25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


மக்களை நேசித்த மகராசி கமலா நேரு,
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மக்களை நேசித்த மகராசி கமலா நேரு,

37 வயது வரை தான் வாழ்வு வாய்த்தது இந்த அன்பு மனம் கொண்ட பெண்ணிற்கு. இன்னும் சில வருடங்களாவது காலம் கருணை காட்டியிருக்கலாம்.கமலா நேரு, உடல்நலம் நலிவுற்றவர். எனினும் மனநலனுக்கோ உள்ள உறுதிக்கோ எக்குறையும் இல்லை.உயர் சிகிச்சைக்காக வெளிநாடு கிளம்பும் முன் , காந்தியைச் சந்தித்து ஒரு வாக்குறுதியைப் பெறுகிறார். தான் திரும்பி வர மாட்டோம் என்று அவர் உள் மனதின் குரல் சொல்லியிருக்கலாம்.

சுயராஜ் பவனில் , ஒரு சிறிய மருந்தகத்தைக் கமலா நேரு தொடங்கியிருந்தார். அதை மருத்துவமனையாக்கி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்பது அவர் கனவு. எனவே, கிளம்பும் முன் ,, தான் ஒரு வேளை வராமல் போனாலும் அதை மருத்துவமனையாக மாற்றி விட வேண்டும் என்ற சொல்லுறுதியைக் காந்தியிடம் கேட்டுப் பெற்ற பிறகே சிகிச்சைக்குக் கிளம்புகிறார். காந்தியும் தன் சக்திக்கு உட்பட்டு அதை நிறைவேற்றுவதாக வாக்களிக்கிறார்.

1939 பிப்ரவரி 19 ஆம் தேதி அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது காந்தியே அதை முன்னின்று நடத்தினார்.அது குறித்து மனதைத் தொடும் அழகான குறிப்பையும் காந்தி ஹரிஜன் இதழில் எழுதினார். Woman of spritual beauty என்று.எவ்வளவு பெரிய மருத்துவமனை. இப்படியும் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News