தலைமுடி நன்றாக வளர இயற்கையான ஷாம்பூ
நன்றாகதலைமுடி வளர, ஒரு பங்கு சீயக்காய், 1/4 பங்கு வெந்தயம், 1/2 பங்கு பச்சைப் பயிர், புங்கங்காய் ஒரு கைப்பிடி அளவு ஆகியவற்றை நன்றாக ஊறவைத்து பின்பு மிக்சியில் போட்டு அரைத்து கூந்தல் ஷாம்பாக பயன்படுத்தலாம்.ரசாயனம் இல்லாத இயற்கையான முறையில் பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வதை கட்டுப்படுத்தி, முடி வளர ஆரம்பிக்கும்.
காயவைத்த செம்பருத்தி பூ ,ஆலமரத்தின் வேரைப்பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலைக்கு தேய்த்து வந்தால் கூந்தல் கருமையாக வளரும்.வெங்காயத்தையும், முட்டைகோசையும் பொடிப்பொடியாக நறுக்கி இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலை செம்பு பாத்திரத்தில் வைத்து சிறிது யூடிகோலன் சேர்த்தால்வெங்காயம் வாசனை நீங்கிவிடும்.இந்த சாறுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து தலைமுடியின் வேர்ப்பகுதியில் நன்றாக மசாஜ் செய்து சீயக்காய் பொடி போட்டு தலை குளித்து வந்தால் முடி பளபளப்பாகவும், மிகவும் மென்மையாகவும் காணப்படும்.
0
Leave a Reply