குலோப்ஜாமூன் மென்மையாக இருக்க
பீட்ரூட்டை மற்ற காய்களுடன் சேர்த்து சமைக்கும் போது அத கலவையில் இறங்காமளிருக்க வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பீட்ரூட்டை மட்டும் சிறிது நேரம் நன்றாக வதக்கி, பிறகு செய்தால் காய்களின் நிறம் மாறாது.
கட்லெட் செய்ய 'பிரெட் கிரம்ப்ஸ் கிடைக்கவில்லையெனில் ரவையை மிக்சியில் அரைத்து பயன்படுத்தலாம்.
காலிப்பிளவரை அரைவேக்காடாக வேக வைத்து, அதில் சிறிது அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்தூள், உப்பு சேர்த்து, ஊற வைத்து பின் பொரித்து எடுத்தால் எண்ணெய் குடிக்காத காலிபிளவர் சில்லி ரெடி.
உளுத்தம்வடை செய்யும் போது சிறிதளவு இட்லி மாவு சேர்த்துச் செய்தால் வடை சுடும் போது அதிகம் எண்ணெய் குடிக்காததோடு. சுவையும் நன்றாக இருக்கும்.
பாகற்காயை சிறிது நேரம் உப்பு நீரில் ஊறவைத்து பின்னர் சமைத்தால், கசப்பு குறைவாக இருக்கும்
குலோப்ஜாமூன் செய்யும்போது உருண்டை கல் போலாகிவிட்டால் ஜீராவுடன் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் மென்மையாகிவிடும்.
0
Leave a Reply