பருப்பு உருண்டை,பக்கோடாக் குழம்பு
தேவையான பொருட்கள்- பருப்பு உருண்டை தயாரிக்க துவரம்பருப்பு அல்லது கடலைப்பருப்பு 200 கிராம், மிளகாய் 2, நறுக்கிய வெங்காயம் 2 மேஜைக்கரண்டி, கருவேப்பிலை மல்லிச்செடி,
செய்முறை - பருப்பை 1 மணி நேரம் ஊறவைக்கவும். உப்பு சேர்த்து நன்க ஆட்டி. அரிந்த வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை மல்லிச்செடி சேர்த்து நெல்லிக்காய் அளவு உருண்டையாக உருட்டி எண்ணெயில் வடைமாதிரி போட்டு எடுக்கவும். அல்லது இட்லி பாத்திரத்தில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். இந்தப்பருப்பு உருண்டைகளை புளிக்குழம்பாகவோ, அல்லது தேங்காய்ப்பால் உற்றி வைக்கம் குழம்பாகவோ வைக்கலாம். புளிக்குழம்பாக வைப்பதாயின், சிறுபுளி விட்டு மசால் கலந்து புளிக்குழம்பைத் தாளிதம் செய்து நன்கு கொதித்து வந்தபின், பருப்பு உருண்டைகளையும் சேர்து சிறுதீயில் வைத்திருந்து இறக்கவும். தேங்காய்ப்பால் ஊற்றி குழம்பு வைக்கும்போது தக்காளிக் குழம்பு அல்லது முட்டைக்குழம்பு மாதிரி தயார் செய்து கொண்டு இறக்கம் சமயம் பருப்பு உருண்டைக்களைப் போட்டு இறக்கவும்.
பக்கோடாக் குழம்பு -
செய்முறை -மிக்ஸர் கடையில் பக்கோடா வாங்கி பெரிய துண்டுகளாகப் பொறுக்கி எடுக்கவும். பருப்பு உருண்டைகளுக்குப் பதிலாக இந்த பக்கோடாவைப் போட்டு புளிக்குழம்பாக சிறு புளி ஊற்றிக் குழம்பு தயாரிக்கலாம். அல்லது தேங்காய்ப் பால் ஊற்றியும் குழம்பு தயார் செய்யலாம்.
0
Leave a Reply