இட்லி மல்லிகைப்பூ போல் இருக்க.....
பருப்பு வேக வைக்கும் போது கொஞ்சம் சீரகம் மஞ்சள் தூள் பெருங்காயம் ஒரு பல் பூண்டு சேர்த்து வேக வைக்கவும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி காய் தக்காளி சேர்த்து வதக்கி சாம்பார் பொடி போட்டு கொதிக்க வைத்து பச்ச வாசனை போன பின் வேக வைத்த பருப்பை போட்டு ஒரு கொதி வந்ததும், கொத்த மல்லி தழை தூவி எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுத்தம்பருப்பு ,வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கி பரிமாறவும் சுவையான சாம்பார் ரெடி
ஆப்பம் மாவு அரைக்கும் போது ஒரு கை சாதம் போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும் முதலில் சாதத்தைபோட்டு அரைத்த பின், அரிசி போட்டு ஆட்டவும் மாவு புளித்த பின் ,ஆப்பம் சுடும் முன், தேங்காய் தண்ணி ஊற்றி கலக்கி சுட்டால் ஆப்பம் மிகவும் சுவையாக இருக்கும்
சப்பாத்தி மாவில் கால் படிக்கு ஒரு வாழைப்பழம், ஒரு கரண்டி தயிர் சிறிதளவு நீர் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி ரொம்ப மிருதுவாக இருக்கும்.
இட்லி மாவில் ஒரு கரண்டி நெய், அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அவித்தால், இட்லி மல்லிகைப்பூ போல் இருக்கும்.
கறிவேப்பிலை கொத்தாக ஈரம் போக காய வைத்து வாணலியில் போட்டு லேசாக வறுத்தெடுத்து பெளடராக்கி கொண்டு உபயோகித்தால் ருசியும் சத்தும்
கூடுதலாக கிடைக்கும்.
0
Leave a Reply