ஆழம்13 அடி. தனித்துவமான நீர் அமைப்பால் பல்வேறு கடல் தாவரங்கள், மீன்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த ஏரி மகாநதியின் முகத்துவாரப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தஏரியின் நடுவே நலபன் தீவு உள்ளது. இதன் பரப்பளவு223 சதுர கி.மீ. இது பறவைகள் சரணாலயமாகவும், சுற்றுலாதலமாகவும்
திகழ்கிறது.
0
Leave a Reply