தலை முடி நன்கு காடு போல செழித்து வளர.....
வெந்தயம் 2 ஸ்பூன்... செம்பருத்தி இலைகள் 10, நெல்லிக்காய் 10,கருவேப்பிலை 2 கைப்பிடி அளவு இந்த நான்கையும் நன்றாக அரைத்து- 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில்போட்டு காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்...தினமும் தேங்காய் எண்ணெய்க்குபதிலாக இந்த எண்ணையை தலையில் தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்து வந்தால் முடி கொட்டுவது உதிரவது நின்று முடி வளர்ச்சி அபரிதமாக இருக்கும்.
வேம்பாளம் பட்டைநாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) 25கிராம், தேங்காய் எண்ணெய் 1.80கிராம். தேங்காய் எண்ணெயில் வேம்பாளம் பட்டையை போட்டு ஊற வைத்தால், சிவப்பாக கலர் மாறும். வடிக்கட்டிவைத்துக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெயை தினமும் காலையில் தலையில் எண்ணெய் தேய்ப்பது போல் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முடி கொட்டுவது பொடுகு தொல்லை நீங்கும். தலை முடி நன்கு காடு போல செழித்து வளரும் , தலைச் சூடும் தணியும்.
0
Leave a Reply