25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ராஜபாளையம் நகரில், வாசிப்பை நேசிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி,சில்வர் பேலஸ் திறப்பு விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் நகரில், வாசிப்பை நேசிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி,சில்வர் பேலஸ் திறப்பு விழா

வாசிப்பை நேசிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராஜபாளையம் ஸ்ரீ ரமண அகடாமி சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளிஆலோசகர் டாக்டர் கு.கணேசன் தலைமை வகித்தார். ஆசிரியை சண்முகப்பிரியா வரவேற்றார்."வாசிப்பை நேசிப்போம்" என்ற தலைப்பில் பட்டி மன்ற பேச்சாளர் உமாசங்கர் மாணவர்களுக்கு அன்றாட வாசிப்பின் அவசியம், நாளிதழ்கள் வார இதழ்கள், புத்தகங்கள், நாவல்கள், வாசிப்பதால் ஏற்படும் மாற்றங்கள், அதனால் வாழ்வில் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார்.வாசிப்பு குறித்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை சுதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் கல்யாணி, துணை முதல்வர் இந்திரா, உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் செய்தனர்.

சில்வர் பேலஸ் திறப்பு விழா

ராஜபாளையம் தென்காசி மெயின் ரோட்டில்  சில்வர் பேலஸ் வெள்ளி பொருட்களுக்கான 6வது ஷோரூம் திறப்பு விழா நடந்தது. புதிய ஷோரூமை டாக்டர் ஜவஹர்லால் குத்து விளக்கேற்றி துவக்கினார்.உரிமையாளர் ஜானகி ராமன் வரவேற்றார்.பங்குதாரர்கள் வெங்கடேஷ், ரமேஷ், சியாம் பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.புதிய ஷோரூமில்அனைத்து வகையான வெள்ளி கொலுசுகள், பாத்திரங்கள், ஆண்டிக் ஜுவல்லரிகள், வெள்ளி கோல்டு பாலிஷ் நகைகள், பூஜை பொருட்கள், சுவாமி விக்கிரஹங்கள், கார்ப்பரேட் கிப்ட், வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப மாடல்களில் தயாரிப்பு, சேமிப்பிற்கான வெள்ளி நாணயம் விற்பனைக்கு உள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News