முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க
கேரட், உருளைக்கிழங்கு, வெள்ளரி, தக்காளி மற்றும் பூசணி போன்ற காய்கறிகளை சிறு துண்டு எடுத்து, மிக்சியில் நன்கு அரைத்து கொள்ளவும்.
பின்பு அவற்றுடன் கொஞ்சம் பயத்தமாவை கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும் இவ்வாறு செய்வதால் முகம் சோர்வடையாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்
மேலும் முகத்தில் இருக்கும் பருக்களை போக்கி மேடு பள்ளத்தை சரிசெய்யும் மேலும் சருமத்திற்கு ஊட்டசத்தையும், நிறத்தையும் அதிகம் அளிக்கிறது.
வாழைப்பழத்தை நன்கு மசித்து அதனுடன் தயிர் மற்றும் கொஞ்சம் தேன் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் ஃபேஷியல் செய்தால், முகம் பொலிவுடனும், மென்மையாகவும் மற்றும் பளபளப்பாகவும் இருக்கும்.
மாம்பழத்தை நன்றாக மசித்து அவற்றில் சிறிது பால் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் ஃபேஷியல் செய்தால், சரும பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும் மேலும் முதுமை தோற்றம் விலகும்.
0
Leave a Reply